எப்படி இருந்த நான் ..? திருமண நாள் பதிவு ...!

அதை ஒரு நந்தவனமாக நினைத்தேன்! ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தது!அதன் வாயில் கதவு அடைக்கப்பட்ட பிறகுதான் அது என்ன என்று புரிந்தது!இங்கே ஆனந்தமும் இருந்தது! ஆனால், இதன் எல்லைதான் பிடிக்கவில்லை! எல்லையற்று இருந்த என்னை எல்லைக்குள் கட்டுப்படுத்தியது வெறுப்பை தந்தது! முப்பதும்,அறுபதும் முடிந்துபோக ஐயோ என்றிருந்தது ..! வெளியே உள்ள நட்புகளும்,உறவுகளும் அன்னியப்பட்டு விடுமே என் கவலை வந்தது !
என்னைவிட உனக்கு யாரும் முக்கியமில்லை! உடனிருந்த ''அது'' தர்க்கம் செய்தது! கோபம் வந்தது! ச்சே!! இதையா விரும்பினோம்? இந்த கட்டுப்பாடு பிடிக்கவில்லை! வெறுப்பிலும்,இறுக்கத்திலும் நாட்கள் கழிந்தது!

பிறகு...! எனக்கும் அதற்கும் பரிசாக வந்த அந் ஒன்றுதான் என்னை முற்றிலும் மாற்றியது. ஆனந்தம் அள்ளியது


.
எனக்கு சிறையாய் பட்ட இந்த இடம் வந்த ஒன்றிற்கு பேருலகமாய் இருந்தது.தன் உலகை அந்த ''ஒன்று'' என் கையை பிடித்து சுற்றி காட்டியது.நானும் அந்த ஒன்றுடன் ஒன்றாகி ஒன்றிபோனேன்.

எனக்கும் இப்போது இதுவே உலகமானது...
!

இதையெல்லாம் கண்ட என்னுடன் தர்க்கம் செய்த ''அது'' மவுனமாக புன்னகைத்து கொண்டது. கால போக்கில் அந்த ஒ
ன்றுடன் இன்னொன்றும் கூடி போக குதூகலத்தில் துள்ள வைத்தது.



இந்த பேருலகம் இப்போது எனக்கு பிரபஞ்சமானது. சந்தோஷமும் , உ
ற்சாகமுமாய் நாள்கள் கழிகிறது. இப்போது எனக்கு எந்த தடைகளுமில்லை..! ஆனால் நான் இந்த உலகை விட்டு எங்கும் செல்வதுமில்லை ...!





நிறைவடைகிறது 21-10-2011 உடன் ஒன்பது வருடங்கள்....!!!!!!!

>

இதுவும் எனது தளம் தான்..!


ரத்தின கற்களை பற்றி எனக்கு கொஞ்சம் அனுபவம் இருப்பதால் இந்த கண்ணாடி தளத்திலேயே ரத்தின கற்கள் பற்றி எழுதலாம் என நினத்து இருந்தேன் ஆனால்..!ஒன்றிரண்டு பதிவுகளில் கற்களை பற்றி விளக்கி விட முடியாது அதிக பதிவுகள் வரும் , மேலும் சில சங்கடங்களும் வரும்

அதாவது அலைபாயும் மனதை அடக்க இந்த கல்லை அணியலாம் என முதல் நாள் சொல்லிவிட்டு மறு நாள் நமீதா ரசிகன் என்றோ அல்லது குடிப்பதை பற்றியோ பதிவிட்டால் முன்னுக்கு பின் முரணாக இருக்கும்.அது வேறு இதுவேறு..! எனவேதான் அதிஷ்ட கற்களை பற்றி தனியாக ஒரு தளம் உருவாக்கினேன்.இந்த தளம் உருவாக்கி ஒரு வருடம் ஆக போகின்றது.


