ஒரு பீரும்! நாலு பேரும்!!

''குடி குடியை கெடுக்கும் குடிபழக்கம்
உடல் நலத்திற்கு தீங்கானது''

தண்ணி அடிக்கிறதை பத்தி ரொம்ப நாளா பதிவெழுத ஆசை! எழுதலாமா வேணாமான்னு ஒரே யோசனை கடசில எழுதிடலாம்னு முடிவு பண்ணியாச்சு! கூட,குறைய இருக்கும் அட்ஜெஸ் பண்ணிகோங்க!

அப்போ எனக்கு பதினேழு,பதினெட்டு வயசு இருக்கும். எங்க வீட்டு பக்கம் இருக்கும் சிலபேர் சின்னதா ஒரு டூர் கிளம்பினாங்க! ஏற்பாடு பண்ணினது என்னை விட வயசு கொஞ்சம் அதிகமுள்ள அண்ணனுங்க! கல்லணை,ஸ்ரீ ரங்கம்,சமயபுரம்,முக்கொம்பு மலைகோட்டை இங்கெல்லாம் போறதா ப்ளான். அதிகாலைல கிளம்பி நைட் வந்துடலாம்.வீட்டுல தொல்லை பண்ணி பர்மிசன் வாங்கியாச்சு என் வயசு பசங்க ஒரு அஞ்சாறுபேர் மீதி எல்லாம் பெரியவங்க.மொத்தம் பதினாறு பேர் வேன்ல கிளம்பினோம்.


அதிகாலை கிளம்பி கல்லணை பார்த்துட்டு, ஸ்ரீ ரங்கம் போயிட்டு,அடுத்து சமயபுரம் பார்த்தாச்சு. அடுத்து முக்கொம்பு போற ப்ளான்! சமயபுரம் போயிட்டு திரும்புறோம் வேன் ஒரு ஒயின் ஷாப் பக்கத்துல நிக்குது.அண்ணன் மாருங்க எல்லாம் ஒண்ணுகொண்ணு பார்த்துகிட்டு உனக்கு என்ன பீரா?சரக்கா? ன்னு விவாதம் நடக்குது!


நம்ம வயசு செட்டுல கிருஷ்ண மூர்த்தி!கிருஷ்ண மூர்த்திதான் முதல்ல ஆரம்பிச்சது.டேய் நாம பீர் குடிப்போமா? எனக்கு பயமும்! ஆசையும்! முதல்ல வேணாம்னு தோணிச்சு அப்புறம் முடிவு பண்ணிட்டோம் பீர் குடிக்க. நான்,கிருஷ்ண மூர்த்தி,பிரபாகரன் மூணு பேரும் .உடனே பாரதின்னு ஒருத்தன் அவன் நானும் வரேன்னு சொல்ல இப்போ ரு பீரு! நாலு பேரு!! முக்கொம்பு போயாச்சு! அண்ணன் மாருங்க எல்லாம் வேன்லயே அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க! நாங்க நாலுபேரும் பீர் பாட்டில வைச்சுகிட்டு மறைவான இடம் தேடி அலையுறோம். ஒரு படிக்கட்டுக்கு கீழ போய் மறைவா நின்னுகிட்டோம் கிருஷ்ண மூர்த்தி பல்லால கடிச்சு பாட்டில தொரக்குறான்.புஸ்ஸ்ஸ்ஸுனு ஒரே நுரையா அடிக்குது ஐயய்யோ எல்லாம் நுரையா போய்ட போகுதேன்னு எனக்கு பயம்.அப்படியே பாட்டில சாய்ச்சு புடிச்சு நுரை அடங்கினதும் குடிக்க போறோம் அப்படியும் கீழ கொஞ்சம் போய்டுச்சு. பாட்டில் மேல அளவு வைச்சுகிறோம்.ஒருத்தருக்கு இவ்வளவுன்னு முதல்ல கிருஷ்ணமூர்த்தி. .அடுத்து பாரதி பாட்டில் மேல கட்டை விரல வைச்சு அடையாளம் பண்ணிக்கிட்டு குடிக்கிறான் அடுத்து நான் அன்னிக்கு நான் அடிச்ச அந்த முதல் நாள் நல்ல சுபயோ சுபதினமா இருந்திருக்கும் போல. ஒருவாய் குடிக்கிறேன் ஒரே கசப்பு நான் நினைச்ச சுவை இல்ல அடுத்த வாய் குடிக்கிறேன் லேசா குமட்டுரதுபோல இருக்கு பிரபாகரன் பார்த்துகிட்டே இருக்கான் எங்க அவன் பங்க குடிசிரபோரானோன்னு பார்த்துகிட்டே இருக்கான் என்னால குடிக்கவும் முடியல கொடுக்கவும் மனசு வரல.மல்லு கட்டி குடிச்சுட்டேன்.பிரபாகரனும் குடிச்சிட்டான்.

