இளமை..! இதோ ..இதோ..! பதின்மம்

இளம்பிராய நிகழ்வுகள் என்றவுடன் பருவ வயதில் ஆர்வகோளாறில் சேட்டைகளை எழுதவேண்டுமோ என் எண்ணத்தை சில நண்பர்களின் பதிவுகளை பார்த்து மாற்றி கொண்டேன்..! அட இப்படிக்கூட ழுதலாமே என்று ..!பதிவிட அழைத்த அமித்து அம்மாவிற்கு நன்றி....!


அந்தமான் நினைவுகள்

நான் பிறந்து நான்காம் வகுப்பு பாதி வரை படித்தது அங்கேதான்..! குருதுவாரா எனப்படும் சீக்கியர் கோயில் எதிரில் இருந்தது எங்கள் வீடு. பாக்கு மரங்கள் ,மா மரங்கள் முந்திரி மரங்கள் ல்லாம் வீட்டருகே இருந்தன. நடந்து போகும் தொலைவில் அபர்டீன் ஸ்கூல் அங்கேதான் படித்தேன். எல்லா மக்களும் கலந்து வாழும் இடம் அது தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் ,சீக்கியம் என எல்லோரும் உண்டு ஹிந்தி தான் பொதுவான மொழி.எனக்கு தமிழ் நண்பர்கள் பள்ளியில் மட்டுமே..! வீட்டருகே தெலுங்கு, ஹிந்தி நண்பர்கள்தான் பம்பரம்,கிட்டிபுல் கோலி என இங்குள்ளதைபோலவே அங்கும் எல்லா விளையாட்டுகளும் உண்டு விளையாட்டு ரூல்ஸ்தான் மாறும். ஹோலி பண்டிகையை பாகுபாடு இல்லாமல் எல்லோரும் கொண்டாடுவார்கள் . கலர் சாயங்களை நாங்களே தயாரிப்போம் பழைய பேட்டரி கட்டையை உடைத்து அதில் உள்ள கருப்பான பொருளை எடுத்து சாயமாக பயன்படுத்துவோம்.


அந்தமானில் பாதிவரை நான்காம் வகுப்பு படித்து மீதி இங்கேதான் தஞ்சை மாவட்டம் -பட்டுக்கோட்டை -மதுக்கூர் - புதுகுளத்து பள்ளி கூடம் எனப்படும் இடையகாடு பள்ளி இங்கே நாலாவதும் அஞ்சாவதும் படித்தேன் .

























ஆறாவது முதல் +2 வரை மல்லுகட்டி படிச்சது அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளி. நான் வந்து ஒரு சரியான மாணவன் கிடையாது என் அப்பா ஊர்ல இல்லாததால இஷ்டம்போல சுத்தி இருக்கேன். ஆறாவது படிக்கும்போதே கட் அடிச்சுட்டு ஊர் சுத்துவேன்.ப்போவே ஒரு வாட்டி ஒரு பிரண்ட் கூட சேர்ந்து சிகரெட் குடிச்சு இருக்கேன் இருமல் வரவே சிகரெட் புடிக்கல. எட்டாவது படிக்கும்போது வீட்ட விட்டு ஓடி போக கூட முயற்சி பண்ணி இருக்கேன்.

அதுபத்தி ஒரு பதிவு கூட போட்டு இருக்கேன் ''வீட் விட்டு ஓடி போய்''

எப்படியோ தட்டுத் தடுமாறி பத்தாவது வந்துட்டேன் அப்போதான் எனக்கு கதை புத்தகங்கள் படிக்கும் பழக்கம் வந்தது. அது பத்தி அப்புறம் சொல்லுறேன்.பத்தாவது ரிசல்ட் ருது எனக்கு பாஸ் பண்ணிடுவேன்னு சுத்தமா நம்பிக்கை இல்ல பேப்பர் வருது நம்பர் பாக்குறேன் என் ஆச்சர்யம் என் நம்பர் இருந்தது அப்படின்னு சொன்னா அது பொய் நான் எதிர் பார்த்த மாதிரியே என் நம்பர் வரல பத்தாவது நான் பெயில்! அன்னிக்கு எங்க ஊர் ஐயப்பா தியேட்டர்ல தர்மத்தின் தலைவன் படம் போட்டு இருந்தாங்க அத நைட் ஷோ பார்த்துட்டு வீட்டுக்கு போயிட்டேன் வீட்டுல திட்டல...!

