ஈழத் தமிழருக்கான ஆதரவு தமிழ்நாட்டில் மேலும் பலமடைய ....

இலங்கையில் இப்போது என்ன நடக்கிறது?
அங்கே நடைபெறும் போராட்டத்தில், தமிழ்
போராளிகளின் நோக்கம் என்ன? தமிழ் போராளிகள்
உருவானது ஏன்? இதையெல்லாம் மறுபடியும்
தமிழ் மக்களுக்கு (தமிழ் நாட்டில் உள்ள)
உணர்த்த வேண்டிய அவசியம்
ஏற்பட்டுள்ளதாக உணர்கிறேன்.

இங்கே தமிழகத்தில் ஒரு தலைமுறை இடைவெளி
ஏற்பட்டுள்ளதாக தோன்றுகிறது. உதாரணமாக
சமீபத்தில் ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்
அவருக்கு ஒரு முப்பத்து இரண்டு வயது இருக்கும்.
அப்போது இலங்கை போராளிகள்,இலங்கை தமிழர்கள்
பற்றி பேச முற்படும் போது அவர் இலங்கை போராளிகளை
வெறுப்பதாக கூறினார்! அதற்கு அவர் கூறிய காரணங்கள்
மிகவும் சிறுபிள்ளைத்தனமாக இருந்தது .

அப்போது நான் அவரிடம் கேட்டேன் இலங்கை போராளிகள்
உருவாவதற்கு முன்னர் சிங்கள ராணுவத்தினர் தமிழ்
மக்கள் மீது நடத்திய வன்முறை பற்றி உங்களுக்கு தெரியுமா?
என்று ? என்ன கொடுமை! அவருக்கு எதுவுமே தெரியவில்லை!
ஒரு இருபத்தி இரண்டு வயது இளைஞனை கட்டி போட்டு
அவன் கண்முன்னால் அவனது தாயை , சிங்கள நாய்கள்
கற்பழித்த கதை உங்களுக்கு தெரியுமா என கேட்டேன்?
...........தெரியவில்லை!

ஒரு கர்ப்பிணி தமிழ் தாயின் வயிற்றை கிழித்து!
வயிற்றில் உள்ள குழந்தையை எடுத்து வெட்டி கொன்ற
கதை தெரியுமா? என கேட்டேன்?அதுவும் அவருக்கு
..............தெரியவில்லை! ஆனால்! இதையெல்லாம் கேட்டு
அவர் கொதித்து போய்விட்டார்!
அப்போது நான் சொன்னேன்,சிங்கள ராணுவத்தினர்
செய்த அட்டூழியங்களை நான் உங்களுக்கு முழுவதும்
சொல்லவில்லை நான் முழுவதும் சொன்னால் நீங்கள்
நிம்மதி இழந்து விடுவீர்கள் என்று!


தற்போது முப்பது வயதிற்கு உள்பட்ட தமிழர்களுக்கு
இலங்கை தமிழ் போராளிகள் உருவான கதையை
சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது .

இப்போது தமிழகத்தில் உள்ள மக்கள் நினைத்து
கொண்டிருப்பது என்ன?'' இலங்கை தமிழர்கள்
தனி நாடு கேட்டு போராடுகிறார்கள்'' அவ்வளவுதான்

ஆனால் !!

ஏன்? எதற்கு?இலங்கை தமிழர்களுக்கு என்ன
பாதிப்பு ஏற்பட்டது ? என்ற எந்த விவரமும் தெரியாத
மக்களும் இங்கே நெறைய பேர் இருப்பதாக
தோன்றுகிறது.

தற்போது தமிழ் நாட்டில் திமுக,மதிமுக,பாமக,விடுதலை
சிறுத்தைகள்,மற்றும் பல அமைப்புகள் எல்லாம் தீவிர
இலங்கை தமிழர்கள் ஆதரவாளர்கள் தான்.
அந்த அமைப்புகள் எல்லாம் தமிழீழ போராளிகள்
உருவான காரணங்களை மேடைதோறும் முழங்க வேண்டும்!

குறைந்த பட்சம் இலங்கை தமிழ் போராளிகள் உருவான
காரணங்களை,முழுவதும் தெரிந்தவர்கள் வலையேற்றுங்கள் .
>