லேசா போதை வர்றமாதிரி இருந்தது! ஆனா போதை வரல ரெண்டுவாட்டி பீர் ஏப்பம் வந்தது அப்போ ஒரு பீல் வந்தது போதை மாதிரி! பீர் அடிச்சதால வந்த மன பிராந்தியா இருக்கும் போல. அன்னிக்கு கொஞ்சமா குடிச்துதான் பீர் மேல ஆசை அதிகமா ஆயிடுச்சி ஊருக்கு வந்து ஒரு பீர் வாங்கி ரெண்டுபேர்,அப்புறம் ரெண்டு பீர் வாங்கி முணு பேர்னு நல்ல முன்னேற்றம்.பீர்ல இருந்து பிராண்டி விஸ்கிக்கு மாறுனதுக்கு காரணம் பண பற்றா குறைதான்.ஒரு ''ஓல்ட் மங்க்'' புல் வாங்கி ஏழு பேர் அடிச்சு இருக்கோம்.

பதிவு வேற பெருசாஆயிட்டே போகுது ம்ம் தண்ணி அடிக்கிறத பத்தி ரெண்டு பதிவா போடமுடியும்? ஆரம்பிச்சாச்சு முடிச்சுடுறேன் அட்ஜெஸ் பண்ணிகோங்க!!

வருசங்கள் போச்சு சென்னை வந்தாச்சு ஒரு குவாட்டர முழுசா அடிக்கிற அளவுக்கு டெவலப் மென்ட். எங்க ஏரியா தாண்டி எங்கயாச்சும் ஒதுக்கு புறமா இருக்குற பாருக்கு போவோம் ஒரு நாலைஞ்சு பேர். அப்போ அங்க ஒருத்தர அடிக்கடி மீட் பண்ணுவோம் கொஞ்சம் தூரத்து சொந்தம்! எங்க பக்கம் திரும்பி கேவலமா ஒரு பார்வை பார்ப்பாரு! அப்புறம் கமுக்கமா ஒரு கட்டிங் உட்டுட்டு போய்டுவாரு.

அவர் யார் தெரியுமா? தெரியுமா? தெரியுமா? அவர்தான்!










சி( )ங்க மணியோட அப்பா!!!

எனக்கு பொண்ணு பாக்குறப்போ அவங்க வீட்டுல பொண்ணு இருக்கு கேப்போமான்னு கேட்டாங்க! எனக்கு அந்தாளு பொண்ணு கொடுக்க மாட்டார்னு நிச்சயமா நினைசேன்! ஆனா? அவர் ஜென்டில் மேன் ஓகே சொல்லிட்டாரு. இந்த லட்சணத்துல அவர் என்னை பார்ல பார்ப்பேன்னு வீட்டுல வேற சொல்லி இருக்காரு!



இப்போவெல்லாம் நான் அதிகம் குடிக்கிறது இல்ல வாரத்துல ஒரு நாள்தான் சனி,ஞாயிறு மட்டும் அதென்ன ஒருநாள் ஆனா சனி ஞாயிறு? அதாவது ஒரு வாரத்துல முதல் நாள் அடுத்த வாரத்துல கடைசிநாள்!

திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி

அப்படி!!

வெளில எல்லாம் போய் அடிக்கிறது இல்ல வீட்டுலதான் சிங்க மணிகிட்ட திட்டு வாங்கிகிட்டே. இப்போ எனக்கு ஒரு சிக்கல் என்னன்னா என் பொண்ணுக்கு ஆறு வயசு ஆக போகுது இதுவரைக்கும் இருமல் மருந்துன்னு சொல்லிசமாளிசாச்சு! இனிமே அதுக்கு வெவரம் தெரிஞ்சுடும். இப்போ நான் என்ன பண்ணுறது எங்க வைச்சு அடிக்கிறது! ( பார்ல போய் அடிச்சா இப்போ இமேஜ் பிராப்ளம் அதோட வண்டி ஓடிக்கிட்டு வீட்டுக்கு வரணும் )

யாராச்சும் யோசனை சொல்லுங்க!!!



