பொற்கொல்லரும்,கலால் வரியும்..!!

ஆண்டுக்குஆண்டு தங்கநகை விற்பனை அதிகரிப்பு..!! ஆனால் நகைத்தொழில் மாபெரும் நசிவு...!!! பொற்கொல்லர் சயனைடு சுவைத்து குடும்பத்துடன் தற்கொலை என்ற     செய்திகளும் அதிகரிப்பு..!! ஏன்  இந்த முரண்..? என்ன காரணம்..? பொற்கொல்லரிடம் இருந்து நகைத்தொழில் கை மாறிப்போக யார் காரணம்.?? பொற்கொல்லரை கொத்தனாராகவும்,பிளம்பராகவும்,வாட்ச் மேனாகவும் தொழில் மாறச்செய்தது யார்?

மாபெரும்  கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரிய அளவிலான தொழில் கூடங்களை அமைத்து குறைந்த கூலிக்கு ஆட்களை அமர்த்தி  பொற்கொல்லர் அல்லாதவர்களுக்கும் பயிற்சி அளித்து தங்கள் உற்பத்தியினை துவங்கியதாலேயே பொற்கொல்லரின் முதல் பின்னடைவு துவங்கியது..!!

நகர் புறங்களை பொருத்தவரையில் மொத்த உற்பத்தியாளர் எனப்படும்  இடைதரகர்களின் பிடியில் சிக்கி அழிந்த பொற்கொல்லரும் அனேகம்..!  ஒரு பொற்கொல்லர் ஒரு மொத்த  உற்பத்தியாளரிடம் 6% கூலிக்கு நகை செய்துகொடுத்தவண்ணம் இருப்பார். அவருக்கென குடும்பம் அதற்கேற்ற செலவுகளும் இருக்கும். அந்த மொத்த உற்பத்தியாளரை நம்பியே  அவர் குடும்பம் இருக்கும். இந்த நிலையில் வேறு ஒரு பொற்கொல்லர் அந்த மொத்த உற்பத்தியாளரிடம் வேலை கேட்டால் 5%  செய்து தருவதானால் வேலை தருகின்றேன்  என்பார் இவர் சம்மதிக்கும் பட்சத்தில் முதலாமானவரை அம்போ என விட்டுவிட்டு அடுத்தவருக்கு வேலையை கொடுப்பார்  முதலாமானவர் கதி..??    பல ஆண்டுகளாக ஒரு மொத்த உற்பத்தியாளரிடம் வேலை செய்து விட்டு அவர் வேலையை மாற்றி கொடுத்த காரணத்தால் நடுத்தெருவுக்கு  வந்த பொற்கொல்லர்களும் ஏராளம்...! இப்படியாக கூலியினை 6% லிருந்து  படிப்படியாக 3%,2%  என குறைத்து  பொற்கொல்லரை திண்டாட வைத்த  புண்ணியம் வடநாட்டு மொத்த உற்பத்தியாளருக்கு நிறையவே  உண்டு..!!

இப்போது இந்த தங்கத்தின் மீதான 1% கலால் வரியினை எதிர்த்து முன்நின்று  போராட்டம் நடத்துபவர்கள்  பெரும் கார்பரேட் நிறுவனத்தாரும்,மொத்த உற்பத்தியாளரும்தான்..!! எந்த ஒரு பொற்கொல்லரும்,பொற்கொல்லர் அமைப்பும் இந்த கலால் வரியை எதிர்க்கவில்லை..!!
 இதில் என்ன வேடிக்கை என்னவென்றால்  இந்த கலால் வரி எதிர்ப்பு போராட்டத்தில் பொற்கொல்லர்களும் இணைந்து உள்ளதாக  அவர்களே  செய்தியினை வெளியிடுகின்றனர்.! பொற்கொல்லரின் எதிர்காலத்தை கேள்விக்குறிஆக்கிவிட்டு  அவர்கள்  உடன்பாடு எதுவும் இல்லாமல் அவர்களும் போராட்டத்தில்  உள்ளதாக சொல்வதை கேட்டால் ஒவ்வொரு பொற்கொல்லருக்கும் அடி வயிறு  எரியத்தான் செய்கின்றது..!

