என்னை கவர்ந்தவர்கள்

என்னை அழைத்த மதிப்பிற்குரிய இராகவன் நைஜீரியா அவர்களுக்கு நன்றி!

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

ஒவ்வொரு நாட்டை சேர்ந்தவர்களுக்கும் ஒரு முகம் உண்டு
சில நாட்டை சேர்ந்தவர்கள் உழைப்பாளிகள்.சில நாட்டை
சேர்ந்தவர்கள் சுறு சுறுப்பு மிகுந்தவர்கள் .

ஆனால்!!!

நம் இந்தியர்கள் முகம் எது ?
வேறு நாட்டு மன்னர்கள் நம் நாட்டின் மீது படைஎடுத்து வரும்போது!!!
இந்தியர்கள் அப்பாவிகள் !
ஆங்கிலேயர்கள் நம்நாட்டிற்கு வரும்போது!!!
இந்தியர்கள் கோழைகள்! எதிர்க்க துணிவு இல்லாதவர்கள் !
காந்தியடிகள் ஆங்கிலேயர்களை எதிர்த்து அறப்போராட்டம்
நடத்தியபோது!!
இந்தியர்கள் அகிம்சாவாதிகள் ! வன்முறை விரும்பாதவர்கள் !!!

ஆனால் !

இந்தியர்களுக்கு இன்னொரு முகம் உண்டு .
அதுதான் !!! உலக மக்களை இந்தியாவின் பக்கம் திரும்ப வைத்த

''ஆங்கிலேயர்களை அலற வைத்த இந்தியர்களின்
வீரத்திருமுகம்''

அப்படிப்பட்ட வீரத்தையும் ,துணிவையும் ,இந்தியர்களுக்கு
வரவைத்து இந்தியர்களை வீறுகொண்டு எழ செய்தவர்
மாவீரர் ''தக தகக்கும் தங்க அம்பு '' என போற்றப்பட்ட
''நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ் ''

இவரே என்னை மிகவும் கவர்ந்தவர்!


நேதாஜி படையில் நம் வீர பெண்கள்!!

நம் இந்திய பெண்களுக்கென சிறந்த மதிப்பும் மரியாதையும்
உண்டு. அவர்கள் பண்பு,மற்றும் அவர்களின் கலாசாரம்
ஆகிய காரணங்களுக்காக பெரிதும் போற்ற படுகின்றனர்.
நம் நாட்டு பெண்களில் என்னை கவர்ந்தது நம்நாட்டு
பெண்களின் வீரம்தான்.

ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்து நேதாஜி இராணுவம்
அமைக்கிறார்.பெரும் எண்ணிக்கையில் மக்கள்
நேதாஜியின் ராணுவத்தில் சேருகிறார்கள்.அதில்
பெண்களும் பெருமளவில் சேருகிறார்கள் .இராணுவத்தில்
சேர்க்கப்பட்ட பெண்கள் செவிலியர் பணியிலும் மற்ற
இதர பணிகளிலும் ஈடு படுத்த பட்டனர்.ஆனால்
இராணுவத்தில் சேர்ந்த பெண்களோ ஆயுதம் தாங்கி
போராட விரும்பினார்கள்.ஆனால்! நேதாஜி அவர்கள் ஆயுதம்
தாங்கி போரிட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று
கொள்ளவில்லை. பின்னர் அந்த பெண்கள் தங்கள்
ஆயுதம் தாங்கி போராட விரும்புவதாக
இரத்தத்தால் ஒரு கடிதம் எழுதி நேதாஜிக்கு அனுப்பி
வைத்தனர்.

அவர்கள் உறுதியையும் வீரத்தையும் மதித்த நேதாஜி
பெண்கள் படை ஒன்றினை அமைத்தார்.அந்த படைக்கு
கேப்டன் லட்சுமியை தலைமைதாங்க செய்தார்.
நேதாஜியின் படையில்ஆயுதம் தாங்கி போரிட விரும்பிய
நம்நாட்டு வீர பெண்கள்என்னை கவர்ந்தவர்கள்.