----------------------------------------------------------------




>

40 comments:

நட்புடன் ஜமால் said...

ஏன் ஏன் ஏன்

மங்கை said...

//லேசா போதை வர்றமாதிரி இருந்தது! ஆனா போதை வரல ரெண்டுவாட்டி பீர் ஏப்பம் வந்தது அப்போ ஒரு பீல் வந்தது போதை மாதிரி!////

ஹா ஹா ஹா...சூப்பர்..

வரலைன்னு சொன்னா ஒரு மாதிரி பார்ப்பாங்கன்னு சொன்னீங்களோ...
ஹ ஹா

எம்.எம்.அப்துல்லா said...

//யாராச்சும் யோசனை சொல்லுங்க!!!//

நான் சொல்லட்டா....நிறுத்திருங்கப்பு :)

உங்க பதிவப் படிச்சு சிகரட்ட நிறுத்துனவன் நான்.

மங்கை said...

பதிவு போட்டு ஐடியா கேட்கறீங்களா.. . இது நல்லா இருக்கே

குடுகுடுப்பை said...

அதான் செந்தில் இருக்கானே. அவனுக்கு தெரியாத இடமா?

நட்புடன் ஜமால் said...

தண்ணி அடிக்கிறதை பத்தி ரொம்ப நாளா பதிவெழுத ஆசை!

\\

அடிச்சிட்டா அடிக்காமலா

நட்புடன் ஜமால் said...

\\அவர் யார் தெரியுமா? தெரியுமா? தெரியுமா? அவர்தான்!

சி( த )ங்க மணியோட அப்பா!!!\\


ஹா ஹா ஹா

harveena said...

பிநிட்டேன்க,,
ஒரு பீரும்! நாலு பேரும்!!

bodhai la bill aa? haha haha
நாலா, அஞ்சா மடளம்ள ;-) he he he

nanum erukane,,

நட்புடன் ஜமால் said...

\\ எம்.எம்.அப்துல்லா said...

//யாராச்சும் யோசனை சொல்லுங்க!!!//

நான் சொல்லட்டா....நிறுத்திருங்கப்பு :)\\

நானும் கூவிக்கிறேன் ...

இராகவன் நைஜிரியா said...

// ''குடி குடியை கெடுக்கும் குடிபழக்கம்
உடல் நலத்திற்கு தீங்கானது''//

ஆம் உடல் நலத்திற்கு தீங்கானதுதான். அதனால் விட்டு விட வேண்டியதுதான்.

தாரணி பிரியா said...

எல்லா பொண்ணுகளுக்கும் அப்பாதான் ரோல் மாடல் ஹீரோ எல்லாமே. பொண்ணுகளுக்காக நிறுத்திடுங்க. சிகரெட்டை நிறுத்தியாச்சுதானே. அதே போல இதையும் நிறுத்திடுங்க‌

வால்பையன் said...

சேம் ப்ளட் தல!
நானும் பீர்ல தான் ஆரம்பிச்சேன்!
இப்போ ஒரு ஃபுல்லு வரைக்கும் போகுது!
என் மாமனாருக்கு நான் தண்ணி அடிப்பது தெரியும். ஏன் என் சொந்தகாரனுங்க எல்லொருக்கும் தெரியும்!
நானும் சனி,ஞாயிறு மட்டும் தான்!

என் பொண்ணுக்கு ஏழு வயசு அதனால தூங்குன பிறகு தான்!

ஜீவா said...

பீர்ல இருந்து பிராண்டி விஸ்கிக்கு மாறுனதுக்கு காரணம் பண பற்றா குறைதான் ////



சிரிப்பு வந்தது ஜீவன் . நன்றாக இருந்தது உங்களின் பதிவு .

தோழமையுடன்
ஜீவா

ஜீவா said...

//யாராச்சும் யோசனை சொல்லுங்க!!!//

நான் சொல்லட்டா....நிறுத்திருங்கப்பு :)


// I also agree it . pls stop it

நசரேயன் said...

ஹும்.. தண்ணி அடிக்கதை விடுங்க.. நான் எல்லாம் பாட்டிலை பார்த்து பல வருஷம் ஆச்சி, நீங்க குடிக்க ஐடியா கேட்கீங்க, இதெல்லாம் நல்லா இல்லை, ஒரே வயத்தெரிச்சலா இருக்கு

ராமலக்ஷ்மி said...