30 பதிவுகள் அதில் எழுதி இருக்கின்றேன் . இது என் தளம் என்று ஒரு சிலரை தவிர யாருக்கும் தெரியாது.! ஆரம்பத்திலேயே இது என் தளம் என சொல்லி இருந்தால் நண்பர்கள் ஆதரவு அதிகம் கிடைத்து இருக்கும் ஆனால்இதன் உண்மையான நிலை எனக்கு தெரியாமல் போய் இருக்கும் குறைந்த பட்சம் ஒரு 50 பாலோயர் ஆன பிறகு வெளிபடுத்த இருந்தேன்.இப்போது 50 பாயோலர் ஆகிவிட்ட படியால் இதனை வெளிப்படுத்துகிறேன்.

சில ஜோதிட நண்பர்களின் உதவி கொண்டு பலருக்கு அதிஷ்டகல் பரிந்துரை செய்யபட்டும் உள்ளது இந்த தளத்தின் மூலம்.





>

நன்றி ...! நன்றி ..! மிக்க நன்றி ...!

எனது இந்த பதிவிற்கு இந்த அளவிற்கு வாழ்த்து மழை கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை ..! ஆனால் ஆசைப்பட்டேன் இப்படியெல்லாம் நடக்க வேண்டுமென ..! நான் ஆசைப்பட்டதைவிட அதிகமாகவே வாழ்த்து மழை குவிந்தது . கடந்த இரண்டு நாட்களாக ஒரு நிறைந்த மகிழ்ச்சி கடலில் நீந்திக்கொண்டு இருந்தேன் . உங்கள் ஒவ்வொருவரின் வாழ்த்துகளும் என் இதயத்தை வருடியது ..! அப்போது இருந்த என் மனநிலையை சொல்லி விளக்க முடியாது ..!

கூகுள் பஸ்ஸில் இந்த பதிவை ரீஷேர் செய்த நண்பர்கள், லைக் செய்தவர்கள் நட்புகள் , அங்கே வாழ்த்து தெரிவித்தவர்கள் , பதிவில் வாழ்த்தியவர்கள் என எல்லோரையும் நினைத்து பார்க்கும் போது வலையுலக வாழ்வின் அர்த்தம் புரிகிறது . என்னை பொறுத்தவரை வலையுலக நண்பர்கள் அனைவரும் வாழ்த்துவதில் வள்ளல்கள்..!

என் ஒட்டுமொத்த உணர்வையும் நன்றி என்ற ஒற்றை சொல்லில் சுருக்கி சொல்கிறேன் ..!

நன்றி...! நன்றி.....! நன்றி .....!

>

வலையுலக நட்புகளின் வாழ்த்துகளையும், ஆசிகளையும் வேண்டி ..!


சொன்னவுடன் தெரிந்து கொள்ளும் அளவுக்கு மதுக்கூர் பெரிய ஊரில்லை. தஞ்சை மாவட்டத்தின் சிற்றூர்களில் ஒன்று. அங்கே நகைத் தொழிலைத் தவிர வேறெதுவும் தெரியாத மிகச் சாதாரண குடும்பம்.

+2 முடித்து கோவையில் 3 மாதம் மெஷின் கட்டிங் டிரைனிங் பிறகு அங்கேயே 1500 ரூபாய் சம்பளத்தில் வேலை . காந்தி பார்க் - பொன்னையராஜபுரம் அருகில் ராசி பில்டிங் என்ற ஒரு மேன்ஷன் மாதம் 250 ரூபாய் வாடகையில் ஜாகை. நாஸ் தியேட்டர் அருகில் ஒரு மாடியில் நல்ல மெஸ் மாதம் 450 ரூபாய்க்கு மூணு வேளை சாப்பாடு போட்டார்கள் கிட்ட தட்ட இரண்டரை வருடம் கோவை வாசம்தான்.

அதன் பிறகு சொந்த ஊர்... கடுமையாக போராடி நகைக்கான கட்டிங் மெஷின் வாங்கி சொந்த கடை. ம்கூம் விளங்கவில்லை வேலை வாய்ப்பு இல்லை இருக்க இருக்க கடன்தான் அதிகரித்தது. மெஷினை ஊரிலேயே வைத்து விட்டு. சென்னை பட்டணம் விஜயம்.