கிரிக்கெட்

என் வாழ்க்கையில் கிரிக்கெட்டுக்கு முக்கிய பங்கு உண்டு..! பத்தாவது பெயில் ஆனவுடன் அட்டெம்ப்ட் அடிக்குற இடைவெளி கிரிக்கெட் விளையாட போனேன் எங்க ஊரு கிரிக்கெட் டீம் ஒரு பெரிய டீம். முதல்ல அவுட் பால் பொறுக்கி போட்டுக்கிட்டு விளையடுரவங்களுக்கு சிகரெட் வாங்கி கொடுக்குறதுதான் என் வேலை அப்புறம் கொஞ்ச கொஞ்சமா டீம் குள்ள போயிட்டேன் அங்க விளையடினவங்க எல்லாரும் கல்லூரில படிக்கிறவங்கஅவங்க பேச்சு நடை உடை எல்லாம் பார்த்து எனக்கும் படிக்கணும்னு ஆசை வந்துட்டு.

வாரவாரம் வெளியூர் டீம் கூட கிரிக்கெட் போட்டி நடக்கும் என்னையும் ஒரு கட்டத்துல மேட்ச் சேர்த்து கிட்டாங்க அந்த டீம்ல ரொம்ப சின்ன பையன் நாந்தான். வெளியூர் டீம் கூட விளையாடும்போது நான் சின்ன பையனா இருக்குறதல எல்லாரும் என்கிட்டே வந்து பேசுவாங்க நல்லா பிராக்டீஸ் பண்ணுங்க தம்பி கிரிக்கெட்ல பெரிய ஆளா ரலாம் அப்படின்னு.நான் வந்து ஒரு பாஸ்ட் பவுலர். இந்திய கிரிக்கெட் அணி நான் விளையாடனும்னு ஒரு லட்சம் தடவ கனவு கண்டு இருப்பேன்னு சொன்னா அது கம்மி. எப்படியும் கிரிக்கெட்ல பெரிய ஆளா ஆகணும்னா படிக்கணும் அதுனாலே நான் படிக்க முடிவு பண்ணினேன்.


வசந்த காலம்

பிளஸ் ஒன் ,பிளஸ் டு படிச்ச காலம்தான் எனக்கு வசந்த காலம் எங்க ஸ்கூல் ஆண்கள் பள்ளிதான் ஆனா பிளஸ் ஒன் ,பிளஸ் டு மட்டும் பொம்பள புள்ளைங்க கூட. இப்போதான் டவுசர்ல இருந்து பேண்டுக்கு மாறினது ,புது லுங்கி வாங்கினது சட்டைய அயன்பண்ணி போட்டது,மீசைய கவனிச்சது ,பேர் அண்ட் லவ்லி போட்டுகிட்டது,தலைய தூக்கி வாரினது இன்னும் நெறைய சொல்லலாம்.
அப்போ புள்ளைங்க கூட வாங்க ,போங்கன்னுதான் பேசிக்குவோம் சில புள்ளைங்க பசங்க கூட பேசவே பேசாது..! ஏங்க, இங்கேருங்க இப்படித்தான் புள்ளைங்க கூப்பிடும் அதுவே நம்மளுக்கு சொகமா இருக்கும். நல்லா படிக்கணும்னு வீட்டுல சொல்லி பொம்பள புள்ளைங்களுகாகவே ட்யூசன் போனேன்.

