ஒவ்வொரு வாகனத்துக்கும் ஒவ்வொரு விதமான ஹாரன் வேண்டும் ..!!



சமீபத்தில் சென்னை புழல் பகுதியில் இருந்து அம்பத்தூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டுஇருந்தேன். அகலமான நெடுஞ்சாலை. பின் பக்கத்தில் இருந்து ஒரு வாகனம் வருவதற்கான ஹாரன் கேட்கவே சைடு மிரரில் பார்த்தேன் ஒரு லாரி வந்து கொண்டுஇருந்தது சாலையின் நடுப்பகுதியில் இருந்து ஓரத்திற்கு சென்றேன்.லாரி கடந்து செல்ல எடுத்துகொள்ளும் நேரம் அதன் வேகத்தை பொறுத்து தோராயமாக கணக்கிட முடியும். அதன் படி மீண்டும் சாலையின் நடுப்பகுதிக்கு வர எத்தணிக்கையில் லாரியானது நீண்டுகொண்டே சென்றது.அது சாதாரணலாரி அல்ல கண்டெயினர்களை ஏற்றி செல்லும் அதிக சக்கரங்கள் பொருந்திய நீளமான லாரி.ஆனால் சைடு மிர்ரரில் பார்க்கும்போது சாதாரண லாரி போலவே தோன்றியது.உடனே சுதாரித்து கொண்டேன் . அதேபோல நீளம் அதிகம் கொண்ட பேருந்தும் குழப்பம் ஏற்படுத்துகின்றது .


முன்பு ஒரு சமயம் எங்கள் ஊரில் இரவு நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்த போது ஹாரன் ஒலி கேட்கவே சைடு மிர்ரரில் பார்த்தால் முகப்பு விளக்கு அமைப்பு ஒரு காரை போன்று தோன்றியது . அது அகலமில்லாத சாலை . கார்தானே என்று சாலையை விட்டு இறங்காமல் சாலை ஓரத்தில் சென்றேன் . ஆனால் .! என்னை கடந்து சென்றது ஒரு பேருந்து ..! தடுமாறி போனேன் .அதாவது ஊரில் இருந்து சென்னை செல்லும் அரசு பேருந்து அது . உள்ளூர் பேருந்தாக இருந்தால் பேருந்து முழுவதும் வெளிச்சமாக இருக்கும் சைடு மிர்ரரில் தெரிந்து விடும் . ஆனால் விளக்குகள் அணைக்க பட்ட பேருந்தை சைடு மிர்ரரில் கண்டுகொள்ள முடியவில்லை .



வாகன ஒலி அமைப்பில் திருத்தம் வேண்டும் ..!

இருசக்கர வாகனம் ,முன்று சக்கர வாகனம் , நான்கு சக்கர வாகனம் ,ஆறு சக்கர வாகனம் , பதினாறு சக்கர வாகனம் அதைவிட பெரிய வாகனம் என ஒவ்வொரு வாகனத்துக்கும் ஒரே மாதிரியான ஹாரன் அமைக்க பட வேண்டும் .ஒரு வாகன ஹாரனை வைத்தே அது எந்த மாதிரியான வாகனம் என அறிந்து கொள்ளும் வகையில் ஒலி அமைக்க பட்டால் வாகன ஓட்டிகளுக்கு விபத்தினை தவிர்க்க ஏதுவாக இருக்கும். வித விதமான அலறல் சத்தம் கொண்ட ஒலி அமைப்புகளும் தடை செய்ய பட வேண்டும் .


.

>

7 comments:

Prabhu said...

அருமையான மிகவும் பயனுள்ள பதிவு ......

மு.சரவணக்குமார் said...

நல்ல யோசனை.

உங்கள் பதிவை சென்னை பெருநகர் போக்குவரத்து காவல்துறையின் முக நூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்களேயானால், எல்லாப் புகழும் உங்களுக்கே! :)

http://www.facebook.com/chennaitrafficpolice

மு.சரவணக்குமார் said...

நல்ல யோசனை.

உங்கள் பதிவை சென்னை பெருநகர் போக்குவரத்து காவல்துறையின் முக நூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்களேயானால், எல்லாப் புகழும் உங்களுக்கே! :)

http://www.facebook.com/chennaitrafficpolice

ஹேமா said...

அதுசரி....ஜீவன் இப்பல்லாம் நல்ல நல்ல யோசனையெல்லாம் வருது
உங்களுக்கு !

நிகழ்காலத்தில்... said...

இது சரியா வராது என் நினைக்கிறேன் அமுதன்.,

ஏர் ஹாரன் தடைசெய்யப்பட்ட ஒன்று., பயன்பாட்டில் இருக்கிறது என்பது வேறுவிசயம்.

பைக்கில் கார் ஹாரனை வைத்து அலறவிட்டுக்கொண்டு இருப்பவர்கள் நிறைய.,

இரவில் விளக்குகளே பொருத்தமானவை., அவை அமைந்துள்ள உயரமே வாகனத்தை அடையாளம் காட்டிவிடும்.,

இதைவிட முக்கியமாக ஒரு வாகனம் ஒளிவெள்ளத்துடன் நம்மை கடக்க முயற்சிக்கிறது எனில் நாம் ஓரமாக சென்றாலே போதும். அவங்க சரி செய்து கொண்டு செல்வார்கள். நீங்கள் சொல்வது நீங்கள் மீண்டும் சாலையில் வசதியாக பயணம் செய்வது குறித்தே என நினைக்கிறேன்.

அது நம் பொறுப்பே., இது சரியான யோசனை அல்ல..

நன்றி

இராஜராஜேஸ்வரி said...

சிந்திக்கவேண்டிய சிறப்பான பகிர்வுகள்..

Unknown said...

தொடர்பேருந்துக்கு 'T' என்று பேருந்தின் முகப்பிலும், பின் பக்கத்திலும் போடவேண்டும் என்ற விதி உள்ளது. பகல் நேரத்தில் இதைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம் ஆனால் இரவு நேரத்தில் இது தெரியாதே!