பொற்கொல்லர் இந்த போராட்டத்தில் இருந்தால் மட்டுமே போராட்டம் வெல்லும் என்ற ஒரு நிலையில் மட்டுமே  இவர்கள்  பொற்கொல்லரை போலியாக இணைத்து கொள்கின்றனர். பொற்கொல்லர்களில்  கிட்ட  தட்ட அனைவரும் தங்கத்தின் மீதான 1% கலால் வரியினை ஆதரிக்கவே செய்கின்றனர். தமிழ் நாட்டில்  உள்ள பெரும்பான்மை நகைத்தொழிலாளர் அமைப்பும் கலால் வரியினை ஆதரிக்கின்றது..!

எங்கள் வாழ்வினை கேள்விக்குறி ஆக்கிவிட்ட உங்களுக்கு ஏன் இந்த போராட்டத்தில் உதவ வேண்டும் என்ற மனப்பாங்கு பொற்கொல்லருக்கு இல்லை...!  வேறு என்ன காரணம்...? இங்கே  சற்று கவனியுங்கள் நண்பர்களே ஆண்டுக்கு 1500  டன்   தங்கம் இறக்குமதி செய்ய படுகின்றது ஆனால் வெறும் 300,400 டன் தங்கம் மட்டுமே அரசிடம் கணக்கு காட்டப்படுகின்றது...கிட்ட தட்ட ஆண்டுக்கு 1000 டன்னுக்கு  மேற்பட்ட தங்கம் பதுக்க காரணமாக இந்த கார்பரேட் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் தங்கள் முதுகில் ஏறி போராட்டம் நடத்த எந்த ஒரு பொற்கொல்லனும் அனுமதிக்க மாட்டான்...!  இதுவே  உண்மை நிலை..! பதுக்கப்படும் தங்கத்தினை வெளிக்கொணரும் தீர்வு கலால் வரியென சொல்லிவிட முடியாதுதான் ஆனால் பதுக்கல் தங்கத்தை மீட்க்கும் முயற்சியின் ஆரம்பம் இது..!

நாட்டில்    உள்ள தங்கத்தின் இருப்பினை வைத்தே பொருளாதாரம் நிர்ணயம் செய்யப்படுகின்றது.இந்த நிலையில் தங்கத்தின் மீதான கலால் வரியினால் நிச்சயம் தேசத்தின் பொருளாதாரம் மேம்படும். கலால் வரியினை ஆதரிப்பது ஒவ்வொரு  இந்தியனின் கடமையாக நினைக்க வேண்டும்.


பின் குறிப்பு;-  நண்பர்களே தங்கத்தின் மீதான  1% கலால்  வரியினை பொற்கொல்லர்கள் எதிர்க்கவில்லை  மாறாக ஆதரிக்கின்றார்கள் என்ற செய்தி எந்த ஊடகங்களிலும் வரவில்லை..!! அல்லது அந்த செய்தி மறைக்கப்படுகின்றது .   இந்த பதிவு அனைவரையும் சென்றடைய வேண்டும் எனவே இந்த பதிவினை  அதிக அளவில் பகிருங்கள்....தமிழ் மணத்திலும் உங்கள் வாக்கினை பதிவு செய்யுங்கள்  நன்றி...!!

>

தொட்டால் தொடரும்.....! படம் பார்த்த அனுபவம்...!!!

 தனது விமர்சனம் மூலம்...பல படங்களை பார்க்கத் தூண்டியவர்...!  அதே  விமர்சனம் மூலம்  பல படங்களை பார்க்க விடாமலும் செய்தவர் இந்த படத்தின் இயக்குனர் கேபிள் சங்கர்...!

இவரால்  விமர்சிக்கப்பட்டவர்கள் இவரை விமர்சிக்க வரிந்து கட்டிகொண்டுவரலாம்...!  ஆனால் அப்படி  வருபவர்களை  ஒன் ஸ்டெப் பேக்  என  தனது இயக்கத்தின் மூலம் சொல்லி இருக்கின்றார் இயக்குனர்...! படத்தின் கதையை பல விமர்சனங்களில் படித்து இருக்கலாம் அதனால் பிடித்த இடங்கள்  மட்டும்...!!!

நாயகனும் நாயகியும் போனில் பேசிகொள்வது...அழகு...!  ஹேய்  சொல்லுப்பா...! இல்லைடா..!  என சென்னைத்தமிழில் பேசிக்கொள்ளாமல்...இல்லங்க...  சொல்லுங்க  என நிறைந்த  தமிழில் பேசிகொள்வது....வயலும்..வயல் சார்ந்த இடத்தில் பயணிப்பது போல இதமாக இருக்கின்றது....!

