மயிலு ..மயிலு ..

ஞாயித்து கிழமை வீட்டுல பசங்கள கூட்டிகிட்டு வெளிய போகலாம்னு தங்கமணி தொல்லை தாங்க முடியல! ஞாயித்து கிழமைனா ஒரு கட்டிங் உட்டுட்டு நிம்மதியா ஒரு தூக்கம் போடுறதுதான் நமக்கு புடிக்கும் , சரி போகட்டும்னு கிண்டி பாம்பு பண்ணை , சிறுவர் பூங்கா போகலாம்னு முடிவு பண்ணி கிளம்பினோம்.



நாங்க போன நேரம் மழை வர்றது போல இருந்தது ! மழை வரும்போது மயில் தோகை விரிச்சு ஆடுமாமே? உண்மைதான் நாங்க போன நேரத்துல மயில் தோகை விரிச்சு ரொம்பநேரம் பார்வையாளர்களுக்கு போஸ் கொடுத்து நின்னது செம அழகு! இந்த பதிவ போடுற காரணமே இந்த மயில் தான்.











எல்லாம் செல் போன்ல எடுத்த படங்கள் வேற கேமராவில எடுத்து இருந்தா
இன்னும் நல்லா இருந்திருக்கும்!

அங்க ஒரு நாலைஞ்சு மயில்கள் இருந்தது ஆனா ஒரு மயில் மட்டும்தான்
தோகை விரிச்சு நின்னது ! மத்த மயிலுங்களுக்கு மழை வர்ற ''பீலிங்'' வரல போல!



இந்த பறவை பேரு தெரியல நல்லா நல்ல உயரமா கம்பீரமா இருந்தது!


இவங்க எங்க வீட்டு மயிலுங்க!



>