நான் புகை பழக்கத்தை நிறுத்தியது ஏன் ? எப்படி ?

நான் புகை பிடிக்க ஆரம்பித்ததையும் பிறகு அந்த பழக்கத்தை விட்டதையும் பத்திசொல்லுறேன் ஆங்காங்கே கொஞ்சம் சுய புராணம் இருந்தா கொஞ்சம் பொறுத்துக்கங்க.

நான் முதன் முதலா சிகரெட் புடிக்க ஆரம்பிச்சது கோயம்புத்தூர்ல. நம்ம நகை தொழில கத்துகிட்டு அங்கேயே மூணு வருஷம் வேலை செய்ஞ்சுகிட்டு
இருந்தேன்.ஆரம்பத்துல ஒன்னு,ரெண்டுன்னு சிகரெட் புடிக்க ஆரம்பிச்சு அப்புறம் நல்லா முன்னேறி ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட் அளவுக்கு சிகரெட் புடிக்க ஆரம்பிச்சேன்.


அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு சொந்த ஊர் வந்து ஊர்ல வேலை.நான் வந்து ஒரு கிரிக்கெட் பிளேயர்.கிரிக்கெட்ல பாஸ்ட் பவுலர். நெறைய மேட்ச் ஆடி இருக்கேன்.இப்போ சிகரெட் புடிக்க ஆரம்பிச்ச பிறகு பழைய வேகமும்,துல்லியமும் இல்லாதது நல்லா தெரிஞ்சது.கண்டிப்பா அதுக்கு
சிகரெட் தான் காரணம்.அப்போ நெனைச்சுகிட்டேன்.

''மொதல்ல இந்த சிகரெட்ட நிறுத்தனும்''

ஒரு ரெண்டு நாள் சிகரெட் புடிக்கல அப்புறம் என்கூட விளையாடுற எல்லோருமே சிகரெட் புடிச்சாங்க சிகரெட் புடிக்காம இருக்க முடியல
பழைய படி ஆரம்பிச்சுட்டேன்.

ஊர்ல வேலை அதிகமில்ல, வறுமையும் பொருளாதார தேவையும் நம்மள சென்னைல கொண்டுவந்து போட்டுச்சி.

சென்னைல கொஞ்சநாள் சரியா தொழில் அமையாம இருந்தது.அப்புறம் கடவுள் கண்ண தொறக்கவே, தனியா கடை வைச்சு நல்லா பிக் அப் ஆச்சு!
சிகரெட் ஒரு பாக்கெட் ரெண்டு பாக்கெட் ஆச்சு.

இப்போ நல்லா பெரிய கடை புடிக்கிற அளவுக்கு முன்னேற்றம்.கடைல சிகரெட் புடிகிரதுக்காகவே ஒருஎடம் ஆஷ்ட்ரே எல்லாம் வைச்சு செட் பண்ணி இருந்தேன் அப்பப்போ ''தண்ணி'' வேற!

கொஞ்ச வருஷம் போச்சு வீட்டுல பொண்ணு பாக்க ஆரம்பிச்சாங்க, கல்யாணமும் ஆச்சு! தங்க மணி வந்து முதல்ல தங்க மணியாதான்
இருந்துச்சி அப்புறம்தான் ''சிங்க மணி'' ஆச்சு!

அதும் எவ்வளவோ சொல்லி பார்த்துச்சி நாம யாரு? சிங்கத்துக்கே டிமிக்கி கொடுப்போம்ல!



சரியா ஒரு வருசத்துல பொண்ணு பொறந்தது!

குட்டிபோட்டபூனையாட்டம்ஆஸ்பத்திரியசுத்திசுத்திவரேன்குட்டிபோட்ட பூனைஉண்மைதானே) எல்லாம்சொல்லுவாங்ககுழந்தைநம்மமுகத்த நல்லாபார்க்கரெண்டு,மஊனுநாள்ஆகும்அப்படின்னுஆனாஎன்பொண்ணு மறுநாளேஎன்முகத்தநல்லாபார்த்துநல்லாஒருசிரிப்புசிரிச்சதுபாருங்க! என் வாழ்நாள்லகண்டமிகசிறந்தகாட்சிஅதுதான்அப்படியேசொக்கிபோயிட்டேன்.