அண்ணன் ராசி

அது என்னமோ தெரியல இப்போன்னு இல்ல நான் +2 படிக்கும்போதே கூட படிச்ச சில புள்ளைங்க அண்ணன்னுதான் என்னைய கூப்பிடுவாங்க. அப்போ ஒருத்தன் சொன்னான் ஆளு பர்சனாலிட்டியா இல்லாட்டி இப்படித்தான் புள்ளைங்க அண்ணன்னு சொல்லி கழட்டி விடுவாங்கன்னு. எனக்கு என்னமோ அப்படி தோணல சேச்சே அப்படி இருக்காது அது நம்பளுக்கு கிடைக்கிற ரியாதைன்னு நினைச்சுகிட்டேன். இப்போ கூட என்னைவிட வயசான பதிவர்கள் கூட என்னைய அண்ணன்னு சொல்லுறாங்க.

கால போக்குல கிரிக்கெட் கனவு குறைஞ்சு இயல்புக்கு திரும்பிட்டேன்



என் நாயகர்கள்

பாரத தலைவன் நேதாஜி

சின்ன வயசில் படக்கதைகள் படிப்பது எனக்கு புடிக்கும் சிறுவர் மலர்ல தொடரா வந்த நேதாஜி வரலாறு படிச்சது முதல் அவரை என் மனசில நிறுத்திகிட்டேன் .நேதாஜியின் புல்லரிக்கும் வரலாறினை படித்து அவர் வசமானேன்.

தமிழின தலைவன் பிரபாகரன்



இலங்கைல சண்டை நேரம் எங்க ஊரு கடற்கரை பக்கம் இருந்ததால தமிழ் போராளிகள் நிறைய பேர் எங்க ஊருல தங்கி இருந்தாங்க. எல்லார் கூடவும் நல்லா பேசுவாங்க நல்லா அன்போட பழகுவாங்க.ஸ்கூல் முடிஞ்சு வந்தா நாங்க அவங்க கூடத்தான் இருப்போம் கைத்துப்பாக்கி எல்லாம் வைச்சு இருப்பாங்க எனக்கு துப்பாக்கியை கையில் எடுத்து பார்க்கணும்னு அப்போ ரொம்ப ஆசை ஆனா கொடுக்க மாட்டாங்க.அப்போ இலங்கைல நடக்குற கொடுமைகள தெருவுக்கு தெரு படம் போட்டு காட்டுவாங்க. பிரபாகரன் கைல புலிக்குட்டி வைச்சு இருக்குரதுபோல காலண்டர் எங்க ஊருல அப்போ எல்லார் கடை லயும் மாட்டி இருக்கும். அப்போதிருந்தே அவரை நான் தலைவனாக துதிக்க ஆரம்பித்தேன்.


இசை ஞானி இளைய ராஜா



என் சின்ன வயசு முதலே சையால் நாடி நரம்பெல்லாம் ஆக்கிரமிச்ச இந்த மனுஷன் என் முக்கியமான நாயகன்.




பால குமாரன்

நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போதுதான் கதை புத்தகங்கள் படிக்க துவங்கினேன் சுபா,ராஜேஷ் குமார் ,பட்டுக்கோட்டை பிரபாகர் இவர்கள்தான் என் அபிமான எழுத்தாளர்கள். எதோ ஒரு தீபாவளி மலரில் பாலகுமாரன் கதை வர அப்படியே அவர் எழுத்தில் ஊறிப்போனேன் வெறித்தனமாக அவர் புத்தகங்களை படித்தேன் ஒழுங்கற்று இருந்த நான் ஒரு வடிவம் அடைந்தது இவரால்தான் என் மானசீக குருவும் இவர்தான் நான் மனதளவில் எப்போதும் திடமாக இருக்க இவரே காரணம்.



இன்னும் நெறைய எழுதலாம் அப்புறம் அது வாழ்க்கை வரலாறு போல ஆயிடும் அதனால போதும் நிறுத்திக்குவோம்...!

நான் தொடர அழைப்பது

டவுசர் பாண்டி

ரம்யா

தமிழரசி



>

23 comments:

டவுசர் பாண்டி... said...

அடுத்து நானா !

அவ்வ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்

நட்புடன் ஜமால் said...

