என்னை திருடியவர்கள்..... தொடர் பதிவு

இதற்க்கு முன்னர் ''என்னை கவர்ந்தவர்கள்'' பதிவிற்கு அழைத்த மதிப்பிற்குரிய திரு ,ராகவன் அண்ன் அவர்கள் இப்போது என்னை திருடியவர் பதிவிற்கு அழைத்து உள்ளார்.அவருக்கு என் நன்றிகள்.....

என்னை கவர்ந்தவர்கள் பதிவில் மாவீரன் நேதாஜி பற்றி எழுதி இருந்தேன் என்னை திருடியவர் என்றாலும் நேதாஜி பற்றித்தான் எழுத தோன்றுகிறது.ஆனால் ? இப்போது என்னை திருடியவராக நான் எழுத இருப்பது செஞ்சோற்று கடனுக்காக தன் குடும்பத்தினரையே எதிர்த்து போரிட்ட கொடை வள்ளல் கர்ணன் பற்றி!




ஒவ்வொரு பூவிற்கும் ஒவ்வொரு வாசம்

நாம் சிலரை பார்த்து இருப்போம் அதாவது,யாரவது எதாவது செய்து பெரியபேர் வாங்கிவிட்டால் ! இதென்ன பிரமாதம் நானாக இருந்தால் இதைவிடசிறப்பாக செய்து இருப்பேன் என சொல்லுவார்கள் . ஏன் நமக்கு கூட அப்படி சில சமயம் தோன்றி இருக்கும்.

ஆனால்! சிலருக்கு மட்டுமே சில விஷயங்கள் தோன்றும் எல்லோருக்கும் தோன்றி விடாது! கர்ணன் வாழ்வில் ஒரு சம்பவம்!


சிறந்த வள்ளல் என கர்ணனை மட்டும் சொல்லுகிறார்களே நானும்தான் அள்ளி, அள்ளி கொடுக்கிறேன் என்னை யாரும் வள்ளல் என சொல்லவில்லையே என்று அர்ஜுனனுக்கு பொறாமை!


உடனே அர்ஜுனன் கிருஷ்ணபகவானிடம் போய் நானும் வள்ளல்தான் ஆனால் எல்லோரும் கர்ணனையே வள்ளல் என்று போற்றுகிறார்களே?என கேட்கிறான்? அதற்க்கு NT .ராமாராவ் சொல்கிறார் ஒருநாளும் நீ கர்ணனை போல ஆக முடியாது என்று!


அதற்க்கு அர்ஜுனன் ஒத்துக்கொள்ள வில்லை. இல்லை என்னாலும் கர்ணனைவிட அதிகமாக தானம் கொடுக்க முடியும் என வாதிடுகிறான்.

உடனே கிருஷ்ண பகவான் தங்கத்திலான இரண்டு மலைகளை உருவாக்கி இன்று மாலை மாலை சூரியன் அஸ்தமனம் ஆவதற்குள் இந்த இரண்டு மலைகளையும் தானம் செய்ய வேண்டும் அப்படி செய்தால் நீதான் பெரிய வள்ளல் என சொல்லுகிறார்.

அர்ஜுனனும் ஒப்பு கொள்கிறான்! தானம் செய்ய துவங்குகிறான் வருவோர் போவோர்கெல்லாம் வண்டி ,வண்டியாக தங்கத்தை வெட்டி வெட்டி கொடுக்கின்றான்.ஆனால் தங்க மலைகள் குறைந்த பாடில்லை. சூரிய அஸ்தமன நேரம் நெருங்குகிறது அர்ஜுனனால் முடியவில்லை. அப்போது அங்கே NT. ராமாராவ் வருகிறார்,என்ன அர்ஜுனா முடியவில்லையா என கேட்க அதற்கு அர்ஜுனன் முடியவில்லை என சொல்கிறான்.

உடனே கிருஷ்ணர் அங்கே கர்ணனை அழைக்கிறார் அப்போது சூரிய அஸ்தமனத்திற்கு சில வினாடிகளே உள்ளன.

கிருஷ்ணர்!! கர்ணனை பார்த்து!! கர்ணா! இன்றைய சூரிய அஸ்தமணத்திற்குள் இந்த இரண்டு தங்க மலைகளையும் தானம் செய் என சொல்லுகிறார்! அங்கே அப்போது நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி ஸ்டைல கர்ணன் வாரார்!!


