ஆறு வருடம் தொடர்ச்சியாக சபரிமலை பயணம். திருப்பதி மற்றும் அய்யப்பன் கோயில் போல நம்ம ஊரில் ஒன்றும் இல்லையே என நினைத்த போது அந்த குறையை கொஞ்சம் தீர்த்துவைத்த பழனி மலை முருகன். அதனாலேயே பழனி முருகன் நம்ம பேவரைட். மற்றபடி இறைவனுக்கும் எனக்கும் பெரிய தொடர்பு இல்லை. சபரி மலைக்கு போய் வந்தவர்கள் அந்த இடத்தை பற்றி சொன்ன பிரம்மாண்டதினாலேயே சபரிமலை சென்றேன். அந்த அய்யப்ப விரதம்,கட்டுப்பாடு,மலைப்பயணம் எல்லாம் பிடித்து போக அதை தொடர்ந்தேன்.மற்றபடி பெரிய வேண்டுதல் எதும் இல்லை.
இத்தனைவருடவாழ்க்கையில் உண்மையில் இறைவன்என்ற ஒன்று இருப்பதை உணர்ந்து இருக்கிறோமா.?என்று ஒரு. நேர்மையுடன் யோசித்து பார்த்தால்......இல்லை என்று தான் சொல்ல வேண்டி இருக்கின்றது.
அதே சமயம் இறைவன் இல்லவே இல்லை என நினைத்த தருணங்கள் உண்டா..? இப்படி யோசிக்கும் போது இறைவன் இல்லை என நிறைய தடவை முடிவு செய்தது உண்டு.
கும்பகோணம் தீ விபத்து
அப்போது தோன்றியது இதுதான், தீயில் சிக்கிய அந்த குழந்தைகள் எல்லாம் எப்படி அலறி துடித்து இருப்பார்கள்..?
கும்பகோணம் கோயில் நகரமாம் அந்த கோயிலில் இருப்பவை எல்லாம் செவிட்டு சாமிகளா..? இல்லை சாமிகளே இல்லையா..! இல்லை அங்கே இருப்பவை சாமிகளா..?இல்லை சைத்தான்களா..? இப்படித்தான் தோன்றியது..!
பிரார்த்தனைகள் பலிக்குமா..?
பிரார்த்தனைகளும் ஒரு வகை இறை நம்பிக்கைதான் ஒன்று சேர்ந்த பிரார்த்தனைக்கு ஒரு சக்தி இருப்பதாகவும் கண்டிப்பாய் பலன் தரும் எனவும் சொல்லுகிறார்கள். உண்மைதானா..?
ஒன்று சேர்ந்த ஒரு வலிமையான பிரார்த்தனை பற்றி பார்ப்போம்
ஆழ்குழாய் கிணறுகளில் தவறி விழும் குழந்தைகளை பற்றிய செய்தியைதொலைக்காட்சியில்பார்க்கும்போதுநமதுநிலைஎன்ன?அந்தகுழந்தையின்பெற்றோர்களைபோலவேநாமும்துடித்துபோகின்றோம். அந்தகுழந்தையின்மீட்புநடவடிக்கைகளைபரிதவிப்புடன்கவனிக்கின்றோம்அதற்க்குமேலாகபார்க்கும்அனைவருமேபிரார்த்தனைசெய்கிறோமா
ஒரு சிதிலமடைந்த நிலையில் சடலமாகதானே பெரும்பாலும் மீட்கிறார்கள் ..! அப்படியானால் பிரார்த்தனைக்கு என்ன பலம்.?
அந்த குழந்தை எப்படி உயிர் துறக்கிறது இருள்,பயம்,பசி,அம்மா..அம்மா என்ற தேடலுடன் துளி..துளி யாக தன் ஜீவனை பிரிகின்றது..!இப்படி ஒரு கொடுமையை அனுபவித்து மரணிக்கும் அந்த குழந்தையை காக்க முடியவில்லை...!
மிக ..மிக தெளிவாய் உணரலாம் இப்போது இறைவன் என்ற ஒன்று இல்லை என்று..!
ஒரு வேளை இறைவன் இருந்து இதுபோல குழந்தை மரணித்தால் அது இறைவன் அல்ல சாத்தான்...!
கிருஷ்ண பரமாத்மா சொல்லுகிறாராம் நான் எல்லோரையும் ஒரே போலதான் படைத்தேன் அவரவர் செய்யும் வினைக்கு ஏற்ப பலாபலன்களை அனுபவிக்கிறார்கள் என்று. பிறக்கும் போதே மன நலம் குன்றிய நிலையில் பிறந்த இவர்களை படைத்தது யார்..?