எங்கெல்லாம் பெண்கள் ஆயுதம் தாங்கி போராடுகிறார்களோ ? அங்கெல்லாம் ஒரு உறுதி இருக்கும்!

எங்கெல்லாம் பெண்கள் ஆயுதம் தாங்கி போராடுகிறார்களோ? அங்கெல்லாம் ஒரு தர்மம் இருக்கும்!




இந்த தொடர் பதிவுக்கு நான் அழைப்பது

ரம்யா
அமிர்த வர்ஷினி அம்மா
என்வானம் அமுதா
நட்புடன் ஜமால்
புதியவன்

ஆகியோர்.


--------------------------------------------
>

சோழ நாட்டு இளவரசன்

துயில் எழுந்து காலை கடன் முடித்து,அடுத்து நீராடல்
இரண்டு தாதி பெண்கள் அழைத்து செல்ல
வெது வெதுப்பான வெந்நீரில் தாதியர் நீராட்டிவிட
நீராடல் முடிந்து வெண் பட்டு உடுத்தி,
முத்துமாலை,முதற்கொண்டு ஆபரணங்கள் அணிந்து,
அறுசுவையுடன் கூடிய
காலை உணவு.

அரசவை!

இளவரசர் வாழ்க!!! இளவரசர் வாழ்க!!!

என்ற கோஷங்கள் முழங்க! அரசவை விஜயம்!!
மக்கள் குறை கேட்டல்,புலவர் பாடி செல்லல்
எல்லாம் முடிகிறது.

நண்பகல்!

அரண்மனையின் மேல்தளம் !!
குளிர்ந்த வெயில்!! வயல் வெளியால் நெய்யப்பட்ட
என் சோழ தேசம். நிறைந்த எங்கள் காவிரித்தாய்!!
தூரத்தில் மக்கள் அனைவரும் சுறுசுறுப்புடன்
விவசாய பணிகளில்! ஆங்காங்கே குதிரை வீரர்கள்!
இரண்டு வீரர்கள் புழுதியை கிளப்பியபடி குதிரையில்
வேகமாக சென்றுகொண்டு இருக்க! மன நிறைவுடன்
என் தேசத்தை ரசிகின்றேன் !! போரடிக்கும் வேலைக்கு
சேர நாட்டில் இருந்து பதினைந்து யானைகள்
வாங்க பட்டு உள்ளன.அவை இன்னும் வந்து
சேரவில்லை இன்னும் இரண்டு தினங்களில்
அவை வந்துவிடும் அவற்றை பழக்க கூடவே
பாகன்களும் வருகிறார்கள்.

கீழே இறங்கி வருகிறேன்! இரண்டு தாதியர்,
நம் இளவரசருக்கு பெண் தேட துவங்கியது
முதல் நம் இளவரசர் முகத்தில் தனி களை வந்துவிட்டது
என கிசு கிசு வென பேச மனதில் உற்சாகம் பிறக்கிறது.

மதிய உணவு மெல்லிய போதை தரும் சுவையான
பானம்! அறுசுவை உணவு முடித்து உறங்க செல்கிறேன்.
தாதியர் கவரி வீச ஆழ்ந்த உறக்கம்..








ஏங்க! எந்திரிங்க!!! சனி கிழமை ஆனா! ஓவரா
சாப்ட்டுட்டு ராத்திரி ஒன்ற மணிவரைக்கும் சொன்னதையே
திரும்ப திரும்ப சொல்லி அறுக்க வேண்டியது,
ஞாயித்துகிழமை பன்னெண்டு மணிவரைக்கும்
தூங்க வேண்டியது? எந்திரிங்க இந்தாங்க காப்பி குடிங்க!!

என் சிங்க மணி சீற்றத்துடன் கையில் குவளையுடன்
என்னை எழுப்ப ( அதான் கனவு முடிஞ்சு போச்சுல்ல
அப்புறம் என்ன இலக்கண தமிழு )

ஆமா! நைட் கொஞ்சம் ஓவர்தான்!!!


