ஒவ்வொரு வாகனத்துக்கும் ஒவ்வொரு விதமான ஹாரன் வேண்டும் ..!!



சமீபத்தில் சென்னை புழல் பகுதியில் இருந்து அம்பத்தூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டுஇருந்தேன். அகலமான நெடுஞ்சாலை. பின் பக்கத்தில் இருந்து ஒரு வாகனம் வருவதற்கான ஹாரன் கேட்கவே சைடு மிரரில் பார்த்தேன் ஒரு லாரி வந்து கொண்டுஇருந்தது சாலையின் நடுப்பகுதியில் இருந்து ஓரத்திற்கு சென்றேன்.லாரி கடந்து செல்ல எடுத்துகொள்ளும் நேரம் அதன் வேகத்தை பொறுத்து தோராயமாக கணக்கிட முடியும். அதன் படி மீண்டும் சாலையின் நடுப்பகுதிக்கு வர எத்தணிக்கையில் லாரியானது நீண்டுகொண்டே சென்றது.அது சாதாரணலாரி அல்ல கண்டெயினர்களை ஏற்றி செல்லும் அதிக சக்கரங்கள் பொருந்திய நீளமான லாரி.ஆனால் சைடு மிர்ரரில் பார்க்கும்போது சாதாரண லாரி போலவே தோன்றியது.உடனே சுதாரித்து கொண்டேன் . அதேபோல நீளம் அதிகம் கொண்ட பேருந்தும் குழப்பம் ஏற்படுத்துகின்றது .


முன்பு ஒரு சமயம் எங்கள் ஊரில் இரவு நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்த போது ஹாரன் ஒலி கேட்கவே சைடு மிர்ரரில் பார்த்தால் முகப்பு விளக்கு அமைப்பு ஒரு காரை போன்று தோன்றியது . அது அகலமில்லாத சாலை . கார்தானே என்று சாலையை விட்டு இறங்காமல் சாலை ஓரத்தில் சென்றேன் . ஆனால் .! என்னை கடந்து சென்றது ஒரு பேருந்து ..! தடுமாறி போனேன் .அதாவது ஊரில் இருந்து சென்னை செல்லும் அரசு பேருந்து அது . உள்ளூர் பேருந்தாக இருந்தால் பேருந்து முழுவதும் வெளிச்சமாக இருக்கும் சைடு மிர்ரரில் தெரிந்து விடும் . ஆனால் விளக்குகள் அணைக்க பட்ட பேருந்தை சைடு மிர்ரரில் கண்டுகொள்ள முடியவில்லை .



வாகன ஒலி அமைப்பில் திருத்தம் வேண்டும் ..!

இருசக்கர வாகனம் ,முன்று சக்கர வாகனம் , நான்கு சக்கர வாகனம் ,ஆறு சக்கர வாகனம் , பதினாறு சக்கர வாகனம் அதைவிட பெரிய வாகனம் என ஒவ்வொரு வாகனத்துக்கும் ஒரே மாதிரியான ஹாரன் அமைக்க பட வேண்டும் .ஒரு வாகன ஹாரனை வைத்தே அது எந்த மாதிரியான வாகனம் என அறிந்து கொள்ளும் வகையில் ஒலி அமைக்க பட்டால் வாகன ஓட்டிகளுக்கு விபத்தினை தவிர்க்க ஏதுவாக இருக்கும். வித விதமான அலறல் சத்தம் கொண்ட ஒலி அமைப்புகளும் தடை செய்ய பட வேண்டும் .


.

>

மறைக்கப்பட்ட ஆடி மாத ரகசியம்...!

ஆடிமாதம் திருமணம் செய்ய கூடாது என்பதற்கு சொல்ல படுகின்ற காரணங்கள் என்ன ..?

ஆடி மாதம் விவசாயம் துவங்கும் காலம் அப்போது கல்யாணம் கச்சேரி என நேரத்தை செலவிடாமல் விவசாயத்தில் முழு கவனம் கொள்ள வேண்டும் ..!

ஆடியில் திருமணம் செய்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும் சித்திரை கடும் வெய்யில் காலம் அந்த நேரத்தில் குழந்தைக்கு பாதிப்பு வரலாம் ..!

ஜோதிடரீதியான காரணம் ..!

சித்திரை மாதம் பிறந்தவர்களுக்கு ஜாதகத்தில் சூரியன் உச்சத்தில் இருப்பார் . சூரியன் உச்சத்தில் இருக்க பிறந்தவர்களுக்கு தலைமை பதவி கிடைக்க வாய்ப்புகள் அதிகம் (இங்கேதான் கவனிக்க வேண்டும்) . வீட்டில் விரைவில் குடும்ப தலைவர் ஆகிவிடுவாராம் . அதாவது தந்தைக்கு ஆகாது ..!!!
அதனால் ஆடியில் திருமணம் முடிக்கக் கூடாது என அவாள் சொன்னது ..!

ஆனால் அவாள் மட்டும் ஆடியில் திருமணம் செய்து கொள்வார்கள் ..!
அவாள் விவசாயம் செய்ய மாட்டாள் ..! சரி .. சித்திரையில் அவாள் மேல் வெய்யில் அடிக்காதா ..? அவாள் வீட்டு அப்பாக்கள் என்ன சிறப்பு தகப்பன்களா ..?

மற்றவர்களை வேண்டாமென சொல்லிவிட்டு அவர்கள் மட்டும் ஆடியில் திருமணம் செய்ய காரணம் ..!

சூரியன் உச்சத்தில் இருக்க பிறந்தவர்கள் எஸ் , ஐபிஎஸ் பதவிகள் மற்றும் அரசு பதவிகள் மேலும் மற்றவர்களை அடக்கியாளும் பொறுப்புகள் வகிப்பார்கள்.

அதனால் தான் அவாள் மட்டும் தலைமை பதவிகள் வகிக்க வேண்டும் என்ற சூழ்ச்சி எண்ணத்தில் ஜோதிடத்தை காரணம் காட்டி மற்றவர்களை பெரும் பதவிகளுக்கு வரவிடாமல் தடுத்து உள்ளனர். ஒரு பிரபல ஜோதிடரிடம் பேசிக்கொண்டு இருந்த போது இதை சொன்னார் இதில் ஒரு ஆச்சரிய விஷயம் என்னவெனில் அவர்களது ஆட்களை அவரே போட்டு கொடுத்ததுதான்.நானும் என் பங்கிற்கு சில விஷயங்களை ஆராய்ந்த போது அட ஆமாம்ல என தோன்றியது ..!

ஆடிப்பட்டம் தேடி விதை ..! என்பதை இனி ஆடிப்பட்டம் கூடி விதை ..! என்றும் சொல்லலாம்


இந்த பதிவின் மூலம் சொல்ல படுவது யாதெனில் ;- ஆடியில் கூடி சித்திரையில் ஒரு தலைவனை பெற்றெடுக்கும் படி அறிவுத்தபடுகின்றது ..!

ஆடி பிறக்க இன்னும் ஜஸ்ட் அஞ்சு மாசம்தான் இருக்கு ..!

>