என் பொண்ணு சிரிச்ச அந்த சிரிப்புல என்னைய அப்படியே சுத்திகரிச்துபோல ஆச்சு! என்னோட தீவினையெல்லாம் அழிஞ்சு ஒரு சுத்தமான மனுசனா மாறுனதுபோல ஒரு உணர்வு!

ஆஸ்பிட்டல் வாசல்ல நின்னு ஒரு தம் அடிச்சுகிட்டே நினைச்சு பார்க்குறேன். ஒரு நிறைவு,மகிழ்ச்சி,சந்தோசம் உற்சாகம் வேற என்ன நல்ல விஷயங்கள் இருக்கோ அது எல்லாம் ஒன்னா சேர்ந்து எனக்கு கிடைச்ச மாதிரி இருக்கு.

சரி,இப்போ குழந்தை வளர்ந்து கிட்டு வருது. நான் சிகரெட் புடிக்கிறதும் அதிகமாகுது.

ஒரு வருஷம் போகுது, குழந்தைக்கு முடி எறக்கணும் எங்க ஊருலதான் முடி எறக்கணும்.எங்க ஊருக்கு பக்கத்துல அத்திவெட்டி அப்படின்னு ஒரு ஊரு இருக்கு அங்க ''பெரிய சாமி''கோயில் இருக்கு அங்கதான் நாங்க
பரம்பரையா முடி ஏறக்குறது எனக்கும் அங்கதான்
முடி எறக்குனது.

முடி எறக்கிட்டு எங்க ஊருல இருந்து சென்னைக்கு கிளம்புறோம் அப்போ சில பேரு ஒரே பரபரப்பா பேசிகிட்டு இருக்காங்க.

என்னன்னா? யாரோ செத்து போய்ட்டாங்களாம் பக்கத்து ஊருல சத்துணவு அமைப்பாளரா வேல செய்தவராம்.

ரெண்டு பேரு பேசிக்கிட்டு போறாங்க!


பாருப்பா அவனுக்கு முப்பதிரெண்டு வயசுதான் ஆகுது
திடீர்னு போய்ட்டான் ! ''ஹார்ட் அட்டாக்காம்''ஓவரா

தண்ணி அடிப்பானாம் சிகரெட்டா ஊதி தள்ளுவானாம்
கல்யாணமாகி ரெண்டு வருசம்தான் ஆகுது,எட்டு மாசத்துல
புள்ள ஒன்னு இருக்கு இப்படி அநியாயமா உட்டுட்டு
போய்ட்டானே பாவிப்பய !


சென்னைக்கு வந்துட்டோம்!
ரெண்டு நாள் போயிருக்கும் ஒரு கனவு

அடுத்த வரிகள எழுதும் போது ஒரு வலியோடுதான்
எழுதுறேன்!

அந்த கனவு ......

நல்ல வெயில் அடிக்குது அந்த வெயில்ல
என் மனைவி வேர்க்க விருவிருக்க நடந்து
போகுது.கிட்ட போய் பார்க்குறேன் கழுத்துல
தாலி இல்ல போட்டு பூ ஏதும் இல்லாம விதவை
கோலத்துல என் அன்பு மனைவி!இடுப்புல
என் செல்வ மகள் பசித்த முகம் கன்னமெல்லாம்
வத்திபோய் ஏக்கமான பார்வையோடு....


ஐயோ! திடுக்குன்னு முழிச்சு பார்க்குறேன் ரெண்டு பேரும்
நல்லா தூங்குறாங்க.

மனசு முழுக்க பயம்! பயம்! பயம்!


தூக்கமே வரல எப்போ தூங்கினேனோ தெரியல!

காலைல யார் கிட்டயும் ஒன்னும் சொல்லல!

''சிகரெட் புடிக்கிறத நிறுத்தனும்''

(ஒரு விஷயம் சிகரெட் புடிக்கிறத நிறுத்துரதால நான் நூறு வருஷம் வாழ்ந்து விடுவேன்னு சொல்லல! சாவு எப்படி வேணும்னாலும் வரலாம் ஆனா, சிகரெட் புடிக்கிரதால நாமே சாவ நோக்கி போறதா நினைச்சேன்
அதோட சிகரெட் புடிக்கிரதால திடீர் மரணம் ஏற்படலாம்
அப்படின்னு பயந்தேன் )

கடைல வந்து உக்காந்து யோசிக்கிறேன் கிட்ட தட்ட பத்து வருசமா சிகரெட் புடிக்கிறேன் எப்படி நிறுத்த!