.................................................
>

''விகடன் குட் பிளாக்கில் ரம்யா''

விகடன் பத்திரிகை நிறுவனத்தின் மென் பத்திரிகையான '' யூத்ஃபுல் விகடன்'' சிறந்த வலைபதிவர்களை குட் பிளாக்கர்ஸ் என்ற தலைபில், அறிமுகப்படுத்தி வருவது நாம் அறிந்ததே! அந்த வகையில் தற்போது நம் ரம்யாவின்
என் சகோதரியின் மீளாச் சோகம்!!!!!!!!
என்ற இந்த பதிவும் இடம் பெற்று உள்ளது.அதற்காக
வாழ்த்து சொல்லும் அதே வேளையில்,அவர் அந்த
பதிவில் தனது சகோதரியின் சோகநிலை பற்றி எழுதி
இருந்தார் அவர் சகோதரி பூரண நலம் பெற
பிரார்த்தனை செய்வோம்.

'' யூத்ஃபுல் விகடன்''

அறிமுகத்தில்,

திரு
, கேபிள் சங்கர் அவர்களின் இரண்டு
பதிவுகள் இடம் பெற்றது.

மேலும்,

திரு
, இராகவன் நைஜீரியா அவர்கள் பதிவு.

திரு, அதிரை ஜமால் அவர்கள் பதிவு.

என்வானம் அமுதா அவர்களின் பதிவு.

வால் பையன் அருணின் பதிவு.

சாரல் பூர்ணிமா சரண் பதிவு.

தற்போது ராம லட்சுமி அம்மா அவர்களின்

சேற்றிலே செந்தாமரைகளும் ஆஸ்கார் அவார்டுகளும்

பதிவு !!!


ஆகியவை இடம் பெற்று உள்ளன. மேலும் பல சிறந்த வலைப்பதிவர்களின் பதிவும் இடம் பிடித்து உள்ளன.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நீங்களும் வாழ்த்துங்கள்.

...............................................................
>

''தங்க நகை வாங்க போறீங்களா?''

சமீபத்தில் மதிப்பிற்குரிய இராகவன் நைஜீரியா அவர்கள் ஒரு பதிவு எழுதி இருந்தார்கள் அதில்,அவர் கத்தாரில்நகை வாங்கியதாகவும் அந்த நகைக்கு கூலியாக ஏழு சதவீத தொகை மட்டும் மேற்கொண்டு கொடுத்ததாகவும்,ஆனால் நம்நாட்டில் நகை வாங்கும்போது கூலி,சேதாரம் எல்லாம் சேர்த்து மொத்தம் பதினாறு
சதவீதம்போடப்பட்டதாக சொல்லி இருந்தார். அவரின் அந்த பதிவிற்கும்அந்த பதிவில் இடப்பட்டு இருந்த பின்னுட்டங்களுக்கும் நகைதொழில் செய்பவன் என்ற முறையில்விளக்கங்கள் அளிக்க இந்த பதிவு.

''மேலும் நகை தொழில் பற்றியும் நகை வாங்கும்
போது ஏமாறாமல் இருக்கவும் சில தகவல்கள்''


சில வகை நகைகளுக்கு உற்பத்தி செலவு மிக குறைவு அதாவது இயந்திரத்தில் உருவாக்க படுபவை.சில வகை டாலர்கள்,சிலவகை மோதிரங்கள்,சிலவகை செயின்கள். இதுபோன்ற நகைகளை குறைந்த கூலியில் வாங்க சாத்தியம்
உண்டு. 


91.6 kdm நகையாக இருந்து, எல்லாவகை
நகைகளுக்கும் 7 சதவீதம் மட்டும் கூலி
கொடுத்து வாங்கும் நிலை இருந்தால்
கண்ணை மூடிக்கொண்டு வாங்கலாம்
எல்லாவகை நகைகளும் அந்த கூலியில்
கிடைக்கிறதா என தெரியவில்லை.

