நான் புகை பழக்கத்தை நிறுத்தியது ஏன் ? எப்படி ?

நான் புகை பிடிக்க ஆரம்பித்ததையும் பிறகு அந்த பழக்கத்தை விட்டதையும் பத்திசொல்லுறேன் ஆங்காங்கே கொஞ்சம் சுய புராணம் இருந்தா கொஞ்சம் பொறுத்துக்கங்க.

நான் முதன் முதலா சிகரெட் புடிக்க ஆரம்பிச்சது கோயம்புத்தூர்ல. நம்ம நகை தொழில கத்துகிட்டு அங்கேயே மூணு வருஷம் வேலை செய்ஞ்சுகிட்டு
இருந்தேன்.ஆரம்பத்துல ஒன்னு,ரெண்டுன்னு சிகரெட் புடிக்க ஆரம்பிச்சு அப்புறம் நல்லா முன்னேறி ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட் அளவுக்கு சிகரெட் புடிக்க ஆரம்பிச்சேன்.


அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு சொந்த ஊர் வந்து ஊர்ல வேலை.நான் வந்து ஒரு கிரிக்கெட் பிளேயர்.கிரிக்கெட்ல பாஸ்ட் பவுலர். நெறைய மேட்ச் ஆடி இருக்கேன்.இப்போ சிகரெட் புடிக்க ஆரம்பிச்ச பிறகு பழைய வேகமும்,துல்லியமும் இல்லாதது நல்லா தெரிஞ்சது.கண்டிப்பா அதுக்கு
சிகரெட் தான் காரணம்.அப்போ நெனைச்சுகிட்டேன்.

''மொதல்ல இந்த சிகரெட்ட நிறுத்தனும்''

ஒரு ரெண்டு நாள் சிகரெட் புடிக்கல அப்புறம் என்கூட விளையாடுற எல்லோருமே சிகரெட் புடிச்சாங்க சிகரெட் புடிக்காம இருக்க முடியல
பழைய படி ஆரம்பிச்சுட்டேன்.

ஊர்ல வேலை அதிகமில்ல, வறுமையும் பொருளாதார தேவையும் நம்மள சென்னைல கொண்டுவந்து போட்டுச்சி.

சென்னைல கொஞ்சநாள் சரியா தொழில் அமையாம இருந்தது.அப்புறம் கடவுள் கண்ண தொறக்கவே, தனியா கடை வைச்சு நல்லா பிக் அப் ஆச்சு!
சிகரெட் ஒரு பாக்கெட் ரெண்டு பாக்கெட் ஆச்சு.

இப்போ நல்லா பெரிய கடை புடிக்கிற அளவுக்கு முன்னேற்றம்.கடைல சிகரெட் புடிகிரதுக்காகவே ஒருஎடம் ஆஷ்ட்ரே எல்லாம் வைச்சு செட் பண்ணி இருந்தேன் அப்பப்போ ''தண்ணி'' வேற!

கொஞ்ச வருஷம் போச்சு வீட்டுல பொண்ணு பாக்க ஆரம்பிச்சாங்க, கல்யாணமும் ஆச்சு! தங்க மணி வந்து முதல்ல தங்க மணியாதான்
இருந்துச்சி அப்புறம்தான் ''சிங்க மணி'' ஆச்சு!

அதும் எவ்வளவோ சொல்லி பார்த்துச்சி நாம யாரு? சிங்கத்துக்கே டிமிக்கி கொடுப்போம்ல!



சரியா ஒரு வருசத்துல பொண்ணு பொறந்தது!

குட்டிபோட்டபூனையாட்டம்ஆஸ்பத்திரியசுத்திசுத்திவரேன்குட்டிபோட்ட பூனைஉண்மைதானே) எல்லாம்சொல்லுவாங்ககுழந்தைநம்மமுகத்த நல்லாபார்க்கரெண்டு,மஊனுநாள்ஆகும்அப்படின்னுஆனாஎன்பொண்ணு மறுநாளேஎன்முகத்தநல்லாபார்த்துநல்லாஒருசிரிப்புசிரிச்சதுபாருங்க! என் வாழ்நாள்லகண்டமிகசிறந்தகாட்சிஅதுதான்அப்படியேசொக்கிபோயிட்டேன்.