என்கிட்ட எனக்கு புடிச்ச விஷயம் ஒன்னு இருக்கு!

நான் வந்து பால குமாரனோட தீவிர பக்தன் அப்படின்னு சொல்லலாம் .நெறைய விசயங்கள அவர் சொன்ன படி கடை பிடிக்கிறேன் .

அதுல ஒன்னு ''உன்னை நீயே விலகி நின்று வேடிக்கை பார்''

எனக்கு கடைல அதிக வேலை இருந்தா இத எப்படி செய்றேன் பார் அப்படின்னு எனக்குள்ளேயே ஒரு சவால் விட்டுக்குவேன் என் உள்ளேயே ஒருவன் அத வேடிக்கை பார்க்குரதுபோல நினைச்சுக்குவேன்.

அந்த வேலைல நான் ஜெயிச்சுட்டா உள்ள இருக்குற
அவன் வந்து பாராட்டிட்டு போவான்!

உள்ள இருக்குற அந்த அவனுக்கு நான் வைச்ச பேருதான்

''ஜீவன்''

இப்போ அவன் உதவி தேவை படுது சிகரெட் புடிக்கணும் அப்படின்னு என்னத்த தூண்டுற ''சைத்தான்'' எனக்குள்ள புகுந்து இருக்குது. அந்த சைத்தான தோக்கடிக்கனும் .

நான் ஜெயிக்கிறேனா இல்லையா அப்படிங்கிறத எனக்குள்ள அவன் கவனமா கவனிக்கிறான்.



''சிகரெட் புடிக்கணும் அப்படிங்கிற எண்ணத்த தூண்டுற
அந்த சைத்தான ஒவ்வொரு வினாடியும் சவாலுடன்
சந்திப்பது அப்படின்னு முடிவு பண்ணிட்டேன்

இதுக்கு எனக்குள்ள இருக்குற ''அவன்தான்''
நடுவர்.


முதல் நாள் ஒன்னும் முடியல ரொம்ப கஷ்ட்டப்பட்டு இருந்துட்டேன்.ரெண்டு நாள் மூணு நாள் போச்சு சிகரெட் புடிக்கல!சமயத்துல அந்த சைத்தான் பெரும் பலத்தோட வருவது போல இருக்கும் என் மனைவி குழந்தைய நினைச்சுக்குவேன், அந்த சைத்தான் இருந்த இடம் தெரியாம போய்டுவான்.உள்ள இருக்குற அவன் கைதட்டி பாராட்டுறான்.

இப்போ எனக்கு இருக்குற அடுத்த பிரச்சனை என் நண்பர்கள்! அவங்க எல்லோரும் சிகரெட் புடிக்கிறவங்க . நான் நினைக்கிறேன் அவர்களை
பார்ப்பதை தவிர்த்து விடலாம்னு,ஆனா உள்ள இருக்குற அவன் சொல்லுறான் சிகரெட் புடிக்கிறவங்க கூடவே இருக்கணும் ஆனா சிகரெட் புடிக்காம வரணும் அப்படின்னு!

நண்பர்கள் இருக்குற எடத்துக்கு போறேன் வழக்கம் போல சிகரெட் எடுத்து கொடுக்குறாங்க வேணாம் விட்டுட்டேன் அப்படின்னு சொல்லுறேன்!கிண்டலா ஒரு பார்வை நம்ம செட்டுலையே அதிகம் தம் அடிக்கிறது நீதான் உன்னால எல்லாம் விட முடியாது மிஞ்சி மிஞ்சி போனா ஒரு பத்துநாள் அடிக்காம இருப்பே அப்புறம் முடியாது எத்தன பேர பார்த்து இருப்போம்.

ச்சே! நம்மள பத்தி எவ்ளோ சீப்பா எடை போட்டு இருக்காங்க! அதுகூட நமக்கு உதவியாத்தான் இருக்கு.


ஆச்சு!வாரங்கள்போச்சு! மாதங்கள்போச்சு!

அந்த சைத்தான சாகடிச்சு சமாதி வைச்சு நாலு வருஷம் ஆச்சு என் வாழ்க்கைல நான் செய்ஞ்ச சாதனையா நினைக்கிறேன். இனிமே இந்த ஜென்மத்துல நான் சிகரெட் புடிக்க போறது இல்ல அது நிச்சயம்!


