கேப்டன் விஜய காந்த்..!
கேள்வி.- உங்க பதிவுலக வாழ்க்கை எப்படி இருக்கு..?
கேப்டன் – நான் மாசத்துக்கு 40 பதிவு எழுதுறேன். அதுக்கு மொத்தம் 840 கமெண்ட் வருது அதுல ஆண்வாசகர் கமெண்ட் 415 பெண் வாசகர் கமெண்ட் 425 ..! ஃபேஸ் புக் மூலமா வரும் பார்வையாளர்கள் 300 பேர்.கூகுள் மூலமா 225,மீதிபேர் எப்படி வராங்கன்னு எனக்கே தெரியல..
என்னை மொத்தம் 1244 ஃபாலோ பண்ணுறாங்க ம்ம்ம்.!
கேள்வி- அப்புறம்..?
கேப்டன்;- நிறுத்தாம சொல்லிகிட்டே போக நான் என்ன உண்மைத்தமிழனா.? அடுத்த கேள்விய கேளுங்க தம்பி..!
கேள்வி;- உங்க பதிவுகளுக்கு நேரா கமெண்ட் சொன்னா அடிக்கிறீங்களாமே..!
கேப்டன்-ம்ம் அடுத்த கேள்விய கேளு..
அவ்ளோதான் கேப்டன் பேட்டி முடிஞ்சது..நான் கிளம்புறேன்..!
யோவ் சோடா கம்மியா ஒரு கட்டிங் சொல்லுய்யா..!
*******************************************************************************
கமலஹாசன்..!
கேள்வி;- உங்களுக்கு ஹிட்ஸ்,கமெண்ஸ் எதும் அதிகம் வராட்டி கூட தொடர்ச்சியா நல்ல பல பதிவுகளை தொடர்ந்து கொடுக்குறீங்களே எப்படி முடியுது..?
கமல்;- பதிவுலக தாயின் ஆசிர்வதிக்கப்பட்ட பதிவு ஞானின்னு என்னை பலர் சொல்லலாம் ஆனால்.? மற்ற பதிவுகளுக்கு பின்னூட்ட்டமிடும் ஒரு சராசரி வாசகன் என்ற நிலையில் தான் நான் இருக்கின்றேன் என்று சொன்னால் அது மிகையாகாது.எனது பதிவு தாகமே என்னை தொடர்ந்து இயக்குகின்றது.
கேள்வி;- உங்களது தசவதாரம் பதிவு பற்றி சொல்லுங்களேன் அந்த பதிவுக்கு யார் தூண்டுகோள்..!
பதில்;- நிச்சயம் தசவதாரம் பதிவுக்கு ஒருவர் தூண்டுகோளாய் இருந்திருக்கின்றார்..! அவர்தான் நாமக்கல் சிபி.! ஒரு தனி மனிதராக இருந்து கொண்டு எத்தனை வலைத்தளங்கள் எவ்வளவு முகங்கள் அவருக்கு அவர்தான் எனது தசவதாரத்துக்கு மூல காரணம்.
கேள்வி;- உங்கள் அடுத்த பதிவு..?
பதில்;- காத்திருங்கள் இந்த வருடத்தில் எனது விஸ்வரூபம் உங்களுக்கு தெரிய வரும்.
***********************************************************************************
ரஜினி காந்த்..!
கேள்வி;- எப்படி வந்தீங்க இந்த பதிவுலகத்துக்கு..?
பதில்;-மத்தவங்க எல்லாம் பிளாக்ல இருந்து பஸ்சுக்கு போய் இருப்பாங்க ஆனா நான் ஆரம்பிச்ச இடமே பஸ் தான். பஸ்சுல என் செய்கைகளை பார்த்துட்டு என் நண்பர்கள் பிலாக்குக்கு போ நல்லா வருவேன்னு சொன்னாங்க வந்தேன் இப்போ நிறைய ஹிட்ஸ்,கமெண்ட்ஸ் ந்னு போய்ட்டு இருக்கு..!
கேள்வி;- எப்படி உங்களுக்கு இவ்ளோ கமெண்ட்ஸ் வருது பதிவு போட்டுட்டு மத்தவங்கள் கூப்பிட்டு,கூப்பிட்டு படிக்க சொல்வீங்களா..?
