''சுவாரஸ்ய வலைப்பதிவு விருது''


வலையுலகை சுவாரஸ்ய படுத்த திரு ,செந்தழல் ரவி அவர்கள் ''சுவாரஸ்ய வலைப்பதிவு விருதினை'' அறிமுக படுத்தி உள்ளார்! அதோடு சிறந்த பதிவர்கள் ஆறு பேருக்கு அந்த விருதினை வழங்கியும் இருக்கிறார் அவருக்கு என் மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறேன்!

விருதினை பெற்றவர்கள் ஒவ்வொருவரும் ஆறு பேருக்கு விருதினை வழங்க வேண்டும்,மேலும்! இந்த விருதினை தங்கள் வலைதளத்தில் போட்டு வைக்கவேண்டும்!

திரு,செந்தழல் ரவி அவர்களிடம் விருதை பெற்ற அமிர்த வர்ஷினி அம்மா
அவர்கள் எனக்கு இந்த விருதினை வழங்கி இருக்கிறார்!அவருக்கு என்
நன்றியினையும் மகிழ்ச்சியினையும் தெரிவித்து கொள்கிறேன்.

மிக்க நன்றி அமித்து அம்மா!!

ரூல்ஸ் படி நான் இந்த விருதினை ஆறு பேருக்கு வழங்க வேண்டும்!!

அந்த ஆறுபேர்.......

அண்ணன் ராகவன் அவர்கள்

''என் வானம்'' அமுதா மேடம்

''Will To Live'' ரம்யா

''என் உயிரே...!'' - அபுஅஃப்ஸர்

''மன விலாசம்'' S.A. நவாஸுதீன்

''ரசனைக்காரி'' ராஜி



மேற்கண்ட பதிவர்களை பற்றி சொல்ல வேண்டியதில்லை அனைவருமே சுவாரஸ்யமாக எழுத கூடியவர்கள்தான்! மேலும் அவர்களை பற்றி விவரமாய் சொல்லும் நேரத்தில் வேறுயாராவது இந்த விருதினை அவர்களுக்கு வழங்கி விடுவார்கள் அதனால் அவசரமாக வலையேற்றுகிறேன்! நண்பர்கள் இவ்விருதினை ஏற்றுக்கொண்டு பகிர்ந்து கொள்ளும்படி கேட்டு கொள்கிறேன் .


>

20 comments:

Rajeswari said...

நன்றி ஜீவன் அண்ணா

S.A. நவாஸுதீன் said...

Surprise. ரொம்ப நன்றி தல.

Suresh Kumar said...

வாழ்த்துகள்!

நட்புடன் ஜமால் said...

பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்

SUFFIX said...

விருது பெற்ற நன்பர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!! இதில் அபூவும், நவாஸும் எனது நெருங்கிய நன்பர்கள், ரம்யா அக்காவின் படைப்புக்களை சமீபத்தில் படிக்கத்தொடங்கினேன். அண்ணன் ராகவன், அமுதா மேடம் & ராஜியின் வலைப்பூக்களை இனிமேல் தான் சென்று பார்க்கவேண்டும் (வலைப்பூ உலகத்திர்க்கு நான் ரொம்ப புதுசுங்க..!!)

அ.மு.செய்யது said...

வாழ்த்துக்கள் ஜீவன்.

நான் கொடுக்க நினைச்ச எல்லோரையும் ஒருத்தர் கூட விடாம கொடுத்ததால‌
உங்க பேச்சு கா.

வால்பையன் said...

எல்லோருமே பெரிய தலைகளா இருக்காங்களே!

அப்துல்மாலிக் said...

//வால்பையன் said...
என்னய்யா நடக்குது!
//

அதானே ஹெ ஹெ, ஒரே குழப்பமப்பா

அப்துல்மாலிக் said...

நன்றி ஜீவாண்ணா என்னையும் என்னுடைய பதிவுக்கும் அங்கீகாரம் கொடுத்து பாராட்டியதுக்கு

விருது பெற்ற சக பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்

அப்துல்மாலிக் said...

//ஷ‌ஃபிக்ஸ் said...
(வலைப்பூ உலகத்திர்க்கு நான் ரொம்ப புதுசுங்க..!!)
//


தெரியுது அடிக்க‌டி கூவ‌ வேண்டாம், உங்க‌ளுக்கும் விருது கிடைக்கும்

இராகவன் நைஜிரியா said...

நன்றி ஜீவன்.

6 பேருக்கு நான் கொடுப்பதற்குள், எல்லோரும் முடித்து விடுவார்கள். 3 பேர் என்ற கன்சஷன் உண்டா? கேட்டுச் சொல்லுங்களேன்...

Unknown said...

எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.....!! விருதை பெற்று பகிர்ந்ததுக்கு உங்குளுக்கும் வாழ்த்துக்கள்.....!!!!!

ஜீவா said...

வாழ்த்துக்கள் ஜீவன்

குடந்தை அன்புமணி said...

விருது பெற்ற தங்களுக்கும், தாங்கள்ன வழங்கப்பெற்றுக் கொண்டவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

ரவி said...

உங்களுக்கு வாழ்த்துக்கள்...!!!

உங்களிடம் இருந்து விருதை பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்......!!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

ரொம்ப வேக வேகமா வலையேத்திட்டீங்க ஜீவன்.

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

உங்களுக்கும்,விருது பெற்ற பதிவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

RAMYA said...

விருதுக்கு நன்றி ஜீவன்!

விருது வாங்கின அனைவருக்கும் எனதன்பு வாழ்த்துக்கள்!!

ரொம்ப வேகமா வலை ஏற்த்திட்டீங்க போல மூச்சு வாங்கி இருக்குமே:))

RAMYA said...

வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி மக்களே!!

அமுதா said...

விருது பெற்ற உங்களுக்கு வாழ்த்துக்கள்
விருது கொடுத்ததற்கு நன்றிகள்