ஏனெனில் இங்கே நகை செய்பவருக்கே 4-8
சதவீதம் நகையின் தன்மையை பொறுத்து
கூலியாக கிடைக்கிறது.

திரு,இராகவன் அவர்களின் பதிவு
91.6 என்றால் என்ன ?
kdm என்றால் என்ன ?
சேதாரம் எப்படி ஏற்படுகிறது ?
ஒருநகை எப்படி உருவாக்க படுகிறது?
நகை வாங்கும்போது கவனிக்க வேண்டிய
விஷயங்கள் என்ன ?

இவற்றையெல்லாம் பற்றி சில நாட்களுக்கு
முன்னர் புழுதிக்காடு சிம்பாவின் ஒரு பதிவில்
சொல்லி இருந்தேன் அந்த பதிவு

சேதாரம் என்பதைப்பற்றி ஒரு முழு விளக்கம்
பரம்பரையாக நகை தொழில் செய்யும் குடும்பம்  எங்களுடையது எங்கள் முன்னோர்கள் ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வந்தனர் ஒரு பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் அனைவருக்கும் நகை செய்வதுதான் தொழில்.பின்னர் அந்த கிராமத்திலிருந்து குடி பெயர்ந்து பக்கத்து நகரத்துக்கு வந்து விட்டனர். நான் சிறுவனாக இருந்த போது அந்த கிராமத்தில் கண்ட ஒரு காட்சி! அங்கே முன்னோர் வசித்த வீடுகள் எல்லாம் பாழடைந்து சிதைந்து இடிந்த நிலையில் காணப்பட்டது.எல்லாம் மண் வீடுகள் . அங்கே சிலர் கும்பலாக அமர்ந்து
அந்த வீடுகளில் இருந்து மண்ணை வெட்டி எடுத்து அந்த மண்ணை அலசி கழுவி தங்கம் எடுத்து கொண்டு இருந்தனர். அதுவும் எப்படி ? பக்கத்தில் ஒரு குளம் அந்த குளத்தில் இருந்து கால்வாய் வெட்டி தண்ணீரை கொண்டுவந்து
மண் அலசி கொண்டு இருந்தனர். மாதக்கணக்கில் தங்கி இவ்வாறு
செய்கிறார்களாம்.

நகை தொழில் செய்த போது ஏற்பட்ட சேதாரத்தை தான் இவர்கள் அலசி எடுத்து கொண்டு இருந்தனர். அதே சமயம் அந்த வீட்டு உரிமையாளருக்கு சிறிய அளவு தொகை கொடுத்து விடுவார்கள். இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் நகை தொழிலில் சேதாரம் ஆவதை தவிர்க்கவே முடியாது என்பதை சொல்லத்தான்.

அதே சமயம் திரு,இராகவன் அவர்கள் தன் பின்னுட்டத்தில்
//பொற்கொல்லர்கள் தங்கத்தை கழுவிய நீரை கூட
சாக்கடையில் கொட்டமாட்டார்கள் ,அதை காய்ச்சி
அதில் இருந்தும் தங்கத்தை எடுத்து விடுவார்கள்
என கேள்விப்பட்டு இருக்கிறேன் விசாரித்து
சொல்லுங்கள்//

என்று கூறி இருந்தார் அதாவது அவர் கூறி இருப்பதன்
கருத்து என்ன?

நகை தொழில் செய்பவர்கள் ஏற்படும் சேதாரம் எல்லாத்தையும் எடுத்து விடுகிறார்கள் அப்படி சேதாரம் என்று தனியாக ஏன் வாங்க வேண்டும்
என்பதுதான்?

முடிந்த வரை இழப்புகளை எடுக்க முடியும் ஆனால் முழுமையாக எடுக்க முடியாது என்பதுதான் உண்மை.

அதற்க்கு மேலே நான் சொன்ன எங்கள் முன்னோர் கிராமத்தில்
நடந்த செயலே சாட்சி!