என் பொண்ணு சிரிச்ச அந்த சிரிப்புல என்னைய அப்படியே சுத்திகரிச்துபோல ஆச்சு! என்னோட தீவினையெல்லாம் அழிஞ்சு ஒரு சுத்தமான மனுசனா மாறுனதுபோல ஒரு உணர்வு!

ஆஸ்பிட்டல் வாசல்ல நின்னு ஒரு தம் அடிச்சுகிட்டே நினைச்சு பார்க்குறேன். ஒரு நிறைவு,மகிழ்ச்சி,சந்தோசம் உற்சாகம் வேற என்ன நல்ல விஷயங்கள் இருக்கோ அது எல்லாம் ஒன்னா சேர்ந்து எனக்கு கிடைச்ச மாதிரி இருக்கு.

சரி,இப்போ குழந்தை வளர்ந்து கிட்டு வருது. நான் சிகரெட் புடிக்கிறதும் அதிகமாகுது.

ஒரு வருஷம் போகுது, குழந்தைக்கு முடி எறக்கணும் எங்க ஊருலதான் முடி எறக்கணும்.எங்க ஊருக்கு பக்கத்துல அத்திவெட்டி அப்படின்னு ஒரு ஊரு இருக்கு அங்க ''பெரிய சாமி''கோயில் இருக்கு அங்கதான் நாங்க
பரம்பரையா முடி ஏறக்குறது எனக்கும் அங்கதான்
முடி எறக்குனது.

முடி எறக்கிட்டு எங்க ஊருல இருந்து சென்னைக்கு கிளம்புறோம் அப்போ சில பேரு ஒரே பரபரப்பா பேசிகிட்டு இருக்காங்க.

என்னன்னா? யாரோ செத்து போய்ட்டாங்களாம் பக்கத்து ஊருல சத்துணவு அமைப்பாளரா வேல செய்தவராம்.

ரெண்டு பேரு பேசிக்கிட்டு போறாங்க!


பாருப்பா அவனுக்கு முப்பதிரெண்டு வயசுதான் ஆகுது
திடீர்னு போய்ட்டான் ! ''ஹார்ட் அட்டாக்காம்''ஓவரா

தண்ணி அடிப்பானாம் சிகரெட்டா ஊதி தள்ளுவானாம்
கல்யாணமாகி ரெண்டு வருசம்தான் ஆகுது,எட்டு மாசத்துல
புள்ள ஒன்னு இருக்கு இப்படி அநியாயமா உட்டுட்டு
போய்ட்டானே பாவிப்பய !


சென்னைக்கு வந்துட்டோம்!
ரெண்டு நாள் போயிருக்கும் ஒரு கனவு

அடுத்த வரிகள எழுதும் போது ஒரு வலியோடுதான்
எழுதுறேன்!

அந்த கனவு ......

நல்ல வெயில் அடிக்குது அந்த வெயில்ல
என் மனைவி வேர்க்க விருவிருக்க நடந்து
போகுது.கிட்ட போய் பார்க்குறேன் கழுத்துல
தாலி இல்ல போட்டு பூ ஏதும் இல்லாம விதவை
கோலத்துல என் அன்பு மனைவி!இடுப்புல
என் செல்வ மகள் பசித்த முகம் கன்னமெல்லாம்
வத்திபோய் ஏக்கமான பார்வையோடு....


ஐயோ! திடுக்குன்னு முழிச்சு பார்க்குறேன் ரெண்டு பேரும்
நல்லா தூங்குறாங்க.

மனசு முழுக்க பயம்! பயம்! பயம்!


தூக்கமே வரல எப்போ தூங்கினேனோ தெரியல!

காலைல யார் கிட்டயும் ஒன்னும் சொல்லல!

