''என்னைப்பற்றி நான்'' என் கேள்வி -என் பதில்

01. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

ஜீவன் இந்த பெயர் நானே ''எனக்கு'' வைச்சுக்கிட்டது ! இந்த பெயர் எனக்கு புடிக்கும். எனக்கு என் அப்பா வைச்ச பேரு தமிழ் அமுதன் இந்த பேரும் எனக்கு ரொம்ப புடிக்கும்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

சில வருடங்கள் முன்னாடி! காரணம் சொன்னா உங்களுக்கும் அழுகை வர கூடும்! அதனால காரணம் வேணாம்!

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

இல்லை சுத்தமா புடிக்காது ! மத்தவங்களுக்கும் எளிதில் புரியாது! ஆனா பதிவெழுத எந்த பிரச்னையும் இல்ல டைப் பண்ணினா எழுத்தெல்லாம் அழகழகா வருது!

4).பிடித்த மதிய உணவு என்ன?

இத மதிய உணவுன்னு சொல்ல முடியாது! ஆனா? நல்ல வெயில் நேரத்துல
மதிய உணவா சாப்பிட புடிக்கும். நல்லா ஜில்லுன்னு தயிர் ஊத்தின பழைய சாதம்! அதுக்கு தொட்டுக்க,'' உப்பு மிளகாய் பொடி போட்ட பச்சை மாங்காய்'' ''நார்த்தங்காய் ஊறுகாய் '' ''அடை மாங்காய் ''கிடாரங்காய் ஊறுகாய் ''''நெல்லிக்காய் ஊறுகாய்'' ''சுண்டைக்காய் வத்தல்'' ''முதல் நாள் வைச்ச மீன் கொழம்பு '' ''சுட்ட கருவாடு'' ''கொத்தவரங்காய் வத்தல்'' ''முக்கியமா றுத்த மோர் மிளகாய் வத்தல்'' சின்ன வெங்காயத்த உரிச்சு சாதத்துல போட்டுக்கணும்! பெரிய வெங்காயத்த வெட்டி தனியா வைச்சுக்கணும்! ம்ம்ம் அப்புறம் .. வெங்காயம் ,தக்காளி ,புளி எல்லாம் சேர்த்து அம்மில அரைச்ச ஒரு தொவையல்!

இவ்ளோ!! ஐட்டங்களையும் சுத்தி வைச்சுகிட்டு நடுவுல நல்லா வண்ணமா உக்காந்து சும்மா ஒருமணிநேரம் சாப்பிடனும்! இப்படி சாப்பிட்டுட்டு தூங்கினா அடடா! சும்மா ராஜ தூக்கம்தான்!



5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
இல்லை! உடனே பழகிடலாம் ஆனா? நட்பு என்பது ? உடனே பழகி வேகமாய் வளர்ந்து முடிவதில் விருப்பம் இல்லை. நட்பானது விதை விதைத்து , சிறிய செடியாகி , வளர்ந்து பெரிதாகி மரமாக வேண்டும் என்பது
என் எண்ணம். அதோடு நட்பு நிரந்தரமாக நீடித்து இருக்க சரியான கால
அவகாசத்தில் வளர வேண்டும். என்பது என் தாழ்மையான கருத்து!


6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

கண்டிப்பாக அருவிதான் அருவிக்குளியலுக்கு அடிமை நான்! குற்றாலத்தில் நள்ளிரவில் மெயின் அருவியில் வேணுங்கிற அளவிற்கு குளிச்சு இருக்கேன்! இப்போ சென்னைக்கு அருகில் இருக்கிற ''கோனே பால்ஸ்'' க்கு போய் குளிப்பதும் உண்டு !

கடல் குளியலும் புடிக்கும் ஆனா உடம்பெல்லாம் பிசு பிசு ன்னு ஆயிடும் !

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண்கள்,பேச்சு

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
வேகம்,சுறுசுறுப்பு , சிக்கல்களை சவாலாக எதிர்கொள்ளுதல், என்னை நானே விலகி நின்று ரசித்தல், விமர்சித்தல் , கண்டித்தல் எல்லாம் புடிக்கும். (சுய தம்பட்டம் அடிக்க வாய்ப்பு கிடைச்சா விட்டுடுவோமா)

முக்கிய வேலை நேரத்தில் கணினியுடன் பொழுது போக்குவது புடிக்காது! மேலும் அடிக்கடி தோன்றும் சோம்பேறி தனம்!