//
யாராச்சும் யோசனை சொல்லுங்க!!!//

யோசனைதானே:)? அப்துல்லா சொல்லும் அதே யோசனைதான்.. 'நிறுத்திடுங்க'!!!

புதியவன் said...

//யாராச்சும் யோசனை சொல்லுங்க!!!//

'குடி குடியை கெடுக்கும் குடிபழக்கம்
உடல் நலத்திற்கு தீங்கானது''

அண்ணா இது தான் என்னோட யோசனை...

புகை பிடித்ததை விட்ட மாதிரி இதையும் விட்டு விடுங்க...

அ.மு.செய்யது said...

//வருசங்கள் போச்சு சென்னை வந்தாச்சு ஒரு குவாட்டர முழுசா அடிக்கிற அளவுக்கு டெவலப் மென்ட்//

இதுவன்றோ வளர்ச்சி !!!!!!

குடந்தை அன்புமணி said...

இந்த விளையாட்டுக்கு நான் வரலை.

Rajeswari said...

அண்ணா...!!!!!
என்ன இது??

Rajeswari said...

கொஞ்சம் கொஞ்சமா நிறுத்திடுங்க...
Health is wealth

Rajeswari said...

பதிவுல இருக்கிற ஊறுகாய பார்க்கும் போது..ஷ்ஷ்ஷ்...சூப்பர்

தேவன் மாயம் said...

லேசா போதை வர்றமாதிரி இருந்தது! ஆனா போதை வரல ரெண்டுவாட்டி பீர் ஏப்பம் வந்தது அப்போ ஒரு பீல் வந்தது போதை மாதிரி! பீர் அடிச்சதால வந்த மன பிராந்தியா இருக்கும் போல. அன்னிக்கு கொஞ்சமா குடிச்துதான் பீர் மேல ஆசை அதிகமா ஆயிடுச்சி ஊருக்கு வந்து ஒரு பீர் வாங்கி ரெண்டுபேர்,அப்புறம் ரெண்டு பீர் வாங்கி முணு பேர்னு நல்ல முன்னேற்றம்.பீர்ல இருந்து பிராண்டி விஸ்கிக்கு மாறுனதுக்கு காரணம் பண பற்றா குறைதான்.ஒரு ''ஓல்ட் மங்க்'' புல் வாங்கி ஏழு பேர் அடிச்சு இருக்கோம்./////

எப்படி முன்னேறினீர்கள் என்பதை படிப்படியா சொல்லி இருக்கீங்க!!!

தேவன் மாயம் said...

எப்படி நிறுத்த்ப்போகிறீர்கள்?
எல்லோரும் கேட்கிறார்களே?

அப்துல்மாலிக் said...

//thevanmayam said...
எப்படி நிறுத்த்ப்போகிறீர்கள்?
எல்லோரும் கேட்கிறார்களே?
/

எப்போ குடிக்கிறதை வுடபோறீங்க‌

அடுத்த பதிவு குடி குடிப்பதை எப்படி நிறுத்துவது???
அப்படினு ஒரு பதிவு விரைவில் எதிர்பார்க்கிறோம் தல‌

http://urupudaathathu.blogspot.com/ said...

எனக்கு இப்பவே போதை கண்ண கட்டுதே

http://urupudaathathu.blogspot.com/ said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்

முரளிகண்ணன் said...

சுவையான நடையில் சிறப்பான படங்களுடன் நல்ல பதிவு

ஹேமா said...

குடிக்காதீங்க இனி.விட்டிடுங்க.இந்த யோசனை பிடிச்சிருக்கா...!

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆனாலும் உங்களுக்கு ரொம்ப தைரியம்தான்..

மொதல்ல பீரைப் பத்தின பதிவு, அப்புறம் அதுல தங்கமணியோட அப்பாவை கோத்துவிட்டது.

புஸ்ஸ்ஸ்ஸுனு ஒரே நுரையா அடிக்குது ஐயய்யோ எல்லாம் நுரையா போய்ட போகுதேன்னு எனக்கு பயம்.//
ஆஹ்ஹா
ரொம்ப நேரம் சிரிச்சேங்க.
சான்ஸே இல்ல போங்க.

அப்போ ஒரு பீல் வந்தது போதை மாதிரி! பீர் அடிச்சதால வந்த மன பிராந்தியா இருக்கும் போல.//
மனப்ப்ராந்தில என்னன்ன ரவுசு பண்ணீங்க..
அதுக்கு ஒரு பதிவு உண்டா...?