அந்த-மானா நீங்க

---------

அண்ணன் நினைவுகள் - ஓஹ்! இது தான் மேட்டரா - என்னையும் எல்லோரும் அண்ணன்னே கூப்பிட்டாங்க-றாங்க

---------

ஃபேர் இல்லைன்னாலும் லவ்லின்னு தெரியும் பூதர் மாவு கூட பூசுவதில்லை

---------

பாலகுமாரன் - வேறு என்ன சொல்ல

இளையராஜா ஏற்படுத்திய தாங்களையும் சொல்லி மாளாது

---------

சீக்கிரமா எழுதிட்டிய - நானும் எழுதனும் எப்போன்னு தான் தெர்ல

நட்புடன் ஜமால் said...

அண்ணா போட்டோ ஜூப்பரூ

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல நடை.

அப்துல்மாலிக் said...

சூப்பர் தல‌

இளமை இதோ இதோ!!!

அப்துல்மாலிக் said...

சூப்பர் தல‌

இளமை இதோ இதோ!!!

ஹேமா said...

ஜீவன் நீங்க அழகுதான் போட்டோல.நல்ல நினைவுத் தொகுப்பு.அன்பின் வாழ்த்துக்கள்.

டவுசர் பாண்டி... said...

போட்டாச்சு...போட்டாச்சு...

http://tavusarpandi.blogspot.com/2010/02/blog-post_2781.html

அமிர்தவர்ஷினி அம்மா said...

இளம்பிராய நிகழ்வுகள் என்றவுடன் பருவ வயதில் ஆர்வகோளாறில் சேட்டைகளை எழுதவேண்டுமோ என்ற எண்ணத்தை சில நண்பர்களின் பதிவுகளை பார்த்து மாற்றி கொண்டேன் //

சிங்கமணிகிட்ட அடிவாங்காம எஸ்கேப் ஆகற மாதிரி ;)))))எழுதுவீங்களோன்னு நெனச்சேன் ஜீவன், ஆனா உண்மையில நீங்க இப்படி எழுதியிருந்தது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.

நான்கில் ஆரம்பித்து நாற்பது வரைக்குமான சுயசரிதையா இது :))))))))

க்ரேட்.

இப்போ கூட என்னைவிட வயசான பதிவர்கள் கூட என்னைய அண்ணன்னு சொல்லுறாங்க.

:)))))))))))))))))))))
அய்யோ பாவம்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நட்புடன் ஜமால் said...

அண்ணன் நினைவுகள் - ஓஹ்! இது தான் மேட்டரா - என்னையும் எல்லோரும் அண்ணன்னே கூப்பிட்டாங்க-றாங்க

:)))))))))))))
ஹாஹ்ஹா

ஆசையப்பாரு, ஹாஜர் வந்தப்பின்னும்.

டவுசர் பாண்டி said...

//சுபா,ராஜேஷ் குமார் ,பட்டுக்கோட்டை பிரபாகர் , பாலகுமாரன்//

அச்சு அசலா , ஒரே மேரி அலை வரிசையா கீதே ? சுபாவின் கதைகளில் ஒரு அந்நியத் தன்மை இருக்கும் , ( இருவர் எழுதுவதால் ) , பட்டுக் கோட்டை பிரபாகர் - கிரண் , ராவ் , அலக்ஸ் ,போன்றவையும் குடும்பப் பிரிச்சனை பற்றியும் எழுதும் போது அதன் உள்ளே நாமும் கீரா மேரி இருக்கும் ,

பாலக்குமாரன் - சொல்லவே வேண்டாம் எனக்கும் அவர் தான் குரு, அவரின் ஆன்மீகக் கதைகள் விடுத்து , பார்த்தால் ஒரு கதைக் களம் என்றால் ,அதன் பரி பாஷைகள் முதற்கொண்டு சுத்தமாக இருக்கும் , ராஜேஷ் குமாரின் கதைகள் இரண்டு களம் கொண்டு கடைசியில் அதை கோர்க்கும் முறை ரொம்ப பிரசித்தம் !!

இவர்கள் எழுதிய கதைகள் என்னிடம் ஒரு அலமாரி நிறைய உள்ளது , அந்த அளவு நான் இவர்களின் எழுத்துக்களை நேசிக்கிறேன் .

