அப்துல்லா அளித்த இப்தார் விருந்தும் ,அமர்க்களமான பதிவர் சந்திப்பும்..!(படங்கள்)

பதிவர் டுபுக்கு வருகையை ஒட்டி மெரீனா காந்தி சிலை அருகில் பதிவர் சந்திப்பும் அதனை தொடர்ந்து அப்துல்லா அளிக்கும் இப்தார் பிரியாணி விருந்தும்
மதியம் முதலே ஒரு சுவாரஸ்யசந்திப்புக்கு தயார் ஆயாச்சு..!


போற வழியில சிக்னல்ல நின்னப்போ எடுத்தது..! என்ன கம்பீரம்..! (ம்ம்ம்ம்)


திருமணமாகி சில வருடங்கள் கழித்து குழந்தை பிறந்த சந்தோசத்தை இனிப்பு கொடுத்து பகிர்ந்து கொண்டார் காவேரி கனேஷ்..!

போதிய வெளிச்சமின்மையால் படம் சரியாக விழவில்லை நம்ம மொபைல் கெப்பாசிட்டியும் அவ்ளோதான்..!


பீச்சுல தான் முதல்ல ஏற்பாடு ..! ஆனா நல்லா மழை வரும் போல இருக்கவே அப்துல்லா வின் அலுவலகத்துக்கு மாற்றப்பட்டது..! எல்லோரும் அப்துல்லா அலுவலகம் சென்றடந்தோம்..! அங்கே ரம்யா,கலைஅக்கா, சித்தர்சுரேஷ்,பதிவர்சுரேஷ், மேலும் சிலர் வந்தனர்.


வெகு அமர்க்களமாகவும்,கலகலப்பாகவும் இருந்தது பதிவர் சந்திப்பு..!

தாமிரா, கந்ததாசன் பிளஸ்,ப்ரதீப்,பால பாரதி,சுரேகா


சேப்பு சட்டைக்காரர் பேர ரெண்டு மூணு தடவ கேட்டும் மறந்துட்டேன் , பின்னாடி ராஜ கோபால்.!

காவேரி கணேஷ்,மோகன் குமார்,கார்க்கி, அடுத்தவர் பேரும் தெரியல..!


டுபுக்கு...டுபுக்கு ந்னு சொன்னாங்கல்ல இவர்தான் அந்த டுபுக்கு..!;)




ஓ.ஆர்.பி ராஜா


தமிழ் வலை உலகத்தை, உலக புகழடைய என்ன செய்யலாம் என்ற யோசனையில் நடந்த வட்ட மேஜை மாநாடு..!

ஓ.ஆர்.பி ராஜா, டாக்டர் புருனோ,எல்கே

நம்மவர் கமல் கெட்டப்ல வந்த பலாபட்டரை சங்கர்..!... பபாஷா..!

ஒரு நண்பர் அனைவருக்கும் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார் ..!




தண்ணி குடிக்கும் டுபுக்கு...! வெறும் தண்ணிதான்..!

இந்த கிளாஸ்லதான் தண்ணி குடிச்சோம்



அதிஷா


எல்கே


கேபிள்ஜி

குட்டி டின், கே.ஆர்.பி. செந்தில்

அதியமான் , கந்ததாசன் கூட்டல் (+)

கந்த தாசன் பிளஸ்,குட்டி டின்

ப்ரதீப்

இந்த சந்திப்பை மிகவும் கலகலப்பாக்கியவர் கார்க்கி தான்..! சுவாரஸ்யமான பேச்சு அவருடையது..!



விருந்தினரை கவனிக்கும் ஒரு சிறிய பதட்டம் இருந்தது அப்துல்லாவுக்கு..!

சித்தர் சுரேஷ்..!


சும்மா சொல்ல கூடாது செம டேஸ்ட் பிரியாணி..! எல்லாம் செம கட்டு கட்டினோம்..!



இந்த சந்திப்பை பற்றிய மோகன் குமார் அவர்கள் பதிவு இங்கு


>

தனி மனிதர்களுக்கான தேசம் அல்ல இது...!

தனி மனிதனாக இருக்க வேண்டாம் இது தனி மனிதர்களுக்கான நாடு அல்ல.
ஒரு கூட்டமாகவோ,ஒரு அமைப்பாகவோ அல்லது ஒரு சங்கமாகவோ இருப்பவர்களுக்கு கிடைக்கும் மரியாதை தனி மனிதருக்கு கிடைக்கவில்லை.
தனி மனிதருக்கு நீதி மறுக்கபடுகிறது. தனி மனிதராக இருந்து நீதி பெற வேண்டுமெனில் பெரும் பணக்காரனாக இருக்க வேண்டும். ஒரு தனிமனிதன் இன்றைய நிலையில் ஒரு பொருளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்க கூட பெரும்பாடு படவேண்டிஉள்ளது. இருதரப்பிற்க்கு பிரச்சனை எனில் அங்கே நியாயம் தர்மம் பார்ப்பதைவிட யார் அதிக வொர்த்து என்றே கவனிக்க படுகின்றனர்.

தனித்து இல்லாமல் ஏதாவது ஒரு அமைப்பில் உங்களை இணைத்து கொள்ளுங்கள். உங்கள் தொழில் சார்ந்த அமைப்போ அல்லது பகுதி சார்ந்த அமைப்போ அல்லது உங்கள் ஜாதி மத அமைப்பாக இருந்தாலும் பரவாயில்லை,ஜாதி மத அமைப்புகளுக்கு இன்றைய நிலையில் நல்ல அரசியல் எதிர்காலம் உள்ளது இது வெட்க பட வேண்டிய உண்மைதான்.ஆனால் இந்த நிலை மாற இன்னும் பல வருடங்கள் ஆகும்.அதுவரை நாமும் ஊரோடு ஒத்து போகவேண்டியதுதான்.எதும் இல்லாவிட்டாலும் எதாவது ஒரு அரசியல் கட்சியிலாவது இணைந்துவிடுங்கள் அதுவே பாதுகாப்பு.

நான் உண்டு என் வேலை உண்டு என இருக்கின்றேன் எனக்கு எதுக்கு இதெல்லாம் என்ற எண்ணம் மட்டும் வேண்டாம். யாருக்கு எப்போது வேண்டுமானாலும் பிரச்சனை வரலாம்.உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஒரு ஐம்பது பேர் வந்து நிற்கும்படி உங்கள் சூழலை உருவாக்கிகொள்ளுங்கள்.

கேட்க நாதியில்லாத காரணத்தால் காவல் துறை நடவடிக்கை,கட்ட பஞ்சாயத்து
ஆகியவைகளால் ஊரைவிட்டு ஓடிபோன,தற்கொலை செய்து கொண்ட குடும்பங்கள் பல உண்டு.

தனித்து போராடி வெல்ல முடியாதா என கேட்கலாம்..! முடியும்.. ஆனால் அதற்கான விலை மிக அதிகம் முடிந்தவர்கள் போராடி கொள்ளட்டும்.

அதிஷ்டவசமாக ஓட்டுகாக பிச்சை எடுக்கும் அரசியல் வாதிகள் மத்தியில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். இதுவே நமக்கு ஆயுதம். எப்போதும் ஒற்றுமையுடனும்,கூட்டமாகவும் இருப்போம்...! தலை நிமிர்ந்து தைரியமாக வாழ்வோம்...!

தனி மனிதர்களுக்கான தேசம் அல்ல இது...!

>