''பட்டாம் பூச்சி விருது''


எனக்கு இந்த பட்டாம்பூச்சி விருது கொடுத்த
அமிர்த வர்ஷினி அம்மா வுக்கு
ரொம்ப நன்றி ! எனக்கு முதன் முதலா பின்னுட்டம்
போட்டது அவங்கதான்.அரைகுறையா கணினி
அறிவை வைச்சுகிட்டு நாமளும் ஏதும் எழுதலாமேன்னு
ஒருபதிவ போட்டுட்டு யாராவது பின்னுட்டம்
போடமாட்டாங்களா?அப்படின்னு ஏக்கமா பார்த்துகிட்டு
இருந்தப்போ அவங்கதான் முதல்ல பின்னுட்டம்
போட்டு உற்சாக படுத்தினது.அப்புறம் பிலாக்
சம்பந்தமா சில விசயங்களுக்கு உதவி பண்ணினது
புழுதிக்காடு சிம்பா அவருக்கும் நன்றி சொல்லணும்.

அப்புறம் இந்த விருதின் ரூல்ஸ் படி ஏழு பேருக்கு
கொடுக்கணுமாம் நான் கொடுக்க நெனைக்கிற சிலர்
முன்னாடியே வாங்கிட்டாங்க! ஏற்கனவே
வாங்கினவங்களுக்கு மறுபடியும் கொடுக்க
கூடாதுன்னு ரூல்ஸ் இல்ல அதுனால நான்
அஞ்சு பேருக்கு கொடுக்குறேன்

என் வானம்; அமுதா ;;; இவங்க கவிதை வரிகள்
நினைத்து நினைத்து ரசிக்க வைக்கும்.

///அதிகாலை மலர்ந்த மலரில்
உறங்கும் பனித்துளி போல்
கனவுகளின் இனிய தாக்கத்தில்
புன்னகை உன் முகத்தில் உறங்குகிறது

புன்னகை கலைக்காது உன்
உறக்கத்தை கலைக்க யோசிக்கிறேன்...///

///இறைக்கப் படாத பொருட்கள்
கிழிக்கப் படாத காகிதங்கள்
சிந்தப் படாத வண்ணங்கள்
என
களையிழந்து உள்ளது வீடு///


///மெளனத்தின் ஓசை
செவியில் அறைகிறது///

இதெல்லாம் இவங்க கவிதை வரிகளில் சில
சமீபத்தில இவங்க ''திண்ணை'' கவிதை ரொம்ப டாப்!!

ஆகாய நதி ;;இவங்க பதிவுகளில் ''வெறியர்களின்
வெறித்தனத்திற்கு முற்றுப்புள்ளி எங்கே?''
என்ற இந்த பதிவில்


//அக்காலத்தில் வீரத்தமிழ்த்தாய் ஒருத்தி தன்
இரண்டு வயது மகன் கையில் வாளினைக்
கொடுத்துப் போர்முனைக்கு அனுப்பி
வைத்தாளாம். அத்தகைய தாய்மார்கள்
வாழ்ந்த இந்நாட்டிலே தான் நாமும் வாழ்கிறோம்.
நமக்கும் அதில் பாதி எண்ணமாவது வர வேண்டும்.

குழந்தை பருவத்திலிருந்தே நம் பிள்ளைகளுக்கு
நாட்டுப்பற்றினையும் வீரத்தையும் சேர்த்து
ஊட்டிவிட வேண்டும். நம் பிள்ளைகள் இராணுவத்தை
எதிர்காலமாக தேர்ந்தெடுத்தால் பாசத்தில் தடுக்காமல்
ஊக்கப்படுத்த வேண்டும்.//

என்ற இந்த வார்த்தைகள் மிக சிறப்பானவை.


புழுதிக்காடு சிம்பா; இவரது எழுத்தில்,
அவலங்களை சுட்டி காட்டுவதில் ''வாள் வீச்சு''
இருக்கும் இவர் நெறைய எழுத வேண்டும்

ரம்யா; இப்போது வலை பதிவுகளில் நகைச்சுவையில்
கலக்குவது இவர்தான் கலக்கல் பதிவர்!. நடிகர் வடிவேலுக்கு
இவர் ஸ்கிரிப்ட் எழுதலாம். இவரை வடிவேலுவுக்கு
தெரியாமல் இருப்பது வடிவேலுவின் துரதிஷ்டம்.

அதிரை ஜமால் ; பறந்து பறந்து பின்னுட்டம் போடுபவர்
பட்டாம் பூச்சி போல அதற்க்காக இவருக்கு இந்த விருது.
>

பழைய நெனப்பு

அமிர்த வர்ஷினி அம்மா ஒரு பதிவு போட்டு இருக்காங்க
பணத்தின் ருசி அப்படின்னு. அத படிச்சோன நமக்கும்
பழைய நெனப்பு வந்துடுச்சிஎன்ன பதிவு போடலாம்ன்னு
சரக்கு இல்லாம முழிச்சிகிட்டு இருந்தப்போ
நல்ல மேட்டர் மாட்டிகிச்சு.