/யாராச்சும் யோசனை சொல்லுங்க!!!//

எம். எம் அப்துல்லா அண்ணன் சொன்ன யோசனையை வழிமொழிகிறேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

பீர்ல இருந்து பிராண்டி விஸ்கிக்கு மாறுனதுக்கு காரணம் பண பற்றா குறைதான் ////


இப்படி ஒன்னு இருக்கா,
உடலை கெடுத்துக்கறதுக்குன்னு முடிவாகிடுச்சுன்னா பீர் என்ன, பிராந்தி என்ன, பணப்பற்றாக்குறைதான் என்ன.

எல்லாமே ஒன்னுதான்.

S.A. நவாஸுதீன் said...

எம்.எம்.அப்துல்லா said...

//யாராச்சும் யோசனை சொல்லுங்க!!!//

நான் சொல்லட்டா....நிறுத்திருங்கப்பு :)

உங்க பதிவப் படிச்சு சிகரட்ட நிறுத்துனவன் நான்.

Jeevan Sir,

ரொம்பவும் சிந்திக்க வேண்டிய ஒன்று.

நிதானமா இருக்கும்போது

RAMYA said...

ஜீவன் உங்க பதிவை படிச்சுட்டு அப்படியே உக்காந்துட்டேன் போங்க

சிகெரெட் புடிக்கரத்தை நிறுத்தவே ரொம்ப பீல் பண்ணி ஒரு பதிவு போட்டீங்க.

சரி நம்ப ஜீவன் இருந்த ஒரே பழக்கமான சிகரெட்டை நிறுத்திட்டாரு.

ஜீவன் சொன்னபடியே நடந்ததாலே ரொம்ப சமத்துன்னு நினைச்சிகிட்டு இருந்தேன். கடைசிய்லே இப்படியா???

நீங்க என்னாடான்னா ?? சிங்கமணி அப்பா முன்னாடியா??

உங்க மேலே என்ன நம்பிக்கை அதற்கு பிறகும் பொண்ணு கொடுத்திருக்காரு. பாவம் அவரு.

இருமல் மருந்தா? ஐயோ! பயந்து வருதே.

என்ன குழந்தைங்க இருக்கற இடத்துலே, அதுவும் இந்த காலத்து குழந்தைங்க ரொம்ப வெவரம். உஷாரா இருக்கணும்.

ம்ம் ஒன்னும் சரி இல்லை. நடக்கட்டும் நடக்கட்டும்.

மொதல்லே ஒரு பீர் பாட்டில், அதை திறக்கும் போது ரொம்ப உஷாரா நொரையோட பீர் கீழே போய்டுமோன்னு ஒரு பதை பதைப்பு. அது சரி :)

அந்த அண்ணங்க எல்லாரும் உங்களை கூட சேர்த்திருக்கக் கூடாது :))

ஸ்டேப் பை ஸ்டேப் முன்னேற்றம் வேறே!!

வேண்டாம் இது கொஞ்சம் கூட நல்லா இல்லே.

RAMYA said...

ரூம் போட்டு சினிமா கதைகளும், பிசினஸ் Develop பண்ணவும் ஐடியா பரிமாரிக்குவாங்க.

நீங்க என்னடான்னா பதிவு போட்டா ஐடியா கேக்கறீங்க ??

அப்துல்லா அண்ணா என்ன சொல்லி இருக்காரு, படிச்சீங்களா??

அதை நான் கன்னா பின்னாவென்று வழிமொளியறேன்.

முடிந்தால் உருண்டு பிரண்டு வழிமொளியறேன் :))

RAMYA said...

//லேசா போதை வர்றமாதிரி இருந்தது! ஆனா போதை வரல ரெண்டுவாட்டி பீர் ஏப்பம் வந்தது அப்போ ஒரு பீல் வந்தது போதை மாதிரி!////

பீர் ஏப்பம் வரும் தலையிலே ஒரு குடம் துணியை எடுத்து ஊத்தினா
எல்லாம் சரியா போகும் :))

சிங்கமணி கிட்டே இதே சொல்லி ட்ரை பண்ண சொல்லணும்.

தமிழ் அமுதன் said...

வருகை தந்து! கருத்து தெரிவித்து, ஆலோசனை வழங்கிய அனைத்து
நட்புகளுக்கும் நன்றி!!

அமுதா said...

பெரும்பாலோர் கூறியது போல் நானும் கூறுகிறேன் ... நிறுத்திடுங்க...

SK said...

:) :) :)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நிறுத்திருங்கப்பு

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நிறுத்திருங்கப்பு