அண்ணன் சின்ன வயதிலேயே சென்னையில் செட்டில். அவருடன் நகைக்கு கல்பதிக்கும் தொழில் பழகினேன். அண்ணன் புதிதாய் ஒரு தொழில் தொடங்க பலத்த நஷ்ட்டம். மீண்டும் கடன் போராட்டம். கடும் சோதனை.

ஊரில் இருக்கும் மெஷினை கொண்டுவந்தால் விற்று எதாவது ஒரு சிறிய கடனையாவது அடைக்கலாம் என்ற எண்ணத்தில் சென்னைக்கு மெஷினை கொண்டுவந்தாயிற்று. அதும் முடியவில்லை.அடிமாட்டு விலைக்கு கேட்க விற்க மனமில்லை.

அப்போது மிஷினை வீட்டிலேயே செட் செய்து சின்ன சின்ன வேலைகள் செய்து எளிய ஒரு வருமானம். அதன் பின்னர் மாத வாடகை 250 க்கு சிறிய கடை பிடித்து ஒரு பழைய சைக்கிளுடன் துவங்குகிறேன் என் பயணத்தை..1998 ல்.! மெல்ல மெல்ல பிக்கப் ஆனது . அதன் பிறகு வேலை வேலை வேலைதான்..! எதிர்பார்க்காத அளவுக்கு வேலை. காஞ்ச மாடு கம்புல புகுந்த மாதிரி வெறித்தனமாக இரவு பகல் என வேலை பார்த்தேன்.! துணைக்கு யாருமில்லை நானே தொழிலாளி ,நானே முதலாளி..!

என்னை பொறுத்தவரை அதிஷ்ட்டம் என்பது யாதெனில் முழுக்க முழுக்க உழைக்க வாய்ப்பு கிடைப்பதுதான்.! ஒரு மெஷின் இரண்டு மெஷின் ஆனது வேலைக்கு ஆள் வைத்து கொண்டேன். நிழல்களின் நாடகம் எல்லாம் நிஜங்களின் தரிசனம் ஆனது.! பெரிய கடை பிடித்தேன் மேலும் சில மிஷின்கள்
வாங்கினேன் .ஆட்களும் வைத்து கொண்டேன் ..!

அதன் பிறகு கல்யாணம் 2002ல். 2003 ல் முதல் பெண்குழந்தை நான்காண்டு இடைவெளியில் அடுத்த பெண் குழந்தை .லோ கிளாஸ் பொருளாதார நிலையில் இருந்து கடை வாடகை,வீட்டு வாடகை,ஆட்கள் சம்பளம்,வீட்டு செலவு என மிடில் கிளாஸ் சராசரியில் வந்து நிற்கிறேன்.பொருளாதார பாதையில் கடந்த 2,3 ஆண்டுகளாக பெரிய ஏற்றம் எதுமில்லாமல் சமவெளி பயணம்தான்.


தற்போது..!

எனக்கு ஆரம்ப காலம் முதலே ரத்தினக்கல் வியாபாரத்தில் அனுபவம் உண்டு. மேலும் துளியூண்டு ஜோதிட அறிவும் உண்டு. அந்த அனுபவ அடிப்படையில் என் கடையிலேயே என் சின்ன மகள் அட்ஷயநந்தினி பெயரில் அட்சயா ஜெம்ஸ்&ஜுவல்ஸ் என்று உயர்தர ரத்தினகற்கள்,முத்துமாலை,பவழமாலை முதற்கொண்ட அனைத்து வகை ரத்தின மாலைகள், மற்றும் உப ரத்தின கற்களின் விற்பனையை துவங்குகிறேன்.



மேலும் ஆர்டரின் பேரில் நகைகள் செய்து கொடுக்கவும் திட்டமிட்டுள்ளேன்.! எனது இந்த புதிய முயற்சி செழிக்கவும் வெற்றி அடையவும் தங்களின் மேலான வாழ்த்துகளையும் ,ஆசிகளையும் வழங்குங்கள் நண்பர்களே...!



....................................................

>