(குறிப்பு :என்னைவிட அதிகமா சிகரெட் புடிச்சவங்கள நான் பார்த்து இல்ல என்னாலேயே சிகரெட்ட விட முடியும்னா விடணும்னு நினைக்கிற எல்லோராலையும் கண்டிப்பா முடியும் )

>

மார்கழி நினைவுகள் ..!

மார்கழி அப்படின்னு சொல்லும்போதே மனசுல ஒரு ஜில்லும்,உடம்புல ஒரு குளிரும் உண்டாகுது ...! மார்கழியின் முழு அழகையும் அனுபவிக்கணும்னா அது எங்க ஊருமாதிரி ஒரு கிராமத்துலதான் முடியும்..! விநாயகனே வினை தீர்ப்பவனே இந்த பாட்டை எப்போ கேட்டாலும் மார்கழியின் அதிகாலை பொழுதுகள் நினைவுக்கு வந்துவிடும் எல்லா கோயில்களிலையும் இந்த பாட்டுடன்தான் துவங்கும் மார்கழி காலை.

மார்கழி கோலங்கள்

நான் சின்ன வயசு புள்ளயா இருந்தப்போ எங்க வீட்டுல கரண்ட் கிடையாது
அப்பக்கம் பக்கத்து வீடுகளிலையும் பெரும்பாலும் கரண்ட் இருக்காது .! தெருவில எல்லோரும் அதிகாலைல எந்திரிச்சு மண் எண்ணை விளக்கு வெளிச்சத்துல கோலம் போடுவாங்க நானும் சில சமயம் அந்த நேரத்துல எந்திரிச்சு எங்கம்மா கோலம் போடுறத வேடிக்கை பார்ப்பேன்..!

அப்புறம் கொஞ்ச வருஷம் கழிச்சு மெயின் ரோட்டுல உள்ள டீக்கடை க்கு தனியா போயி டீ வாங்கிட்டு வர்ற அளவுக்கு பெரிய பையனாயிட்டேன்.
காலைல கோலம் போடும் போது என்னைய எழுப்பி டீ வாங்கி வர சொல்லுவாங்க எந்திரிக்கவே மனசு இல்லாம எந்திரிச்சு ஒரு போர்வைய போர்த்திகிட்டு மெதுவா நடந்து போயி ஒரு சொம்புல வாங்கி வருவேன் .
வாதா மரத்து டீக்கடை அப்படின்னு ஒரு கடை இருக்கும் அதிகாலைலையே
நல்ல கூட்டம் இருக்கும் அந்த கடைல.


கோலம் போட்டு சாணியில புள்ளையார் செய்ஞ்சு கோலத்து நடுவில வைச்சு அதுமேல பரங்கி பூ வைப்பாங்க நான் சில சமயம் பரங்கி பூ பறிச்சு கொண்டுவருவேன். பரங்கி பூ காம்பு மெல்லிசா இருந்தா அந்தபூவில காய் காய்க்காது அந்த மாதிரிபூவதான் பறிக்க விடுவாங்க. சில பேரு பரங்கி பூ கூட நெறைய தும்பைபூவ பறிச்சு கொட்டி வைச்சு இருப்பாங்க தும்பை பூவ பறிக்க நெறைய பொறுமை வேணும் தும்பை செடி நல்லா பனியில நெனைஞ்சு இருக்கும் குளிரில பொறுமையா பறிக்கணும் தும்பைப்பூ அழகா வெள்ளயா இட்லி போல இருக்கும்.


மார்கழி காலை வெய்யிலுக்கு நெறைய வாடிக்கையாளர்கள் உண்டு..! குளிர் பொறுக்கமுடியாம வெய்யில் வந்தஉடன் வெய்யிலில் குளிர் காய்வது ஒரு சுகம் .மார்கழி காலை வெய்யிலுக்கு ஒரு நிறம் உண்டு மஞ்சள் கலந்த ஒரு பொன்னிறமாய் இருக்கும். பெரிய சிந்தனை வாதிபோல முகத்தை வைத்து கொண்டுவாய்திறந்து பேசகூட சோம்பல் பட்டு கொண்டு குளிர் காய்வதே ஒரு அலாதி சுகம் தான்.

