ஆவுடையார் கோயிலும், அசர வைக்கும் சிற்பங்களும்

பல பேர் இந்த கோயில் பத்தி சொல்லி இருக்காங்க..! தஞ்சை மாவட்டத்துல பல பிரம்மாண்ட கோயில் எல்லாம் பார்ததால அதுபோல இதுவும் ஒன்னு அப்படின்னு நினைசேன் ..! ஆனா ..? அப்படி இல்ல ..! இந்த கோயில்ல இருக்குற ஒவ்வொரு தூணும் ஒரு கதை சொல்லுது ..! சின்ன சின்ன இடைவெளில கூட சிற்பங்கள் விளையாடுது ..!

மாணிக்க வாசகர்
மாணிக்க வாசகர்தான் இந்த கோயிலின் ஹீரோ...! அவர்கட்டின கோயில்தான் இது. எல்லா கோயில்லையும் முகப்பில் விநாயகரை வழிபட்ட பிறகுதான் கோயில் உள்ள போவோம். ஆனா..! இந்த கோயில் ல முகப்பில் வினாயகர் இல்ல மாணிக்க வாசகர் தான் இருக்கார் இவரை வழிபட்டுத்தான் உள்ள போகணும் .இந்த கோயில் ல திருவிழா மாணிக்க வாசகருக்குதான் நடக்குதாம் தேர்ல பவனி வருவதும் மாணிக்க வாசகர்தான் .
மேலும் இந்த கோயில் பற்றிய முழு விவரங்களுக்கு இங்கே கிளிக்குங்க


முகப்பு

கோபுரம்




அக்னி தீர்த்தம்

உள்ளே இருக்கும் வெளி பிரகாரம்


உள்ளே ஒரு இடம் மனசுல பி .சி ஸ்ரீராம் னு நெனைப்புல எடுத்தது ..!


இந்த குதிரை சிற்பங்கள் ஒரே கல்லால் ஆனவை இதுபோல அங்க நெறைய சிற்பங்கள் இருக்கு ..!


ஒரு பிளவுபோல செதுக்க பட்ட ஒரே கல்லால் ஆன தூண் ..!



இந்த தூணை தட்டினால் டங்குன்னு ஒரு இரும்பு குழாயை தட்டினதுபோல சத்தம் கேக்குது உள்ளே இந்த தூண் கூடா இருக்கும் போல ..!


இந்த மேற்கூரையை பாருங்க கல்லுலையே வளையம் வளையமா செதுக்கி சங்கிலி போல தொங்குது ..!



ஒவ்வொரு தூணிலும் சிற்பங்கள்




ஆத்மநாதர் மாணிக்க வாசகருக்கு உபதேசம் செய்த காட்சி


ஸ்தல விருட்சம் குருந்த மரம்

இந்த கோயிலுக்கு செல்வோரின் முக்கிய கவனத்திற்கு..

இங்கே இருக்கும் சிலைகளுக்கும் சிற்பங்களுக்கும் நிறைய விளக்கங்கள் உள்ளன அதையெல்லாம் யாரேனும் சொன்னால்தான் தெரியும் விளக்கங்களுடன் சுற்றிகாட்ட அங்கே ஆட்கள் இருக்கிறார்கள் அதனால் இங்கே செல்பவர்கள் அப்படி ஒரு நபரை அமர்த்தி கொள்வது நல்லது..!


இது எங்க வீட்டு சிற்பங்கள்


















பின் குறிப்பு;-
நான் கோயில் உள்ளே நுழைந்தவுடன் பார்த்த போர்டு இதுதான்



பொதுவாக இந்த விதிமுறைகளை மீறுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது இருந்தாலும் இங்கே போட்டோ எடுக்கலாமா ன்னு அங்க வேலை செய்யும் ஒருவரை கேட்டேன் அவரும் பார்த்து எடுத்துகோங்கன்னு சொன்னார் .
அதோட இந்த கோயில கட்டின மாணிக்க வாசகர் மட்டும் என்ன ..? ரூல்ஸ் படியா பண்ணினார் ..? மதுரை மன்னர் குதிரை வாங்க கொடுத்த காசுல இறைவன் மேல உள்ள ஈர்ப்பால வந்த கடமையை மறந்துட்டு தானே கோயில கட்டினார் ..? அதே போல ஒரு ஆர்வத்துலத்தான் நானும் போட்டோ புடிச்சு பதிவுல போட்டுட்டேன் ..!





>