சரி! அது அந்த காலம் நவீன தொழில் நுட்பங்கள் ஏதும்
இருந்து இருக்காது அதனால் சேதாரம் ஏற்பட்டு இருக்கும்
இன்றுமா அப்படி என கேட்கலாம்?


ஆமாம்!!! இன்றும் அப்படிதான் இப்போது நகை தொழில் செய்யும் கடைத்தெருவை அந்த கடை வாசலை தினமும் பெருக்கி எடுத்து செல்ல ஒரு கும்பலே இருக்கிறது.

இதை அவர்கள் என் ஏரியா உன் ஏரியா என பிரித்து வைத்து கொள்கிறார்கள்!
மேலும் கோவை பகுதியில் தினமும் ஒரே இடத்தில் சாக்கடையை கழுவி தங்கம் எடுப்பதை இப்போதும் பார்க்கலாம். சேதாரம் ஏற்படவில்லை என்றால்
சாக்கடையில் எப்படி தங்கம் கிடைக்கும்..

நகை தொழிலாளருக்கு சேதாரம் கொடுக்கப்படுகிறதா?
தற்போது பெரும்பாலும் பொற்கொல்லரிடம் நகை  செய்வதை விட நகைகடைகளிலேயே அதிகம்பேர் நகை வாங்குகின்றனர். நகை செய்யும் தொழிலாளருக்கு சேதாரம் ஏதும் கொடுக்க படுவது கிடையாது
தொழிலாளருக்கு கிடைக்கும் அவருக்குண்டான கூலியான நகையின் வகையை பொறுத்து நான்கு முதல் எட்டு சதவீத கூலியில் அவர்
இழப்பு அடக்கம்.

''தொன்று தொட்டு பழகிவிட்ட சேதாரம் என்ற
சொல் நியாயமாக கிடைக்கவேண்டிய நகை
தொழிலாளருக்கு கிடைக்காமல்
நகைகடைகாரர்களுக்கு லாபத்தை
ஈட்டி தருகிறது''

அதேசமயம் நகை கடைகாரர்களுக்கும் சிக்கல் இல்லாமல் இல்லை. ஒரு நகை தொழிலாளியிடம் உருவாகும் நகையானது பல வியாபார நிலைகளை
தாண்டித்தான் நகை கடைக்கு வருகிறது.அப்போது அதன் உற்பத்தி செலவும் அதிகரிக்கிறது.

ஒரு விவசாயி ஒரு விளை பொருளை
வயலில் உழுது நீர்பாய்ச்சி உரம்போட்டு
உற்பத்தி செய்கிறார் அந்த பொருளுக்கு
அவருக்கு கிடைக்கும் விலைக்கும்
சந்தையில் விற்கப்படும் விலைக்கும்
எவ்வளவு வித்தியாசம் உள்ளது?

ஒரு சட்டை தைக்க இன்றைக்கு தையல்
காரருக்கு நூறு ரூபாய்வரை கொடுக்கிறோம்
அதேசமயம் சட்டையே நூறு ரூபாய்க்கு
கிடைக்கிறது.

பிளாட்பார கடைகளில் இருநூறு ரூபாய்க்கு
கிடைக்கும் அதே பொருள் பெரிய ஷோரூம்களில்
நானூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நாம் பெரிய கடைகளை தேடி போகும்போது
அந்தகடை ''ஏசி'' மற்றும் அவர்களின் விளம்பர
செலவு எல்லாம் மக்கள் மீது சுமத்தப்படுகிறது.


''நகை வாங்கும்போது மக்கள் எப்படி ஏமாற்ற படுகிறார்கள்''நகை தொழில் செய்து கொண்டு நகை
தொழிலாளர்களுக்கு கிடைக்கும் கூலி பற்றி
நான் விமர்சனம் செய்ய சில சமரசங்களை செய்ய
வேண்டி இருக்கிறது. ஆனால் அந்த தொழிலில்
யாராவது மோசடி செய்தால் அதை எடுத்து சொல்ல
எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

தொழில் ரகசியம்.

