குடித்ததில் பிடித்தது..!

குடி குடியை கெடுக்கும்! குடி பழக்கம் எல்லாவற்றிற்கும் தீங்கானது!!




எனக்கு ஒரு சின்ன ஆசை அதாவது மெரீனா பீச் ல நல்லா மழை அடிச்சுகிட்டு ஊத்தணும் யாருமே அங்க இருக்க கூடாது மணல் வெளி ஓரமா கார நிப்பாட்டி காருக்குள்ள உக்காந்து தண்ணி அடிக்கணும்.ஒருநாள் அப்படி கிளம்பியாச்சு அப்போ மழைக்காலம் தான் ! இங்க பெரம்பூர்ல நச நச ன்னு தூறல் போட்டுக்கிட்டு இருக்கு கிழக்கு பக்கமா வானத்த பார்த்தா நல்லா மழை அடிச்சிகிட்டு பெய்யும் போல இருந்தது! மதிய நேரம் அது!! சரக்கு மற்றும் சைடு டிஷ், பிரியாணி எல்லாம் வாங்கிகிட்டு கார எடுத்துகிட்டு கிளம்பியாச்சு சீரணி அரங்கம் இருந்ததே அதுக்கு பின்னாடி கார் கொஞ்சதூரம் கடல் வரை போகும் அங்க போய் கார நிறுத்துறதா திட்டம்.
ஆனா ? யாரு கண்ணு வைச்சாங்களோ தெரியல பீச் நெருங்க ,நெருங்க மழை குறைந்து லேசா வெயில் அடிக்க ஆரம்பிச்சது! பீச் போனதும் பார்த்தா நல்லா சுள்ளுன்னு வெய்யில்! என்ன இது வீணாப்போன வானிலை?

வெறுப்பா போச்சு அப்புறம் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடத்தில் வண்டிய நிப்பாட்டி தண்ணி அடிச்சுட்டு வந்தோம்! அப்புறம் அதுபோல தண்ணி அடிக்க முயற்சி பண்ணல.


போன வருஷம் கொடைக்கானல் போனோம் அப்போ தண்ணி அடிச்ச சம்பவத்த
மறக்கவே முடியாது! வேன் எடுத்துகிட்டு போய் இருந்தோம் முணு ,நாலு குடும்பங்களா போய் இருந்தோம். ஒரு நாள் காலைல கிளம்பி வெளில சுத்தி பார்த்துட்டு மதிய சாப்பாட்டுக்கு தங்கி இருந்த எடத்துக்கு வந்துட்டோம் அங்க சமையல் பண்ண ஏற்பாடு பண்ணி இருந்தோம்.எல்லாரையும் எறக்கி விட்டுட்டு தண்ணி அடிக்கிற பழக்கம் உள்ள நல்ல புள்ளைங்க ஒரு அஞ்சு பேரு வேன்ல கிளம்பிட்டோம்!
சரக்கு வாங்கிகிட்டு வேன ஒரு ஓரமா நிறுத்தினோம்!ப்போ
அடிச்சுது பாருங்க மழை!!! மழைனா ..மழை அப்படி ரு அடை மழை! சுத்தி உயர உயரமா மரங்கள்! மழைல தொப்பலா நனைஞ்சு நிக்குது ! ஒரு வேனுக்குள்ள இருந்துகிட்டு பெய்யென பெய்ஞ்சுகிட்டு இருக்குற அடை மழையை ரசிக்கிறதே
ஒரு போதைதான் கூடவே சரக்கும் இருந்தா அடடா சொல்லவே வேணாம்!
அப்போ எனக்கு பள்ளி கூடத்துல படிச்ச நெடுநல் வாடையில் நக்கீரர் கூறும் மழைக்கால வர்ணனையை எழுது அப்படிங்குற கொஸ்டீன் தான் நெனைப்பு
வந்தது! சமீபத்துல ஒரு பதிவர் இதை பத்தி எழுதி இருந்தாங்க!

அதுல!
மழையில் நனைந்த கமுக மரங்கள் காற்றின் வேகத்தில் அசைந்து உருண்டு ,திரண்டு அழகாக காட்சி அளித்தன, நீரின் வேகத்தை எதிர்த்து மீன்கள் நீந்திவர அதெற்கென காத்திருந்த கொக்குகள் அந்த மீன்களை பிடித்து உன்னலாயின, சிறு மழைக்கு அஞ்சாத கள்ளுண்ட மாந்தர்கள் சத்தமாக இரைந்த படி சென்றனர் இப்படியாக போகும் அந்த வர்ணனை !