9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித் பிடிக்காத விஷயம் எது?

புடிச்சது -அப்பாவித்தனம்
புடிக்காதது -முன் கோபம்


10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

அப்படி யாரும் இல்லை



11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

வெள்ளை சட்டை ,கருப்பு ஜீன்ஸ்

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

பாட்டு கேக்கல சன் டிவில ''அறிந்தும் அறியாமலும்'' படம் ஓடிட்டு இருக்கு


13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்பு

இந்த கேள்விய இப்படி கேட்டா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்!

(13a) உங்களை மரமாக மாற்றினால் என்ன மரமா
ஆசை?

இப்படி கேட்டதா நினைச்சு பதில் சொல்லுறேன்!

சிவப்பு கலர்ல பூ பூத்து ரோடு ஓரத்துல வைச்சு இருப்பாங்களே அதன் பேரு தெரியல! அந்த மரம் எனக்கு ரொம்ப புடிக்கும்! முழுக்க பூத்து இருக்குற அந்த மரம் மழைல நனைஞ்சு இருக்குறப்போ ரொம்ப ரம்மியமா இருக்கும்!

சரி அந்த மரமா மாறிட்டா? போற ,வர்றவங்க மேல பூவை உதிர்த்து விளையாடலாம்! குழந்தைங்க வந்தா ஒரு சிலுப்பு சிலுப்பி பூக்களை மொத்தமா உதிர்த்து அவங்கள குஷி படுத்தலாம்! நல்லா ஜாலியா பொழுது போகும் .


14.பிடித்த மணம்?

கோயில்ல அர்ச்சனை பண்ணும்போது அந்த தீப வாசனை,பூவாசனை எல்லாம் கலந்த மாதிரி ஒருவாசனை வருமே (தெய்வீக மனம் ?) அந்த வாசனை புடிக்கும். (ஆனா கடவுள் பக்தியெல்லாம் அதிகம் கிடையாது )

15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?

அமிர்த வர்ஷினி அம்மா இவங்க எழுத்துகள் மிக சுவாரஸ்யமானவை! எங்கும் காணாத தனி பாணி இவர் எழுத்துகளில் தெரிகிறது! இவங்க எழுதும் அமித்து அப்டேட்ஸ் ஒவ்வொன்றும் உரை நடை கவிதை!!

என் வானம் அமுதா எப்படி இவங்களுக்கு மட்டும் இப்படி தோன்றுகிறது?
என வியந்து பாராட்டும் அளவிற்கு இவர் கவிதைகள் இருக்கும்!இவங்க கவிதை களில் ''திண்ணை'' எனக்கு மிகவும் பிடித்தது .


புதியவன் அருமையான கவிஞர்! வார்த்தைகளை இவர் கையாளும் விதத்தில் அந்த வார்த்தைகளுக்கு தனி ருசி வந்து விடும் .



16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

ரம்யா

இவர் பல நகைச்சுவை பதிவில் கலக்கி இருக்கிறார்! குழந்தைகளுக்கு கதை
சொல்லியும் அசத்தி இருக்கிறார்! இவர் சமுக சிந்தனையோடு எழுதிய
பெற்றோர் கவனத்திற்கு என்ற பதிவு மிக முக்கியமானது அதுவே எனக்கு
பிடித்தது!


17. பிடித்த விளையாட்டு?

''கிரிக்கெட்'' (நெறைய மேச் விளையாடி இருக்கிறேன்) ''பால் பேட் மின்டன்''
இப்போது விளையாடுவது ''இறகு பந்து'' அப்புறம் ... நல்லது ..கெட்டதுன்னா
ரம்மி ஆடுவோம்.


18.கண்ணாடி அணிபவரா?
இல்லை! வெய்யில் காலத்துல சும்மா ஸ்டைலுக்கு கூலிங் கிளாஸ் மட்டும்

19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?
அழுத்தமில்லாத, சுவாரஸ்யமான திரைக்கதை அமைப்புடைய படங்கள்
டும் டும் டும் , கண்டு கொண்டேன் ,கண்டு கொண்டேன் மாதிரி படங்கள்!!


20.கடைசியாகப் பார்த்த படம்?