எல்லா தொழிலிலும் ரகசியங்கள் உண்டு அந்த
தொழில் ரகசியம் என்பது மக்களின் வாங்கும் திறனை
அதிகப்படுத்த மட்டுமே பயன்படுத்த வேண்டும்
மக்களை ஏமாற்ற அது பயன்படுத்த பட கூடாது!!


இப்போது சில அல்லது பல இடங்களில்

91.6 என்ற முத்திரை மட்டும் இடப்பட்டு தரம் குறைந்த
நகை விற்பனை செய்ய படுகிறது. இந்த விசயத்தில்
நகை வாங்குபவர்கள் கவனமாக இருக்கவேண்டும்.
ஒரு நகை வாங்கினால் அதை திரும்ப விற்கும் போது
நீங்கள் வாங்கும்போது அந்த நகைக்கு மேற்கொண்டு
கொடுத்த கூலி ,சேதம் மட்டுமே குறையவேண்டும்.
அதற்குமேல் குறையக்கூடாது. இந்த உத்திரவாதத்தை
அந்த நகைகடையில் பெற்று கொள்ளவேண்டும்.
சென்னை,மதுரை,கோவை போன்ற நகரங்களில்
இருபத்து ஐந்து ரூபாய் செலவில் உங்கள் நகையை
சோதித்து கொள்ளும் வசதி உள்ளது.


91.6 kdm நகைகளை மட்டும் வாங்குங்கள்
ஏமாற்றத்தை தவிருங்கள்!!



(மேலும் நகை வாங்குவது பற்றி பின்னுட்டத்தில்
கேளுங்கள் பதில் அளிக்கிறேன் )

...................................................................

>

ஒரு கதை

இந்த கதை சமீபத்துல ஜெயா டிவி ல சொன்னாங்க..........

ஒரு ஊருல ஒரு புருஷன் பொண்டாட்டி, முணு புள்ளைங்கன்னு ஒரு குடும்பம் .

புருஷன் பொண்டாட்டிக்குள்ள அடிக்கடி சண்டைவரும் பொண்டாட்டிகாரி சொல்லுறா ,... இந்த வீட்டுக்கு நான்தான் அதிக வேலை செய்யுறேன் துணி தொவைக்கிறது,சமைக்கிறது ,புள்ளைங்கள கவனிக்கிரதுன்னு எனக்குதான் வேலை அதிகம்னு .
புருஷன் சொல்லுறான் .... நான்மட்டும் என்ன ? சும்மாவா இருக்கேன் ,இந்த குடும்பத்துக்காகத்தான் மாடா உழைக்கிறேன் வெயில்லயும் மழைல அலைஞ்சு திரிஞ்சு வேலை செய்யுறேன் அப்படின்னு ...


சண்டை அதிகரிச்சுகிட்டே போகுது இவங்க சத்தம் தாங்க முடியாம ,அவங்க முன்னாடி கடவுள் தோன்றுகிறார்!
ஏன் இப்படி சண்டை போடுறீங்க என்ன விவரம்ன்னு கேக்குறார் ?
ரெண்டுபேரும் நான்தான் அதிக வேலை செய்கிறேன் !!நான்தான் அதிக வேலை செய்கிறேன் !! அப்படின்னு சொல்லுறாங்க .

உடனே கடவுள் ஒரு யோசனை சொல்லுறார் ,,, அதாவது புருஷனை பொண்டாட்டியாகவும்,பொண்டாட்டியை புருஷனாகவும் மாத்திடுறேன் புருஷன் வேலைய பொண்டாட்டியும் ,பொண்டாட்டி வேலைய புருசனும் பாருங்க யாருக்கு வேலை அதிகம்னு உங்களுக்கே புரியும்னு சொல்லுறார் .