பதில்;- ஒரு பதிவ போட்டுட்டு எல்லாருக்கும் போன் பண்ணி எனக்கு கமெண்ட் போடுங்கன்னு கேக்க என்னை என்ன எழுத்தோசை தமிழரசி ன்னு நினச்சீங்களா எல்லாம் தானே சேந்த கூட்டம். அன்பால சேந்த கூட்டம்.
கேள்வி;-உங்க அடுத்த திட்டம்
பதில்;- நேத்து பஸ்ஸர்,இன்னிக்கு பதிவர் நாளைக்கு ஹா..ஹா.ஹா..அந்த கடவுளுக்கு தான் தெரியும்..!
கேள்வி;- கடவுள் எங்க இருக்கார்..?
பதில்;- கண்ணா கடவுள் எங்கேயும் இல்ல உனக்குள்ளதான் இருக்கார் உனக்குள்ள கடவுள தேடு..!
கேள்வி;- அப்படின்னா அடுத்து நீங்க என்ன ஆவீங்கன்னு உள்ள கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன்..!
ரஜினி;- பேட்டி முடிஞ்சது நீங்க கிளம்பலாம்..!
>
16 comments:
அருமையான பேட்டி. பாராட்டுக்கள்..
ஹா ஹா ஹா
அண்ணே!
I have some relief from my frustration after reading this ...
/ஒரு பதிவ போட்டுட்டு போன் எல்லாருக்கும் போன் பண்ணி எனக்கு கமெண்ட் போடுங்கன்னு கேக்க என்னை என்ன எழுத்தோசை தமிழரசி ன்னு நினச்சீங்களா /
ஹிஹி! ரசித்துச் சிரித்தேன்!
/ஒரு பதிவ போட்டுட்டு போன் எல்லாருக்கும் போன் பண்ணி எனக்கு கமெண்ட் போடுங்கன்னு கேக்க என்னை என்ன எழுத்தோசை தமிழரசி ன்னு நினச்சீங்களா /
கண்ணாடி உள்ளதை உள்ளபடியே காட்டுகிறது!
படிக்கத்தூண்டும் கலக்கலான பதிவு.
கண்ணாடி பிரதிபலிச்சிடுச்சி!
:-))))
ரசம் கொட்டாமல் ரசனை சொட்ட சொட்ட ப்ரதிபலிக்கும் கண்ணாடி மின்னுவதற்கு வாழ்த்துக்கள்!!!
தமிழ் நல்லாயிருங்கோ..உங்களுக்கு நாள் குறிச்சாச்சி...என்னா ஒரு வில்லத்தனம்..இப்பவே நம்ம ப்லாக் 3, 4 கமெண்டோட நொண்டுது இப்ப நீரு இதை வேறு போட்டு ஏன் சாமி ஏன்?
@ அருணையடி : என்னாது ரசித்துச் சிரிச்சீங்களா? அதானா பின்ன எழுதியது என்னைப்பத்தி மட்டும் இல்லை சாமி..உங்க மானத்தையும் மனுஷன் வாங்கி இருக்கார்..
@ அருணையடி
@ சத்ரியன்
கண்ணாடியாம் கண்ணாடி உடைக்கிறேன் இருங்க..என் கவிதை அருமை பெருமை அப்படி இப்படின்னு என்கிட்ட புகழ்ந்து சொல்லிகிட்டு வருவீங்கள்ள அப்ப சொல்றேன்..
அருமையாக ரசிக்கும் படியாக உள்ளது
தொடரலாமே
த.ம 1
அவங்க மூணு பேரையும் போட்டுத் தாக்க இவங்க மூணு பேரையும் யூஸ் பண்ணியாச்சா.....
மூணு பேரும் சேர்ந்து மூணு பேரையுமே காலி பண்ணீட்டாங்களே!!
என்ன ஒரு வில்லத்தனம்.
:))
a beautiful tamil birthday song
http://vidhyasagar.com/
good one :)
ரசனையான பேட்டி ....
Post a Comment