ஆமாங்க! ஊருல வேப்பங்கொட்டை பொறுக்கி
கிலோ ஒரு ரூபாய்க்கு எங்க ஊரு எஸ் எஸ் பி மில்லுல
வித்துபுட்டு, எங்க ஊரு ஐயப்பா தேட்டர்ல
அம்பது காசு டிக்கடுல
(ஆமா! பெஞ்சு அம்பது காசு,பேக் பெஞ்சு எழுவத்தி அஞ்சு காசு,
சேர் ஒரு ரூவா! அப்போ நெனைச்சுக்குவேன்
என்னிக்காவது ஒருநாள் ஒரு ரூவா சேர் டிக்கடுல
உக்காந்து படம் பாக்கணும்)
மூட்ட பூச்சி கடியோட 'தாய் மீது சத்தியம்'படம் பார்த்த
அந்த ''எபெக்ட்'' இப்போ இங்க ''சத்யம்'' லயும் ''அபிராமி'' லயும்
இருக்குற'' DTS '' எபெக்ட்'' டுக்கு இல்லையே ?

என்ன பாத்து எங்கம்மா அடிக்கடி சொல்லுற வார்த்தை!
''நாய்க்கு வேலையும் இல்லையாம் அதுபோல
அலைச்சலும் இல்லையாம்''ஊரெல்லாம் வெயில்ல
சுத்திட்டு பசியோட வீட்டுக்கு வந்து எங்கம்மா போடுற
ஒரு சட்டி பழையது அதுக்கு தொட்டுக்க நார்த்தங்கா ஊறுகா,
உப்புல ஊறவைச்ச பச்ச மாங்கா,கொத்தவரங்கா வத்தல்.
அந்த பழைய சோறு கொடுத்த அந்த நிறைவான சுவை
இப்போ எத தின்னாலும் கிடைக்கலையே?

தீவாளிக்கு பத்துநாள் முன்னாடில இருந்து கிடைக்கிற
காசுல கொஞ்ச,கொஞ்சமா வெடியும் மத்தாப்புமா
வாங்கி சேர்த்து தீவாளிக்கு முதநாள் கண்ணு முழிச்சு
கொளுத்தி கொண்டாடுன அந்த தீவாளி எங்க ?


பொங்கல் நேரத்துல பள்ளிக்கூடம் போகும்போது
எந்த கடைல நல்ல எட்டி எட்டி கரனை இருக்கோ,
அந்த கடைலதான் கரும்பு வாங்கனும்னு
முன்னாடியே பார்த்து வைச்சுக்குவோமே
அந்த பொங்கலும் காணா போச்சே ?


ஆனா! ஆனா!

இப்போ, கொஞ்ச நாளா நான் தொலைச்ச அந்த தீவாளியும்,
பொங்கலும் என் புள்ளைங்க முகத்துல தெரியுதே!
தீவாளிக்கும், பொங்கலுக்கும் புள்ளைங்க பழைய
நெனப்ப கொண்டு வருதே! அப்போ கெடைச்ச
சந்தோசம் இப்போயும் கிடைக்குதே! இது போதுமே !


இப்போ நாம எல்லோரும் கடந்த காலத்த நெனைச்சு
ம்ம்ம்..... அதெல்லாம் ஒருகாலம் அதெல்லாம்
மறுபடி கிடைக்குமா? அப்படின்னு ஒரு ஏக்கமா
நெனைச்சு பாக்குறோமே? ஏன்? வருங்காலத்த
ஒரு பசுமையான காலமா உருவாக்க முயற்சி
பண்ணினா என்ன?

என் பசுமையான எதிர்காலத்துக்கு நான் ஒரு கனவு
வைச்சு இருக்கேன்.ஒரு நூறு தென்ன மரம் இருக்குற
ஒரு தோப்பு, அதுல சின்னதா ஒரு குளம் அதுல மீன்
வளர்த்து தூண்டி போட்டு மீன் புடிக்க.
அப்புறம் இறகு பந்து ஆட ஒரு களம்.
சின்னதா ஒரு தோட்டம் அதுல நெறைய
செடி வளர்க்கணும் மிளகாய் செடி உட்பட.
நடுவுல பம்பு செட்டு இருவது அடி உயரத்துல
இருந்து தண்ணி ஊத்துரதுபோல அருவிபோல
அமைச்சுக்கனும். நேரம் கிடைக்கிறப்போ
அங்க உக்காந்து தண்ணி அடிக்கணும் .
(ராம லட்சுமி அம்மா இந்த வரிய மட்டும் படிக்காதிங்க )
>