 நாயகனின் நண்பன் பேசும்  நக்கல் பஞ்ச் களுக்கு   இயல்பாகவே  சிரிப்புவருகின்றது...!!  உதாரணம்..... புரட்சிகனல்  என்ற பத்திரிக்கை அலுவலகத்தில்.....

/// புரட்சிகனல் ந்னு பேரு வைச்சுக்கிட்டு  உள்ள ஜில்லுன்னு இருக்கே கனல் அணைஞ்சுடாது///

நாயகனும் நாயகியும் ஒருவரை ஒருவர் பார்த்திடாத நிலையில்  இருவரும் ஒரே கோவிலில் இருக்கின்றார்கள்  அதை போன் மூலம்  தெரிந்து கொண்ட நாயகன் நாயகியை பார்க்க  துடிக்க...

 இருவரும் கோவிலை  சுற்றிவருவோம் நான்  பார்த்து பேசும் முதல் ஆண் நீங்களாக இருக்க வேண்டும் அதே போல நீங்க பேசும்  முதல் பெண் நானாக இருக்க வேண்டும் என்ன டீல் ஓகேயா  என நாயகி கேட்பதும்...அதை தொடர்ந்துவரும் பாடலும்  அழகான  கவிதை...! 

பிண்ணனி இசையிலும்,பாடலிலும்  ஜீவன் இருக்கின்றது....!

                                                   சின்ன இடை வேளை...!  
***********************************************************************************
 
இந்த படத்துக்கு  நான்  நண்பருடன்  சென்றிருந்தேன்  இடை வேளையின் போது  எழுந்து பார்த்தால் படத்துக்கு அனைவரும் ஜோடிகளாக....நானும் நண்பரும் மட்டுமே ஆண்ஜோடிகள்... பாருங்க  ரெண்டு ஆம்பிளைகள் தனியாக படத்துக்கு  வந்துருக்காங்கன்னு  நம்மள வித்தியாசமா பாக்குறாங்கன்னு நான் சத்த மாக சொல்லவே  அனைவருக்கும் பயங்கர  சிரிப்பு...!!!!!
************************************************************************************

படத்தில் பிரம்மாண்டத்துக்கு குறைவில்லை....கார்கள்  கரணம் போடுகின்றன..! ஹெலிக்காப்டரில் இருந்து  எடுக்கபட்டது போன்ற உயரத்தில் இருந்து  கிழக்கு கடற்கரை சாலையை காட்டுகின்றார்கள்...!

நாயகியை கொல்ல துரத்தும் வில்லன் நாயகிக்கு தெரியாமல் ஜிபிஎஸ்  கருவியை அவளிடம் சேர்க்கும் விதம்   சிறப்பான கற்பனை....!

அந்த ஜிபிஎஸ்  கருவியை நாயகன் உடனே கண்டுபிடித்து விடுகின்றார்  அந்த காட்சியை இன்னும் மிகைப்படுத்தி மெருகேற்றி இருக்கலாம்...! 

தனியறையில் இருக்கும் சூழலில் நாயகி நயகனை   சற்று அணைத்த படி நான் செத்தாலும் செத்துடுவேன் என்னோட வாழ முடியலியேன்னு உங்களுக்கு ஏக்கம் வரலாம் அதனால.....என அவனை நெருங்கும் அந்த காட்சி கிளு கிளுப்பாக இருந்தாலும் நாயகியின் கேரக்டர் சற்றே கண்ணிய குறைவாக ஆக்குவது போல உள்ளது....!

இறுதி காட்சியில் ஹோட்டலில் மெயின் வில்லனுடன் அவனை பற்றிய குற்ற ஆதாரங்களை வைத்து கொண்டு நாயகியை விடுவிக்க பேரம் பேசும் ஹீரோ.....அதே சமயம் வில்லனை கொல்ல போலீஸ் துணையுடன் வரும் மந்திரியின் மகன்....இன்னொரு புறம் நாயகியை கொல்ல துரத்திய வில்லன் எண்டர்...என உச்சகட்ட பரபரப்பு ....படமாக்கிய விதம் டாப் கிளாஸ்...!!!


மொத்தத்தில்  எந்த இடத்திலும் சோர்வில்லாமல் விறு விறுப்புடன் படம் பலத்த கைத்தட்டல் பெறுகின்றது...! 

மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும் கேபிள் சங்கர் மற்றும் அவரது அணியினருக்கு...!!!

>