>
கருவேல மனம்...!
>
மதிப்பிற்குரிய பெண்மணிகள் (பகத் சிங்கின் தாயார்)

ஏன் ? சொல்லுகிறேன் கேளுங்கள் ஆங்கிலேயர்களின் சட்ட சபையில் வெடிகுண்டு வீசிய குற்றத்திற்காக பகத் சிங்கிற்கு மரணதண்டனை விதிக்கிறது ஆங்கில அரசு !!!
அதற்கு பகத்சிங் , உங்களிடம் மன்னிப்பு கேட்டு உயிர் வாழ்வதை விட ,மரணம் அடைவதயே விரும்புகிறேன் என்று சொல்ல ,ஆங்கில அரசுக்கு மகா எரிச்சல் !!
உடனே ,ஆங்கில அரசு அதிகாரிகள் , பகத் சிங்கின் தாயாரிடம் சென்று உன் மகனை மன்னிப்பு கேட்க சொல் அவன் மரண தண்டனையை ரத்து செய்கிறோம் என கேட்கிறார்கள் .
ஒரு மகன் உயிர் வாழ்வதில் எந்த தாய்க்குத்தான் விருப்பம் இருக்காது ?
ஆனால் ?
ஒரு மாவீரனை பெற்றெடுத்த வீரத்தாய் அல்லவா அவள் !
” மன்னிப்புகேட்டு என் மகன்உயிர் வாழ்வதைவிட மரணம் அடையட்டும்”
கோபத்தின் உச்சிக்கு சென்ற அதிகாரிகள் ,சரி அவன் மன்னிப்பு கேட்க வேண்டாம்
நீ மன்னிப்புகேள் , அவனை விடுதலை செய்கிறோம் என கேட்க !
அதற்கும் சற்றும் வளைந்து கொடுக்கவில்லை அந்த வீரத்தாய் !!
மன்னிப்பு கேட்க மறுத்து விடுகிறாள் !!!
தூக்குமேடைக்கு அழைத்து செல்ல படுகிறான் பகத்சிங் ,தூக்கில் போடுவதற்க்காக பகத் சிங் முகத்தை கருப்பு துணியால் மூட முற்படுகிறார்கள் உடனே ,பத்சிங் நான் மரணமடையும் போதும் என் இந்தியாவை பார்த்துக்கொண்டே சாக விரும்புகிறேன் என் முகத்தை மூட வேண்டாம் என கேட்டு கொள்கிறான் ……….
மரண தண்டனை நிறைவேற்ற படுகிறது …. அவன் சொந்த ஊருக்கு அவனுடைய அஸ்தி கொண்டுவர படுகிறது .துக்க வெள்ளத்தில் இருந்த அந்த கிராம தாய்மார்கள் பகத்சிங்கின் அஸ்தியை எடுத்து தங்களுக்கு இப்படி ஒரு பிள்ளை பிறக்க வேண்டும் என பகத்சிங்கின் அஸ்தியை தங்கள் வயிற்றில் பூசி கொண்டார்களாம் ..
( பிள்ளைஎன்று பிறந்தால் பகத்சிங்கின் தாய் போல ஒருதாய்க்கு பிள்ளையாய் பிறக்க வேண்டும் .இல்லைஎன்றால் அவன் அஸ்தியை வயிற்றில் பூசி கொண்டார்களே அந்த தாய்மார்களுக்கு பிள்ளையாய் பிறக்க வேண்டும் )
>
ஒவ்வொரு வாகனத்துக்கும் ஒவ்வொரு விதமான ஹாரன் வேண்டும் ..!!


முன்பு ஒரு சமயம் எங்கள் ஊரில் இரவு நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்த போது ஹாரன் ஒலி கேட்கவே சைடு மிர்ரரில் பார்த்தால் முகப்பு விளக்கு அமைப்பு ஒரு காரை போன்று தோன்றியது . அது அகலமில்லாத சாலை . கார்தானே என்று சாலையை விட்டு இறங்காமல் சாலை ஓரத்தில் சென்றேன் . ஆனால் .! என்னை கடந்து சென்றது ஒரு பேருந்து ..! தடுமாறி போனேன் .அதாவது ஊரில் இருந்து சென்னை செல்லும் அரசு பேருந்து அது . உள்ளூர் பேருந்தாக இருந்தால் பேருந்து முழுவதும் வெளிச்சமாக இருக்கும் சைடு மிர்ரரில் தெரிந்து விடும் . ஆனால் விளக்குகள் அணைக்க பட்ட பேருந்தை சைடு மிர்ரரில் கண்டுகொள்ள முடியவில்லை .

.
>