பதிவுகள் ஆயிரம்...! நன்றிகள் கோடி.....!



தமிழில் பங்கு வணிகம் வலைத்தளம் இன்று ஆயிரமாவது பதிவை தொட்டு இருக்கின்றது ...! அதுமட்டுமல்ல... ஏழு லட்சம் ஹிட்ஸ் களையும் அடைந்து உள்ளது.தமிழில் பங்குவணிக வாசகர்களாகிய நங்கள் வாழ்த்துகளை சொல்லி , மகிழ்ச்சியினை பகிர்ந்து, ஆசிரியர் திரு .எம் .சரவணக்குமார் அவர்களுக்கு உள்ளபூர்வமான கோடானு கோடி நன்றியினைதெரிவித்து கொள்கின்றோம் ..!

தற்போது உள்ள ஒரு துறை சார்ந்த தமிழ் வலைதளங்களில் ஆயிரம் பதிவைத்தொட்டு ஏழு லட்சம் பார்வையாளர்களை கொண்ட ஒரே வலைத்தளம் இதுவாகத்தான் இருக்கும் . மேலும் , தினசரி வழங்கப்படும் வணிக குறிப்புகள் மூலம் தினம் தோறும் நூற்று கணக்கானோர் பயனடைந்து கொண்டிருக்கின்றோம்.

ஆனந்த விகடனில் தமிழில் பங்குவணிகம் பற்றிய செய்தி வந்தபோது பலர் இந்த தளத்தின் வாசகர்கள் ஆனார்கள். ஆனால்..! எனக்கு எதேச்சை யாக கண்ணில் பட்டது அதுவே எவ்வளவு பெரிய மாற்றத்தை உண்டாக்கி விட்டது..!எனக்கு மட்டுமா ..? என்னைப்போல எத்தனையோபேர் பலன் அடைந்து உள்ளனர் ..!

திரு .எம் .சரவணக்குமார்

இவர்தான் எங்கள் நாயகர்...! தமிழில் பங்கு வணிகம் மூலம் தினசரி குறிப்புகள் வழங்குவதோடு மட்டும் அல்லாமல் பைசா பவர் என்னும் தளம் மூலம் சாட் ரூம் அமைத்து தொழில் நுட்பத்தினை விளக்கமாய் விளக்கியவர். எத்தனை எத்தனை ஆன் லைன் வகுப்புகள் ...? பங்கு சந்தை வரை படங்கள்.. அவற்றை கையாளும் முறை..இவரே கண்டுபிடித்த பிரத்யோக அமைப்புகள்..! எவ்வளவு பலன் அடைந்து இருக்கின்றோம்.சிறுபிள்ளைதனமாக கேட்கும்கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக பதில் அளித்து இருக்கின்றார். பங்கு சந்தை என்னும் கடலில் ஆழம் தெரியாமல் இறங்கி தத்தளித்து கொண்டு இருந்தவர்களை கரை சேர்த்தவர் என்பதைவிட ..தண்ணீரில் தத்தளித்து கொண்டு இருந்தவர்களை தண்ணீரிலேயே வைத்து நீச்சல் கற்று கொடுத்து கரைசேர வழி வகுத்தவர் . மீன் பிடித்து விற்பனை செய்து கொண்டு இருந்தவர்களுக்கு மத்தியில் மீன் பிடிக்க கற்று கொடுத்தவர் . அத்தனையும் இலவசமாக...! பொதுவாக எங்கள் வணிகத்தை தமிழில் பங்கு வணிகம் தளத்தை பார்ப்பதற்கு முன் பார்பதற்கு பின் என்று கூட பிரிக்கலாம்...!

எங்கோ பிறந்து எதோ ஒரு மூலையில் இருந்துகொண்டு முன் பின் அறிமுகம் இல்லாத என்னை போன்ற எத்தனை யோ பேருக்கு பேருதவியாக இருந்துவரும் எங்கள் குரு,எங்கள் நாயகர், திரு .எம். சரவணக்குமார் அவர்கள் வாழ்வில் எல்லா வகையான இன்பங்களையும், சிறப்புகளையும் பெற்று நோய் நொடி ஏதுமின்றி பல்லாண்டு வாழவேண்டும், மேலும் பல ஆயிரக்கணக்கான பதிவுகள் எழுதவேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறோம்.



தமிழில் பங்கு வணிகம் --வாசகர் சந்திப்பு

நாம் பதிவர் சந்திப்பு நடத்துவதுபோல தமிழில் பங்கு வணிக தளத்தின் வாசகர்கள் ஒரு சந்திப்பு நடத்தி இருக்கிறோம். கோவையில் இருந்து நண்பர் பாலா துணைவியாருடன் சென்னை வருகையை ஒட்டி இந்த சந்திப்பு ஏற்பாடானது. நண்பர் முருகன்,சகோதரி ராஜி சகோதரி வீணா மற்றும் நான் .சென்னை மெரீனா பீச்சில் கண்ணகி சிலை அருகே கடற்கரை மணலில் எலியட்ஸ் வேவ் போக்கினையும் டோஜி க்கும் ஹேமருக்கும் உள்ள வித்தியாசத்தை வரைந்து காட்டி பகிர்ந்து கொண்ட சுவாரஸ்ய சந்திப்பு அது.








தமிழில் பங்கு வணிகம் --விழுதுகள்

இந்த தளத்தின் வாசகர்களாக இருந்து தாங்கள் கற்று கொண்டதை தங்கள் பாணியில் பதிவிடுகிறார்கள் இவர்கள்.

விஜய்
சேலத்தை சேர்ந்த நண்பர் இவர் வலைத்தளம் இங்கே

பாலா

கோவை நண்பர் சந்தை நிலைகளை தினசரி பதிவிடுகிறார் இப்போது பங்குவணிக முகவராகவும் வளர்ச்சி அடைந்து உள்ளார் அவர் தளம் இங்கே

அருண்

திருப்பூர் நண்பர், புழுதிக்காடு சிம்பா என்றும் அழைக்க படுபவர். . பங்குச்சந்தை பற்றிய இவர் தளம் இங்கே


>