என் கேமராவில்..

கத்தரி கோல் கைல இருந்தா எதையாவது வெட்டிகிட்டே இருப்போம். பேனா கைல இருந்தா எதையாவது கிறுக்கிகிட்டே இருப்போம். அதுமாதிரி இப்போ செல்போன் கேமரா வந்ததுல இருந்து எதையாவது போட்டோ புடிக்க ஆசை வருதுஅந்தமாதிரி செல் போன்ல எடுத்த சில போட்டோக்கள்.

இந்த வாட்டி சபரிமலை போயிட்டு திரும்பி வரும்போது மணப்பாரைகிட்ட சாப்பிட வண்டிய நிப்பாட்டினோம்.அங்கதான் இவர பார்த்தேன் அங்க இவர் பெக்கரா இருக்காரு.இவர பாக்கும்போது காதல் படத்துல கடசில வர்ற பரத் தான்
நினைவுக்கு வந்தாரு.

இவர நேரா ஒரு போட்டோ புடிக்க சுத்தி சுத்தி வந்தேன் கடசில அவரே வந்து மாட்டினார்.

போன தை பூசம் அன்னிக்கு வெளில போயிட்டு செங்குன்றம் புழல் ஏரி வழியா வந்தோம். சாயங்கால நேரம் ஏரி சும்மா பார்த்துட்டு போகலாம்னு ஏரி கரைமேல ஏறி பார்த்தோம். சூரிய அஸ்தமனம். ஒருகைல செல்போன் மறுகையால சூரியன புடிச்சா மாதிரி .....



மெழுகுவர்த்தி வெளிச்சத்துல என் பெரிய பொண்ணு
அமிர்த
வர்ஷினி.


ராம லட்சுமி அம்மா நிழல்ல எடுத்த போட்டோவெல்லாம் போட்டு ஒரு பதிவு போட்டு இருந்தாங்க. அந்த பதிவு பின்னுட்டத்துல என்னையும் போட்டோ புடிக்க
சொல்லி தைரியம் கொடுத்தாங்க. (என்ன தைரியத்துல போட்டோ புடிச்சு அத பதிவுல வேற போடுறன்னு யாரும் கேக்க கூடாதுல்ல ) அதான். இந்த நிழல் போட்டோ என் ரெண்டாவது பொண்ணு
அட்சய
நந்தினி!


.................................................................

>