உங்கள் வலைப் பக்கம் இப்போது தான் வந்தேன் . இனி மேல் அடிக்கடி வருகிறேன் , புத்தகங்களை அலசும் வழக்கம் உள்ளதா ? எனில் காத்திருக்கிறேன் . மெயிலில் அலசுவோம்

டவுசர் பாண்டி said...

இதை பாத்ததும் நானும் இது மேரி எழ்தணும் இன்னு ஆசை வர்து தல !! இந்த பொட்டி பத்தியே நெரியோ எழ்தி எழ்தி , ஒரே மழ்க்கமா கீதுபா !!

இது மேரி ஒன்னு !! ஒண்ணே ஒன்னு எழ்தணும் !!

தொடருங்கள் டைம் கெடச்சா நம்ப ஏரியா பக்கமும் வாங்க தல !!

Anonymous said...

தமிழை மேலும் கொஞ்சம் அறிந்துக் கொள்ள வாய்ப்பு இந்த பதிவு....

அண்ணன் ராசி அறிந்திருந்தால் நானும் அண்ணான்னு சொல்லியிருப்பேனே.....இப்ப சொல்ல முடியாது நண்பா....

நான் தொடர அழைப்பது

டவுசர் பாண்டி

ரம்யா

தமிழரசி

சாட்டில திட்டயமைக்கு திட்டமிட்ட பழிவாங்கல் இதானா......

Anonymous said...

அந்தமானில் பாதிவரை நான்காம் வகுப்பு படித்து மீதி இங்கேதான் தஞ்சை மாவட்டம்

அந்தமான் தப்பிச்சிடுச்சி தஞ்சை மண் மாட்டிகிச்சி.....

Anonymous said...

என் நாயகர்கள்

பாரத தலைவன் நேதாஜி

எனக்கும் இவரை பிடிக்கும்

சந்தனமுல்லை said...

/அப்போ புள்ளைங்க கூட வாங்க ,போங்கன்னுதான் பேசிக்குவோம் /

:-)

/ நல்லா படிக்கணும்னு வீட்டுல சொல்லி பொம்பள புள்ளைங்களுகாகவே ட்யூசன் போனேன்./

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! ;-))

க.பாலாசி said...

உங்களின் இளமை அனுபவங்கள் ரசிக்கும்படியாக இருந்தது...

இந்தியன் டீமுக்கு ஒரு பாஸ்ட் பௌலர் மிஸ் ஆனதுதான் கொஞ்சம் வருத்தமா இருக்கு....

Sanjai Gandhi said...

ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு ஜீவன்.. நேதாஜி - இந்தியாவின் அதிர்ஷ்டம்..

நினைவுகளுடன் -நிகே- said...

நல்ல பதிவு
நன்றி

ஜோதிஜி said...

ஒழுங்கற்று இருந்த நான் ஒரு வடிவம் அடைந்தது இவரால்தான் என் மானசீக குருவும் இவர்தான் நான் மனதளவில் எப்போதும் திடமாக இருக்க இவரே காரணம்.

என்னை நானே உற்றுப்பார்ப்பது போல் இருக்கிறது உங்கள் எழுத்துக்களின் வாயிலாக.

சாமக்கோடங்கி said...

நல்லா இருக்குபா...

RAMYA said...

தாமதம்தான் ஆனாலும் இம்புட்டு தாமதம் வேணாம் இல்லையா ஜீவன்? என்ன செய்ய அளவில்லா ஆணிகள் அதுதான்..

உங்களின் தொடர் அழைப்பிற்கு மிக்க நன்றி. விரைவில் எழுதுகிறேன்....

RAMYA said...

அந்தமானின் அழகும், அதனுடன் உங்களின் பகிர்வின் அழகும் போட்டி போட்டு கொண்டு உங்கள் இளம்பிராயத்து சேட்டைகள் படம் பிடித்துக் காட்டின.

உண்மை சிறிதும் பிறழாமல் எழுதும் உங்களின் நேர் நோக்கும் ரசிக்க முடிந்தது!

எழுத்தாளர் பாலகுமாரன் அவரால் யார் மனதையும் அள்ளாமல் இருக்க முடியாது.

இசைஞானி இளையராஜா, நேதாஜி அருமையான தெரிவு!