பகுத்தறிவு வளர்ப்பதாய் சொல்லும் நாத்திக அமைப்புகளின் தோல்வி..
எல்லா மனிதர்க்குள்ளும் கண்டிப்பாய் ஒரு நாத்திக சிந்தனை இருக்கும். அதை பக்குவமாக வெளிப்படுத்தவைக்கமுடியும்.
ஆனால்..! கடவுளை மறுக்கிறோம்,பகுத்தறிவை வளர்க்கிறோம் என சொல்லிகொண்டு பிரச்சாரம் செய்யும் நாத்திக அமைப்புகள் செய்வது என்ன..? ஒரு காலகட்டத்தில் இவர்கள் செய்த பிரச்சார முறையினாலேயே இந்த அமைப்புகள் சிறுத்து போய் விட்டன.
குடியிருப்பு பகுதிகள்,கோயில் பகுதிகள்,வழிபாட்டு தளங்கள் ஆகிய இடங்களில் நின்று கொண்டு மிகவும் கீழ்தரமான,கொச்சையான,நாலாந்தர மொழியில் இறைவனை விமர்சனம் செய்வார்கள். இவர்கள் பேசும் அந்த ஆபாச மொழியினை கேட்கவே சில விசிலடிச்சான் குஞ்சுகள் இருப்பர்கள். அந்த சிலரை குசி படுத்தி மட்டும் இவர்கள் பிரச்சாரம் செய்வார்கள்.
பார்பனீய எதிர்ப்பு என சொல்லிகொண்டு பிராமண வீட்டு பெண்களை பற்றி இவர்கள் செய்யும் விமர்சனம் ஆபாச,அயோக்கியதனத்தின் உச்சம். கேட்டால் பகுத்தறிவை வளர்த்து,பார்பனீயத்தை எதிர்க்கிறார்களாம்.
என்னதான் நாத்திக சிந்தனை இருந்தாலும் சிலருக்கு இறை நம்பிக்கை இருந்து கொண்டேதான் இருக்கிறது.
ஒரு மனிதனின் வெற்றிக்கு காரணம் தன்னம்பிக்கையும்,தைரியமும்தான் அந்த தன்னம்பிக்கையும் தைரியமும் இறைவன் நம்பிக்கை என்ற ஒரு மாயை மூலம் கிடைத்தால் கிடைத்து விட்டு போகட்டுமே என்றும் நினைக்க தோன்றுகிறது.
அது கொஞ்சம் திகிலான காட்டு பாதை மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதி..!
எல்லாபதிவர்களின்குடும்பத்தினரும்நல்லஅன்யோன்யமாபழகிகலகலன்னுகோயிலுக்குபோயிட்டுதிரும்பிகிட்டுஇருக்கும்போது திடீர்னுஒருநாலைஞ்சுபேருமுகமூடிபோட்டுக்கிட்டுகைலதுப்பாக்கியோடஅவங்களசுத்திவலைசுட்டாங்க..! ம்ம்ம் போட்டு இருக்குற நகைகள் எல்லாம் கழட்டுங்க னு சொல்லவே..!
ம்ம்ம்.. ப்லாக் ல படிக்கும் போதுஒரு மாதிரிதான் இருக்கும் ஆனா நேர்ல பார்க்கும் போதுஎனக்கே கொஞ்சம் பயமாதான் வருது...!
என்னங்க இப்படி மாட்டி உட்டுடீங்க ...! நம்மகிட்ட கவிதை எதும் சொல்லிட போறாங்க குழந்தைகள் எல்லாம் பயந்துறபோராங்க என்ன பண்ணுறது ..!
ம்ம்ம் பயப்படாத கொஞ்சம் அட்ஜெஸ் பண்ணிக்கோ நைட்டுகுள்ள எப்படியும் கிளம்பிடலாம்..!
ஒரு வெற்றி புன்னகையுடன் பெண்பதிவர் திரும்பி வருகிறார் எல்லோரும் புறப்பட தயாராக... பெண் பதிவரின் கணவரை காணோம். தேடி பார்த்தா பக்கத்துல இருக்குர ஒரு கொடுக்காபுளி மரத்துல கைய வைச்சுகிட்டு வானத்த பார்த்த படி நிக்குறார். கண்ணெல்லாம் சிவந்து உணர்ச்சி வசபட்ட நிலையில இருக்கார். பதிவர் எல்லாம் அவர கூட்டி வராங்க .