மழை நிக்கவே இல்ல வேணும்கிற அளவுக்கு பெய்ஞ்சது! நல்ல நிதானமாபொறுமையா மழைய ரசிச்சுகிட்டே போதை தரும் திரவம்
வயிற்றில்
இறங்க அருமையாய் கழித்தோம் அந்த மாமழை தினத்தை.


.......................................................................................................
>

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...!

ஒரே நாளில் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் காலி ..! அதுவும் சில மணிநேரத்துக்குள்..! ஒரு சிறுத்தை குட்டி, ஆட்டு குட்டி விலையில் கிடைக்கிறது
என வர்ணிக்கப்பட்ட ரிலையன்ஸ் பெட்ரோலியம் பங்குகள் மள மள வென சரிகிறது. பதட்டம்..!படபடப்பு...!பயம்..! மாதம் முழுவதும் இரவும் பகலுமாய் வேலை செய்து கிடைக்கும் ஒரு தொகையை இப்படி பங்குசந்தையில் தொலைக்கின்றோமே என்ற ஒரு குற்ற உணர்ச்சி..! வீட்டிலும் சொல்ல முடியாது
கடும் மன உளைச்சல்..!! பங்குசந்தையை விட்டு விலகவும் முடியவில்லை..!
விட்டதை விட்ட இடத்தில் தான் தேட வேண்டும் என்ற ஒரு வேகம்..! சில ஆயிரங்கள் சில நாட்களில் லாபம் என்றால்... பல ஆயிரங்கள் பல நாட்களில் நஷ்ட்டம்..!
பங்கு சந்தையை பற்றி அறிந்து கொள்ள ஆவல்...! ஆனால் அந்த தகவல்களை தரும் தளங்கள் எல்லாம் ஆங்கிலத்தில் தான் இருந்தன..! போதிய ஆங்கில அறிவும் இல்லை..! சில தமிழ் புத்தகங்கள் கிடைத்தன ஆனால் அவை தந்த தகவல்கள் மேலோட்டமாகவே இருந்தன.

பங்கு சந்தையின் ஆழம் தெரியாமல் இறங்கி தத்தளித்து கொண்டிருந்த நிலையில் கலங்கரை விளக்கமாக கண்ணில் பட்டதுதான் தமிழில் பங்குவணிகம் என்ற இந்த தளம் ...! இந்த தளம் என்கண்ணில் பட்ட நாள் என் வாழ்வில் மிக முக்கியமான நாள்..! இந்த தளத்தில் சந்தை பற்றிய தகவல்களுடன்
பைசா பவர் என்ற ஒரு சாட் அறை உருவாக்கி அதன்மூலம் சந்தையின் போக்கை
தொழில் நுட்ப பகுப்பாய்வின்படி எப்படி கணிப்பது என்ற ஒரு பெரிய விஷயத்தை எளிய முறையில் விலா வாரியாக சொல்லி கொடுத்தார் இந்த தளத்தின் ஆசிரியர் எங்கள் குரு திரு,எம். சரவணக்குமார் அவர்கள்..!

எத்தனை.. எத்தனை ..விஷயங்கள் எல்லாவற்றையும் பொறுமையுடனும் விளக்கமாகவும் கற்று கொடுத்து நஷ்ட்டங்களில் இருந்து மீள வைத்தார். இவரிடம் கற்று தேர்ந்த சிலர் இன்று பங்குசந்தை நிபுணர்களாகவே ஆகிவிட்டனர். ஒரு தொகையை பெற்று கொண்டு தொழில் நுட்ப பகுப்பாய்வினை சொல்லி கொடுப்பவர்களை விட நூரு மடங்கு விஷயங்களை இலவசமாக கற்று கொடுத்தார்.

இன்று எங்கள் நஷ்டங்களில் இருந்து விலகி லாபமான பாதையில் பயணித்து கொண்டு இருக்கின்றோம்..!

4.7.2011 இல் எங்கள் மரியாதைக்குரிய குரு எம்.சரவணக்குமார் பிறந்த நாள் காண்கிறார்..! அவர் வாழ்வில் எல்லாவகையான இன்பங்களையும் அடைந்து நோய்நொடியின்றி,நீடித்தஆயுளுடன் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகிறோம்...!

>