நந்ந்ந்ந்தலாலா...!

புற்களை முழ்கடித்து செல்லும் ஒரு நீரோட்டத்தில் பட டைட்டில் துவங்குகிறது .
சற்று நேரத்தில் இளையராஜா என்னும் இசைப்படகில் படம் பயணமாகிறது.படகில் நாமும் ஏறிகொள்கிறோம் . தாயை தேடிசெல்லும் இருவர் நம்முடன் வருகிறார்கள் அந்த அழகிய பயணம்தான் நந்தலாலா....!


வழி நெடுக அழகிய காட்சிகள் ..! அடிக்கடி இளையராஜா இசைக்கு புற்கள் அசைகின்றன..! ஒவ்வொரு காட்சியையும் ஓவியம் தீட்டலாம் ..! எல்லாவற்றிலும் உயிராய் நம் இளையராஜா ...!இளையராஜா ...!. சில நேரங்களில் படம் மவுனமாய் போகிறது அதில் கூட இளையராஜா தெரிகிறார் ...!


தாயை தேடி ஒருவன் வெறுப்போடு செல்கிறான் ..! ஒருவன் பாச ஏக்கத்தோடு செல்கிறான் ...! வெறுப்போடு சென்றவன் பாசத்துடன் திரும்புகிறான் ..!பாசத்தோடு சென்றவன் வெறுப்போடு திரும்புகிறான் ..!


எதோ ஒரு சூழ்நிலையில் குழந்தை பெற்று அதை தன் தாய் வீட்டில் விட்டு விட்டு வேறு வாழ்க்கையில் இருக்கும் ஒரு பெண் .! அவளைத்தான் பாசத்துடன் தேடிபோகிறான் அந்த குழந்தை ..! (அவள் வேறு வாழ்க்கையில் இருப்பதை அறியாமல் ) ஆனால் அவளோ இந்த குழந்தையை சந்திக்க கூட விரும்பவில்லை ...! ஒரு கட்டத்தில் அவள் வேறு வாழ்க்கையில் குழந்தையுடன் இருப்பதை பார்த்து நொந்து திரும்புகிறான். (இந்த இடத்தில் ஏனோ லிவிங் டுகெதர் என்ற வார்த்தை நினைவில் வந்து தொலைக்கிறது)


அழகான விமர்சனங்கள் பலர் எழுதிவிட்டார்கள் எனவே இது போதும். ஒரு மிகசிறந்த ஒரு படத்தை பார்க்க துண்டிய வலையுலக விமர்சகர்களுக்கு நன்றி .!

ex ... கேபிள் சங்கர் மணிஜி




நல்ல வெயிலில் கடும் தாகத்தோடு நடந்து செல்கிறோம் சற்று தொலைவில் சுவையான ஜில்லென்ற குளிர்பான கடை இருக்கிறது. கடும் தாகத்தில் சுவையான குளிர்பானம் குடிப்பது எவ்வளவு சுகம் ...? ஆனால் அங்கே பக்கத்திலேயே பிளாஸ்டிக் குடங்களில் தண்ணீர் இருக்கிறது சிலர் அந்த தண்ணீரை குடித்து தாகத்தை தீர்த்து கொள்கிறார்கள் . தாகத்தில் சுவையான குளிர்பானம் குடிக்கும் அனுபவத்தை அவர்கள் இழந்து விடுகிறார்கள் ..!

அந்த பிளாஸ்டிக் குட தண்ணீரை போன்றது திருட்டு டிவிடி. கலை தாகத்தோடு
நல்ல படங்களை பார்க்க காத்திருப்பவர்களுக்கு இந்த படம் ஒரு சுவையான குளிர்பானம் போன்றது அதை தியேட்டரில் பார்த்து நன்றாக அனுபவியுங்கள்.


...




>