கொஞ்சதூரம் யாரும் எதுவும் பேசல ஒரு பதிவர் மட்டும் அந்த பெண்பதிவரின் கணவரிடம் மெல்ல பேச்சு கொடுக்கிரார்.
வீட்டுல எல்லாம் எப்படிண்ணே கவிதை எதும்சொல்லிட்டே இருப்பாங்களா..?
ஆமா..சொல்லுவாங்க...!
அவங்க கவிதை உங்களுக்கு புடிக்குமா..?
அதுக்கு அவர் கோவமா ஒரு பார்வை மட்டும் பார்க்குறார்..!
இல்ல....எப்படி சமாளிக்கிறீங்க அதான்கேட்டேன்..!
வீடுநெருங்கவே பெண்பதிவர், பதிவர் மனைவியர் எல்லாம் வீட்டிற்க்கு செல்ல..!
பெண்பதிவரின் கணவர் பதிவர்களை ஒரு கோயில் மண்டபத்திற்குகூட்டிசெல்கிறார்.அங்கே எல்லோரையும்அமர சொல்கிறார்..! கொஞ்சம் கனைத்த படிபேச ஆரம்பிக்கிறார்..!
கவிதைங்கிற பேர்ல அவங்க வீட்டுல எப்ப்டியெல்லம் சித்ரவதை பண்ணுறாங்க தெரியுமா..! என் மனசுல உள்ள பாரத்த சொல்லுறேன்...!
அவர் பட்ட அவஸ்த்தையை,அந்த ரத்த சரித்திரத்தை சிவப்பு கலர்ல சொல்லுரார் கேளுங்க...!
காலைல டிபன் சாப்பிடுறத்துக்குமுன்னாடி எனக்கு ரெண்டு..! ,பசங்களுக்கு ரெண்டு..!
என்ன .. ரெண்டு..?
என்னவா?கவிதைதான் அதும் அந்த கவிதைக்குகருத்துசொல்லிட்டுதான் சாப்பிடவே ஆரம்பிக்கனும் இல்லாட்டி சாப்பாடு கிடைக்காது .!
இதுக்காகவே மதிய சாப்பாட்டுக்கு நான் வீட்டுக்கு போறது இல்ல..! ஆனா அப்படியும் விட மாட்டாங்க சாப்பாடு கொடுத்து அனுப்பும்போது கவிதையும் எழுதி கொடுத்து விடுவாங்க அதுக்கு போன் பண்ணி கருத்து சொல்லனும்..! சாப்பாடு நான் மீதம் வைச்சுட்டா.. ஏன் மாமா சாப்பாடு சரியா சாப்பிடல கவிதை புடிக்கலையான்னு கேள்வி வேற..!
ஐயோ...!
அவங்களுக்குஎப்போ கவிதை வரும்னே தெரியாது..!
சில சமயம் நான் பாத்ரூம் ல குளிச்சுகிட்டுஇருக்கும் போதுவெளில நின்னு கவிதை சொல்லுவாங்க ..! அதும் அந்த கவிதையை கேட்டு பாத்ரூம் ல இருந்தபடியே கைதட்ட சொல்லுவாங்க..என்ன பண்ணுறதுநானும்உள்ள இருந்தபடி கைதட்டுவேன்...!
நைட்டுரெண்டு மணிக்குஎழுப்பிமாமா கவிதை கேளுங்கன்னு சொல்லிஇருக்காங்க தெரியுமா?
அட கொடுமையே..?
ஒரு தடவை அவங்க பாட்டி செத்துத்டாங்க...! இவங்களுக்கு அந்த பாட்டின்னாஉயிரு அங்க சாவுல ரொம்ப அழுதுஆர்பாட்டம் பண்ணிடாங்க.. எனக்கே அப்போரொம்ப பாவமா போச்சு அழுதுகிட்டே என்னைகூப்பிட்டாங்க அழுதுகிட்டுதானே கூப்பிடுறாங்கன்னுநம்பிபோனேன் என்னைதனியா கூட்டிகிட்டு போய் அழுதுகிட்டே முழுசா மூணு கவிதைசொல்லிட்டு அழுதுகிட்டே போய்ட்டாங்க...!
என்னால எவ்வளவுதான் தாங்க முடியும் சொல்லுங்க..? நானும் மனுசன் தானே .. என்னை என்ன இரும்புலையா செஞ்சு இருக்காங்க..?