தசாவதாரம்

21.பிடித்த பருவ காலம் எது?

மழை காலம் ஆனா! மழை பெய்யும் போது எங்க ஊர்ல இருக்கணும்.

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:

எதுவுமில்லை

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை
நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்
?

மனதை கவரும் புதிய படம் கிடைத்தால் மாற்றுவேன்


24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம்- என் குழந்தைகளின் சிரிப்பு சத்தம் .

பிடிக்காத சத்தம்- குழந்தைகளை அதட்டும் தங்க (சிங்க ) மணியின் அதட்டல் சத்தம்.


25.வீட்டை விட்டு எனக்கு இகவும் இடித்தது பட்ச தொலைவு?

சபரி மலை

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

இருக்கலாம்!


27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

எவ்வளவுதான் உஷாராகவும்,புத்திசாலி தனமாகவும் இருந்தாலும் கூட
நம்பிக்கை துரோகிகளிடம் ஏமாந்து விடுவது!

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோபம் ,சோம்பேறித்தனம்!

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

குற்றாலம், கொடைக்கானல்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

எவ்வளவுதான் நடித்தாலும் நாம் யார் என்பதை நம் கண்கள் காட்டி கொடுத்து விடும். கண்களில் நேர்மையான பார்வையுடன் கடைசி வரை வாழ ஆசை
முடியாது போல இருக்கு!

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

ம்ம்ம்ம் ................ உண்மை சொல்லணுமில்ல?

தண்ணி ...தண்ணி ...அடிக்கிறது !


32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

படிக்கும் போது வாழ்க்கை பற்றிய ஒரு எண்ணம் இருந்தது அது இப்போது இல்லை! கல்யாணம் முன்னாடி வாழ்க்கை பற்றிய ஒரு பார்வை இருந்தது
அதுவும் இப்போது இல்லை! இப்போது இரண்டு குழந்தைகள் ஆன பிறகு
அவர்களை வளர்ப்பதும் ஆளாக்குவதும்தான் வாழ்க்கை என தோன்றுகிறது!
அதுதான் கடமையும் கூட! ஆகவே கடமையை நிறை வேற்றுதல்தான் வாழ்க்கை என வைத்து கொள்ளலாமா?







>

23 comments:

வியா (Viyaa) said...

nice..

அப்துல்மாலிக் said...

ஜீவன் உங்க பதில்கள் எதார்த்தமாகவும்,உண்மையாகவும் ரசிகத்தக்க இருந்தது

நட்புடன் ஜமால் said...

உண்மையான பதில்கள்

உங்களை சற்றே கூடுதலாக அறிந்ததால் சொன்னேன்.

எனக்கு பிடிக்காத ஒரு பதில் இங்கே இருக்கு

அது உங்களுக்கு தெரியும் தானே அண்ணா

சீக்கிரம் அந்த பதிலை மாற்றிவிடுங்கள்

(வாழ்கையில்)

அ.மு.செய்யது said...

//சரி அந்த மரமா மாறிட்டா? போற ,வர்றவங்க மேல பூவை உதிர்த்து விளையாடலாம்! குழந்தைங்க வந்தா ஒரு சிலுப்பு சிலுப்பி பூக்களை மொத்தமா உதிர்த்து அவங்கள குஷி படுத்தலாம்! நல்லா ஜாலியா பொழுது போகும் . //

ரசித்தேன் இந்த பதிலை...அழகா சொல்லியிருக்கீங்க ஜீவன்.

//அவர்களை வளர்ப்பதும் ஆளாக்குவதும்தான் வாழ்க்கை என தோன்றுகிறது!
//

இதை விட வாழ்க்கையில என்னங்க இருக்கு...வெகு யதார்த்தம்.

இராகவன் நைஜிரியா said...

அருமையான பதிலகள்.

சில கேள்விகளுக்கு நச் பதில்கள்.

sarathy said...

(13a) உங்களை மரமாக மாற்றினால் என்ன மரமாக ஆசை?


இந்த கேள்விக்கு உங்க பதில் நல்லாயிருக்கு.

13b-லாம் இல்லையா ஜீவன்?

harveena said...