ரெண்டுபேரும் ஒத்துகிறாங்க !! அதுபோல கடவுள் ரெண்டுபேரையும் மாத்திடுறார்

இப்போ புருஷன் காரன் காலைல சீக்கிரம் எழுந்து புள்ளைங்கள ஸ்கூலுக்கு கிளப்பிவிட்டு ,டிபன் பண்ணி ,பாத்திரம் கழுவி , புருஷனை வேலைக்கு அனுப்பி ,வீடுபெருக்கி ,மதியம் சாப்பாடு பண்ணி , புள்ளைங்களுக்கு மதிய சாப்பாடு கொடுத்து , அப்புறம் மாலை ஆனதும் துணி தொவைச்சு ,அப்படி இப்படின்னு பெண்டு நிமிருது !!

கொஞ்சநாள் கழிச்சு புருஷன் ஒத்துகிறான் பொண்டாட்டிக்குதான் வேலை அதிகம்னு !

அவனால சமாளிக்க முடியாம கடவுள் கிட்ட போய் என்னால முடியல மறுபடியும் என்ன ஆம்பிளையா மாத்திடுங்கன்னு !

உடனே கடவுள் இதுக்குதான் அவங்க அவங்க வேலைய அவங்களே செய்யணும்

அடுத்தவங்க வேலையே சாதாரணமா நினைக்க கூடாதுன்னு சொல்லுறார் !!

அவனும் ஒத்துகிறான் ...................

சரி... கதை இதோட முடிஞ்சுதா ?
அதுதான் இல்ல !

சரி என்னை ஆம்புளையா மாத்துங்க ன்னு சொல்லுறான்
அதுக்கு கடவுள் என்ன சொன்னார் தெரியுமா ?
இப்போ நீ கர்ப்பமா இருக்கே இப்போ மாத்த முடியாது !! பிரசவம் முடிஞ்சு வா !!


............................
>

''ஒரு மனிதன் மணமகன் ஆவதற்குள்''

இங்கே நம் சமூகத்தில் பெண்களின் திருமண தடை
பற்றியே பெரும்பாலும் பேசப்படுகிறது.
உதாரணமாக வரதட்சணை பிரச்சனை,வறுமை,
படிப்பின்மை,அழகின்மை, இன்னும்
பல காரணங்கள்.இவை எல்லாம் உண்மைதான்.
ஆனால்! அதே வேளையில் ஆண்களுக்கும்
இதுபோல பிரச்சனைகள் ஏற்படுகிறது அதை
சொல்லத்தான் இந்த பதிவு.

ஒரு வீட்டில் தன் சகோதரிக்கு திருமணம் தள்ளி
போனால் அந்த வீட்டில் இருக்கும் அந்த
பெண்ணின் சகோதரனுக்கும் திருமண
தடை ஏற்படுகிறது.இந்த தடையை
அந்த சகோதரன் வெறுப்புடன் பார்ப்பதில்லை,
பொறுப்புடன் ஏற்றுகொள்கிறான்.

அடுத்து!!
தன் முன்னோர் சொத்து ஏதும் இல்லாமல்,
ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒருவன்
தானே சம்பாதித்து ஒரு குடும்பத்தை
நிர்வகிக்கும் அளவிற்கு தன்னை உருவாக்கி,
ஒருவர் தனக்கு பெண் கொடுக்கும் அளவிற்கு
தன்னை தகுதி படுத்தி, ஒரு சுய விலாசம் பெற
அவன் படும் பாடுகள் நெறயவே இருக்கின்றன.

ஒரு வசதி படைத்த குடும்பத்தினர் பெண் தேடும்போது,
பெண் வசதி இல்லாவிட்டலும் பரவாஇல்லை நல்ல
குணவதியாக இருக்கவேண்டும் என விரும்புவதை
பார்த்து இருக்கிறோம்.

ஆனால்!
மணமகனை தேடும்போது மட்டும் அவன் குணம்
பெரும்பாலும் கருத்தில் கொள்ளப்படுவது இல்லை.
அவனது சம்பாத்யம் மட்டுமே கவனிக்க படுகிறது.

ஒரு ஆண் மகனின் திறமை,நேர்மை,கண்ணியம்,
நெறி தவறாமை, இவைஎல்லாம் வசதிக்கும்
வருமானத்திற்கும் முன் எடுபடுவதில்லை.