அஸ்தமித்து கொண்டிருக்கும் சூரியனை ஒரு பார்வை பார்க்கிறார் !
அப்போது சாலையில் சென்று கொண்டு இருந்த இருவரை அழைத்து
ஆளுக்கு ஒரு மலையை எடுத்து கொள்ள சொல்லி இரண்டு மலையையும் தானம் செய்து விட்டு ,
வர்ர்ட்டா! ன்னு சொல்லி போய் விடுகிறார்.

அப்போது கிருஷ்ணர் அர்ஜுனனை பார்த்து பார் இது உனக்கு தோன்றாமல் போய்விட்டதே அதான் கர்ணன் என்கிறார்.அர்ஜுனனும் உணர்ந்து கொள்கிறான்.


கடவுளையே தன்னிடம் கையேந்த வைத்த கர்ணன் பற்றி நெறைய சொல்லலாம் பெரும்பாலும் எல்லோரும் அறிந்த விஷயங்களாகத்தான் இருக்கும்..



***********************************************************************************


>

14 comments:

அமுதா said...

இந்த கதை எனக்கும் என் குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்த கதை.

Rajeswari said...

கலக்கிட்டீங்க அண்ணா..உண்மையில் கர்ணன்(சிவாஜி) இடத்தை யாராலும் நெருங்க முடியாது.

Rajeswari said...

மேலும் கர்ணன் திரைப்படம் என்னை கவர்ந்த படங்களில் ஒன்று.

நட்புடன் ஜமால் said...

மொத்தத்தில்

நட்பு

பற்றி தானே அண்ணா சொல்லியிருக்கீங்க

ப்ரியமுடன் வசந்த் said...

தெளிவான தேர்வுங்க

ஒரு உண்மையான நட்புக்காக உயிரயும் கொடுப்பேன்னு சொல்ல்றவங்க படிக்கவேண்டியது

அ.மு.செய்யது said...

Class story !!!!

வால்பையன் said...

மேட்டர் எல்லாம் ஒகே தான்!

ஆனால் கர்ணன் என்ற கேரக்டர் திருடுயது என்று மாற்றி கொள்ளுங்கள்.

கர்ணன் ஒரு கற்பனை பாத்திரம்!

நம்புங்க! ப்ளீஸ்

இராகவன் நைஜிரியா said...

நன்றி ஜீவன். அருமையான தேர்வு.

Unknown said...

நல்ல பதிவு..!! நெம்ப நல்லாரிந்திச்சு.......

புதியவன் said...

ஜீவன் அண்ணா இந்த கதையை சமீபத்தில் தான் படித்தேன்...கர்ணனுக்கும் தர்மனுக்கு கிருஷ்ணன் வைத்த பரீட்சை என்று படித்த ஞாபகம்...

அது அர்ஜுனனா தர்மனா...?

எது சரி என்று விளக்கவும்...

வேத்தியன் said...

அருமையா இருக்கு...

sakthi said...

நல்ல பதிவு ஜீவன் ,எனக்கும் ரொம்ப பிடித்த கதாபத்திரம் கர்ணன் இந்த விசயத்தில் எனக்கு கிருஷ்ணர் மேல் ரொம்ப கோபம் ரொம்ப வஞ்சனை செய்துவிடுகிறார் .திரு .சிவாஜி அவர்களை தவிர வேறு யாராலும் கர்ணனை பற்றி இந்த அளவு வெளிபடுத்திஇருக்கமுடியது .காரணனே இந்த படத்தை பார்த்தல் ஆச்சர்யபடுவர் .

வைகரைதென்றல் (vaigaraithenral ) said...

வணக்கம் ஜீவன்:)
நல்ல பதிவு ,எனக்கும் ரொம்ப பிடித்த கதாபத்திரம் கர்ணன்
கர்ணன் திரைப்படம் என்னை கவர்ந்த படங்களில் ஒன்று.
ஒரு உண்மையான நட்புக்காக உயிரயும் கொடுப்பேன்னு சொல்ல்றவங்க பார்க்க வேண்டிய படங்களில் ஒன்று
மிக அருமை:)
கலக்கிட்டீங்க:)

அமிர்தவர்ஷினி அம்மா said...

சட்டுன்னு முடிச்சா மாதிரி இருக்கு.

கர்ணன் - சிவாஜி
க்ருஷ்ணர் - என்.டி. ஆர்

படத்தேர்வுகளை நன்றாக செய்திருக்கிறீர்கள்.

உங்கள் ஸ்டைலில் கதை சொன்னவிதமும் நன்றாக இருந்தது.