என்ன அண்ணா? சும்மா ஒரு விளம்பரமா? ஹி..ஹி
அது என்னனா சாப்பாடு மேட்டர் மட்டும் நீளமா இருக்கு ??
மரமா இருக்க குஷியா இருக்குமா? எதுக்கு ப்ரீ ஷோ பார்க்கவா ?
ஹி ..ஹி ...

//சுய தம்பட்டம் அடிக்க வாய்ப்பு கிடைச்சா விட்டுடுவோமா//

நாம எல்லாம் ஒரே கேஸ் அண்ணா !)

//எவ்வளவுதான் நடித்தாலும் நாம் யார் என்பதை நம் கண்கள் காட்டி கொடுத்து விடும்.//

இது சூப்பர்!!

செந்தில்குமார் said...

ரொம்ப யதார்த்தமான பதில்கள் ஜீவன்..

முதல் முறையா உங்க பதிவுக்கு வந்தேன்.. உங்களை பத்தி தெரிஞ்சுகிட்டது மகிழ்ச்சி..

புதியவன் said...

அனைத்தும் யதார்த்தமான பதில்கள் என்றாலும்
கேட்க்கப் படாதா கேள்விக்கு கொடுத்திருக்கும்
பதிலே நான் மிகவும் ரசித்தது...

//சிவப்பு கலர்ல பூ பூத்து ரோடு ஓரத்துல வைச்சு இருப்பாங்களே அதன் பேரு தெரியல! அந்த மரம் எனக்கு ரொம்ப புடிக்கும்! முழுக்க பூத்து இருக்குற அந்த மரம் மழைல நனைஞ்சு இருக்குறப்போ ரொம்ப ரம்மியமா இருக்கும்!

சரி அந்த மரமா மாறிட்டா? போற ,வர்றவங்க மேல பூவை உதிர்த்து விளையாடலாம்! குழந்தைங்க வந்தா ஒரு சிலுப்பு சிலுப்பி பூக்களை மொத்தமா உதிர்த்து அவங்கள குஷி படுத்தலாம்! நல்லா ஜாலியா பொழுது போகும் .//

என்னையும் தொடருக்கு அழைத்திருக்கிறீர்கள்
விரைவில் பதிவிடுகிறேன். நன்றி ஜீவன் அண்ணா...

வேத்தியன் said...

ஆமா அந்த 4வது கேள்விக்கு இப்பிடி போட்டுத் தாக்கியிருக்கீங்களே...

ஆஹா...

நா போயி சாப்பிட்டுட்டு வரேன்..
பசிக்க வச்சுட்டீங்க...

:-)

வேத்தியன் said...

நட்பு பற்றிய கருத்து அருமை..

வேத்தியன் said...

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

அப்படி யாரும் இல்லை//

கொடுத்து வச்சவர் சார் நீங்க...

:-)

வேத்தியன் said...

நீங்க ஒரு ஆள் தான் சார் அந்த 31வது கேள்விக்கு உண்மைய சொல்லியிருக்கீங்க...

அதுக்கு உங்களுக்கு ஒரு “ஓ”...

:-)))

வேத்தியன் said...

நல்ல பதில்கள்...

மிகவும் ரசித்தேன்...

S.A. நவாஸுதீன் said...

1. இரண்டு பெயரிலுமே ஜீவன் இருக்கு அண்ணா

4. நல்லா புல் கட்டு கட்டிட்டு இருக்குரவனுக்கும் இத படிச்சா திரும்ப பசி எடுக்க ஆரம்பிச்சிடும்.

5. நல்ல தெளிவு. சரியா சொன்னீங்க

13a. அருமையான ரசனை. ரொம்ப ரசிச்சேன்

15. ரெண்டு பேருமே பிரபலமான பதிவர்கள். வாழ்த்துக்கள் இருவருக்கும்.

17. எனக்கு பிடிச்சதும் அதேதான்

24. பாசம் புரியுதண்ணே

29. Same Blood

31. உண்மைய சொன்னாலும் வேண்டாமே, பாருங்க மேல ரொம்ப நாளா ஜமாலும் சொல்லிகிட்டுதான் இருக்கான்.

32. மிகவும் என்னைத் தொட்ட பதில். ரொம்ப சரியாய் சொன்னீங்கண்ணே

அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்களின் பதில்களில் எந்த ஒரு செயற்கைத்தனமும் தெரியவில்லை ஜீவன்.

ஒருவேளை இதுதான் உங்களின் + உங்கள் எழுத்தின் பலமாக கூட இருக்கலாம்.