ஒருவன் படிக்கும்போது தன்னை கதா நாயகனாகத்தான்
நினைத்து கொள்வான் ஆனால்! படித்து முடித்து,
அல்லது ஒரு சுய தொழிலில் ஈடுபட்டு மாதம் சுமார்
5000 ரூபாய் சம்பாதிக்க கூட அவன் படும் பாடுகள் கொஞ்சமல்ல!
அப்போதுதான் தான் யார் என்பது அவனுக்கே புரியும்!


அப்படி கஷ்டப்பட்டு சம்பாதித்து ஒரு நல்ல நிலைமை
அடைந்து கல்யாண சந்தைக்கு வரும்போது!
வெகு சுலபத்தில் ஒரு வசதி படைத்த குடும்பத்தை
சேர்ந்தவனிடம் அடிபட்டு போகிறான். இதற்கு இவன்
தரப்பு தவறு என்னவெனில் தன்னைவிட வசதி
படைத்த பெண்ணை திருமணம் செய்து
கொள்ள நினைப்பதுதான்.

ஒரு ஆண் கல்யாண சந்தையில் சங்கடங்களை
சந்திக்காமல் இருக்க வேண்டுமெனில்? முதலில்
தன்னை சாதாரணமானவனாக நினைத்துக்கொள்ள
வேண்டும். பெண் மிக மிக அழகாக இருக்கவேண்டும்
என நினைக்காமல் ஓரளவு இருந்தால் போதும்
என்ற எண்ணத்தை கொள்ளவேண்டும்.

மிக முக்கியமாக தன்னைவிட வசதி அதிகம் படைத்த
பெண்ணை தேடாமல் வசதி குறைந்த பெண்ணையே
மனம் முடிக்க நினைக்க வேண்டும்.

இப்படியெலாம் நினைத்து பெண் தேடினால்!
அவன் வாழ்க்கை சொர்கம்தான்!!!







>

வழக்கொழிந்த தமிழ்ச்சொற்கள் ......தொடர் பதிவு

அழைப்பு விடுத்த அமிர்தவர்ஷிணி அம்மாவுக்கு
நன்றி!


சில நல்ல தமிழ் சொற்கள் வழக்கிலிருந்து ஒழிந்து
விட்டதால் தமிழின் இனிமை குறைந்து விட்டது என்பது
உண்மைதான்! ஆனால், சில தமிழ் சொற்கள் வழக்கிலிருந்து
ஒழிந்து விட்டதால் தமிழ் கொஞ்சம் தெளிந்து இருக்கிறது.

ஆமாம்! நான் சொல்லவிருப்பது சென்னை தமிழ். ஆனால்!
இவையெல்லாம் தமிழ் சொற்கள்தானா என கேட்க கூடாது.


பேமானி ; இந்த வார்த்தை ஒரு திட்டு மொழி அடுத்தவரை
திட்ட உதவும்.

சோமாறி; இதுவும் மேற்சொன்ன மாதிரிதான்

கஸ்மாலம்; இதுக்கு அர்த்தம் தெரிஞ்சா சொல்லுங்க

பேஜாரு; கொஞ்ச காலம் முன்னர் வரை நெறைய பேரால்
சொல்லப்பட்ட வார்த்தை
தொல்லை,ஹிம்சை,குழப்பம்
ஆகியவற்றிற்கு மாற்று சொல்.

இஸ்துகினு; இழுத்துக்கொண்டு என்பதற்கு மாற்றுசொல்.
இப்போது அதிகம் இந்த வார்த்தையை கேட்க
முடியவில்லை.

மேற்கண்ட சொற்கள் முற்றிலுமாக ஒழியவில்லை
ஆனால் குறைந்து இருக்கிறது.

மேலும் சில சொற்கள் வழக்கிலிருந்து ஒழிந்து விட்டால்
''மெல்ல தெளியும் இனி சென்னை தமிழ்''



>