பூ வாசம் வீசும் மார்கழி மாசம்

பொதுவாக கிராமப்புறங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு வாசனையை உணர முடியும். சித்திரை மாதத்தில் ஒரு வரட்சியுடன் கூடிய மாம்பூ,மற்றும் பனம்பூ வாசனை வீசும்.மழைகால மாதங்களில் சேற்று வாசனையுடன் கூடிய தவளைசத்தம் கேட்கும். மார்கழியில் ...... மழை பெய்யும்போது மண்வாசனை வருவதுபோல பனி பொழிவிலும் ஒருவகை மண்மணம் தோன்றும்..! அதுமட்டுமல்ல மார்கழியில் எல்லாவகை பூக்களுமே பூத்து குலுங்கும் . பெயர் தெரியாத பல காட்டுப்பூக்களும் பூத்து வாசனை வீசியபடி இருக்கும் .பனியில் நனைந்த புற்களும் ஒரு வாசனையை வெளிப்படுத்தும் இப்படி பனியில் நனைந்த மண்மணம்,ஒட்டுமொத்த பூக்களின் ஒரு கதம்ப மணம் ஈரமான புற்கள் வாசனை என மார்கழி முழுவதும் ஒரு ரம்மிய மணம்
வீசியபடி இருக்கும்.


நான் +2 படிக்கும் போது கடந்து போன மார்கழிய மறக்கவே முடியாது காலைல 5.30 க்கு டியூசன் னுக்கு போவேன் அது ஒரு பொற்காலம். மத்த நாள்களில் லேட்டா போனாலும் போவேன் ஆனா இந் மார்கழில மட்டும் சரியா அஞ்சு மணிக்கு எழுந்துடுவேன். காலைல அஞ்சு மணிக்கு எழுந்து குளிக்காம கொள்ளாம பல்லு வெளக்கி முகம் கழுவி பேர் அண்ட் லவ்லி போட்டுக்கிட்டு கிளம்பிடுவேன்.

பேர் அண்ட் லவ்லி யூஸ் பண்ண ஆரம்பிச்சது +1,+2 படிக்கும்போதுதான்
அப்போதான் முதன்முறையா பொம்பள புள்ளைங்களோடு சேர்ந்து படிச்சது .
ஆளு தேவாங்கு மாதிரி இருந்தாலும் மனசுக்குள் ஒரு ஹீரோன்னு நெனைப்பு அப்போ.

சரி விசயத்துக்கு வரேன் ..! மார்கழி காலைல தவறாம சீக்கிரம் எழுந்து போக காரணம் என்னன்னா ? நமக்கு வேண்டப்பட்ட புள்ளைங்க கோலம் போடுறத பார்க்கத்தான்...! லேட்டா போனா மிஸ் ஆயிடும்...! ஒரு பழைய சைக்கிள் வைச்சு இருந்தேன் நம்ம புள்ளைங்க போடுற கோலத்துல மட்டும் சைக்கிள் விடாம கொஞ்சம் ஒதுங்கி போனா அதுங்க நம்மள ஒரு தேங்க்ஸ் பார்வை பார்க்கும் பாருங்க அடடா ...! அதும் அந்த புள்ளைங்க நம்மள பார்க்கணும்னா நாம அந்த புள்ளைங்கள பார்க்க கூடாது ..! அந்த புள்ளைங்க போட்ட கோலத்த அட சூப்பரா இருக்கே ..! அப்ப்டிங்குரமாதிரி ஒரு லுக்கு உடனும் மறுநாள்ல இருந்து புள்ளைங்க நம்மள எதிர்பார்க் ஆரம்பிச்சுடும் ..!



டியுசனுக்கு நாங்கதான் குளிக்காம லுங்கி கட்டிக்கிட்டு போவோம் ஆனா பொம்பள புள்ளைங்க அப்படி இல்ல நல்லா குளிச்சுட்டு அதிகாலைலையே
ப்ரெஷ் ஆ ஜில்லுன்னு வருவாங்க அதுக்காகவே டியுசன மிஸ் பண்ண மாட்டோம்...!

ம்ம்ம் எல்லாம் போச்சு இப்போ கலண்டர பார்த்துதான் மார்கழி மாசம்னே தெரியுது ...!



.

>