வாழ்க வளமுடன் (உங்களின் கேள்வி பதில் படித்துமுடித்தவுடன் என் மனதில் தோன்றியது இதுதான்.)

தமிழிச்சி said...

அருமையான பதில்கள் . அங்கே உண்மை தொனிக்கிறது.

அன்புடன் அருணா said...

//சரி அந்த மரமா மாறிட்டா? போற ,வர்றவங்க மேல பூவை உதிர்த்து விளையாடலாம்! குழந்தைங்க வந்தா ஒரு சிலுப்பு சிலுப்பி பூக்களை மொத்தமா உதிர்த்து அவங்கள குஷி படுத்தலாம்! நல்லா ஜாலியா பொழுது போகும் . /
அட ஆமா ஜாலி!!!

RAMYA said...

ஜீவன்
======

முதலில் தாமதத்திற்கு மன்னிக்கவும்.

அலுவலகத்தில் அளவில்லாத ஆணிகளின் தொல்லைகளினால் தான்..............

ரொம்ப அருமையான யதார்த்தமான பதில்களைப் பதிவு செய்திருக்கின்றீன்ர்கள்.

பெயர்களின் ரசனை அருமை.

அழுதது வேண்டாம்! எப்போதும் நாம் அனைவரும் சிரித்துக் கொண்டே இருப்போமே :-)

மதிய உணவு அருமையோ அருமை.
படிச்சவுடன் எனக்கு ரொம்ப பசிக்குது.

அலுவலகத்தில் வேலைகளின் இடையே இன்று எப்படியாவது ஜீவன் அவர்களுக்கு பின்னூட்டம் போட வேண்டும் என்று முடிவெடுத்து எழுதிக் கொண்டிருக்கின்றேன்.

நட்பு பற்றி விளக்கம் ரொம்ப நல்லா இருந்தது. உண்மையான பதில்கள் ஜீவன்.

பிடித்த மற்றும் பிடிக்காத விஷயத்தில் எந்தவித மாறுபட்ட கருத்தும் கொள்ள முடியாது அற்புதமான கருத்து.

13a. இந்த பதிலில் உங்களின் இயற்கையை நேசிக்கும் ஆசை அசத்தல் ரகம்.

"இல்லை! வெய்யில் காலத்துல சும்மா ஸ்டைலுக்கு கூலிங் கிளாஸ் மட்டும்" (ஸ்டைல் மன்னன்?? :-)

உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
============================

கோபம் வருமா?,சோம்பேறித்தனம்
--> இருக்கா? உண்மையாவா ?

வாழ்க்கையை பற்றி உங்களின் கருத்து சாலச் சிறந்தது ஜீவன்.

உங்களின் எண்ணங்கள் மிகவும் உயர்ந்தவைகளாக இருக்கின்றது. (இந்த வரிகள் மிகைப் படுத்தி எழுதியவை அல்ல. ஆத்மார்த்தமாக எழுதியவை).

மொத்தத்தில் உங்களின் இந்த இடுகை உங்களின் அறிய எண்ணங்களை வெளிக்கொணர்ந்திருக்கின்றது.

எனது அழைப்பிற்கு அளித்த பதில்கள் அருமை.

மிக்க நன்றி ஜீவன்.

மேன்மேலும் உங்கள் வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று வாழ்வாங்குவாழ வாழ்த்துகின்றேன் ஜீவன்!

அமுதா said...

அருமையான பதில்கள்.

/*குழந்தைங்க வந்தா ஒரு சிலுப்பு சிலுப்பி பூக்களை மொத்தமா உதிர்த்து அவங்கள குஷி படுத்தலாம்! நல்லா ஜாலியா பொழுது போகும் .
*/
அழகு. தொடர அழைத்ததற்கு நன்றி. ஒரு வார காலம் ஆகும் என் பதிவு வர :-)

முனைவர் கல்பனாசேக்கிழார் said...

மதிய உணவினைப் பற்றிக் கூறியுள்ளது அருமை.

Rajeswari said...

அண்ணா..சாப்பாடு விசயத்துல பெரிய ரசிகரா இருப்பீங்க போலிருக்கே

Rajeswari said...

புடிக்காத சப்தத்த அண்ணி வாசிச்சாங்களா???