ஒருரெண்டு நாள்கழிச்சு அவங்க அம்மாவும்,அப்பாவும்வந்தாங்க, வரும் போது கூட ஒருத்தர கூட்டிவந்தாங்க அவருக்குஒருஎண்பது வயசு இருக்கும் நாட்டாம தாத்தா னு சொல்லுவாங்களாம். அவர் பேச்சுக்கு அவங்க ஊரே கட்டுப்படுமாம் அப்படி ஒரு மரியாதை அவருக்கு..! பாவம் நடக்க முடியாம நடந்து வந்தார்..! எல்லோரும் இவங்ககிட்ட எடுத்துசொல்லி நெறைய புத்திமதிசொல்லிகிட்டு இருந்தாங்க, அப்போ,திடீர்னு ’’இறையே எனக்கு ஏன்இச்சோதனைனு’’ சொல்லிசத்தமாஒருகவிதைஆரம்பிச்சாங்க பாருங்க .
..அவ்ளோதான் நடக்க முடியாம வந்த அந்த நாட்டம தாத்தா எந்திரிச்சு ஓடீருக்காரு பாருங்க ஓட்டம் அவர்ஓடி போன அந்த காட்சிஇன்னமும் என் கண்ணுக்குள்ளயே நிக்குது..! ஓடி போன அந்த தாத்தா ஒரு ஷேர் ஆட்டோ புடிச்சு தப்பிச்சு போயிட்டார்.
ஆனா இவங்க கவிதை ய நிறுத்தல அவங்க அப்பா இருக்க்க்கி காதை பொத்திகிட்டார். அவங்க அம்மா தலைலயே அடிச்சுகிறாங்க. நான் மட்டும் ங்ஙே னு உக்காந்து இருக்கேன் வேற என்ன செய்ய..?
அப்படியே ஒரு வாரம் போச்சு இவங்க என் கிட்ட வந்து மாமா நான் இனிமே கவிதை சொல்ல மாட்டேன் அப்படின்னுசொல்ல எனக்கு ஆச்சர்யம், சந்தோசம்தாங்கல..! ஏன் இப்படி ஒரு முடிவுன்னுகேட்டா...அதெல்லாம் கேக்காதீங்க நான் இனி கவிதைசொல்லல அதுக்குதினமும் எனக்கு இருநூரு ரூவா வேணும் னு சொல்லஏன்எதுக்குன்னுகேக்காம நானும் சரின்னுட்டேன்..!
ஒரு அஞ்சு நாள் நல்லா நிம்மதியா போச்சு ஆறாவது நாள்ஒரு பெரியவர் நான் வேலை செய்யுற இடத்துக்குவந்தார் அந்தபெரியவர்மனைவி தினமும் ஆஹா..!அருமை..!பிரமாதம்..! அப்படினுபுலம்புறாங்களாம் என்ன காரணம் னு என் கிட்ட கேக்குறார் அவர் யாருன்னேஎனக்குதெரியல நான் என்னசொல்ல.? அதோடஉங்க வீட்டுல என் மனைவிவேலைக்குசேர்ந்த பிறகுதான்இப்படி புலம்புது அப்படி சொல்ல ..! இவர்ஏதோஅட்ரஸ் மாறிவந்துட்டார்னு நினைசேன் ஆனா விலாசம் என் மனைவி பேருஎல்லாம்சரியா சொல்லுரார் என்ன அப்படின்னுவிசாரிச்சா..?என்ன நடந்ததுதெரியுமா? இவங்கஎன்ன காரியம் செய்ஞ்சு இருக்காங்கபாருங்க..
பக்கத்துல ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனி ல வேலை பார்க்குற ஒரு அம்மாவ கூப்பிட்டுஅங்க கொடுக்குறத விட சம்பளம் அதிகமாதரேன்னுசொல்லி வீட்டுல உக்கார வைச்சு ஹார்லிக்ஸ்,பூஸ்ட் எல்லாம் போட்டுகொடுத்து சம்பளம்கொடுத்து கவிதைசொல்லி இருகாங்கப்பா எங்கயாச்சும் நடக்குமா? இவங்க சொல்லுற கவிதைக்குஎல்லாம் ஆஹா..!அருமை..!!பிரமாதம்...!!!அப்படின்னு மட்டும் சொல்லனுமாம் அந்த அம்மா.. இதான் ஒப்பந்தம் .
அதயே வீட்டுலயும் போய் புலம்பி இருக்கு அந்த அம்மா..!