''சிகரெட் புடிக்கிறத நிறுத்தனும்''

(ஒரு விஷயம் சிகரெட் புடிக்கிறத நிறுத்துரதால நான் நூறு வருஷம் வாழ்ந்து விடுவேன்னு சொல்லல! சாவு எப்படி வேணும்னாலும் வரலாம் ஆனா, சிகரெட் புடிக்கிரதால நாமே சாவ நோக்கி போறதா நினைச்சேன்
அதோட சிகரெட் புடிக்கிரதால திடீர் மரணம் ஏற்படலாம்
அப்படின்னு பயந்தேன் )

கடைல வந்து உக்காந்து யோசிக்கிறேன் கிட்ட தட்ட பத்து வருசமா சிகரெட் புடிக்கிறேன் எப்படி நிறுத்த!

என்கிட்ட எனக்கு புடிச்ச விஷயம் ஒன்னு இருக்கு!

நான் வந்து பால குமாரனோட தீவிர பக்தன் அப்படின்னு சொல்லலாம் .நெறைய விசயங்கள அவர் சொன்ன படி கடை பிடிக்கிறேன் .

அதுல ஒன்னு ''உன்னை நீயே விலகி நின்று வேடிக்கை பார்''

எனக்கு கடைல அதிக வேலை இருந்தா இத எப்படி செய்றேன் பார் அப்படின்னு எனக்குள்ளேயே ஒரு சவால் விட்டுக்குவேன் என் உள்ளேயே ஒருவன் அத வேடிக்கை பார்க்குரதுபோல நினைச்சுக்குவேன்.

அந்த வேலைல நான் ஜெயிச்சுட்டா உள்ள இருக்குற
அவன் வந்து பாராட்டிட்டு போவான்!

உள்ள இருக்குற அந்த அவனுக்கு நான் வைச்ச பேருதான்

''ஜீவன்''

இப்போ அவன் உதவி தேவை படுது சிகரெட் புடிக்கணும் அப்படின்னு என்னத்த தூண்டுற ''சைத்தான்'' எனக்குள்ள புகுந்து இருக்குது. அந்த சைத்தான தோக்கடிக்கனும் .

நான் ஜெயிக்கிறேனா இல்லையா அப்படிங்கிறத எனக்குள்ள அவன் கவனமா கவனிக்கிறான்.



''சிகரெட் புடிக்கணும் அப்படிங்கிற எண்ணத்த தூண்டுற
அந்த சைத்தான ஒவ்வொரு வினாடியும் சவாலுடன்
சந்திப்பது அப்படின்னு முடிவு பண்ணிட்டேன்

இதுக்கு எனக்குள்ள இருக்குற ''அவன்தான்''
நடுவர்.


முதல் நாள் ஒன்னும் முடியல ரொம்ப கஷ்ட்டப்பட்டு இருந்துட்டேன்.ரெண்டு நாள் மூணு நாள் போச்சு சிகரெட் புடிக்கல!சமயத்துல அந்த சைத்தான் பெரும் பலத்தோட வருவது போல இருக்கும் என் மனைவி குழந்தைய நினைச்சுக்குவேன், அந்த சைத்தான் இருந்த இடம் தெரியாம போய்டுவான்.உள்ள இருக்குற அவன் கைதட்டி பாராட்டுறான்.

இப்போ எனக்கு இருக்குற அடுத்த பிரச்சனை என் நண்பர்கள்! அவங்க எல்லோரும் சிகரெட் புடிக்கிறவங்க . நான் நினைக்கிறேன் அவர்களை
பார்ப்பதை தவிர்த்து விடலாம்னு,ஆனா உள்ள இருக்குற அவன் சொல்லுறான் சிகரெட் புடிக்கிறவங்க கூடவே இருக்கணும் ஆனா சிகரெட் புடிக்காம வரணும் அப்படின்னு!

நண்பர்கள் இருக்குற எடத்துக்கு போறேன் வழக்கம் போல சிகரெட் எடுத்து கொடுக்குறாங்க வேணாம் விட்டுட்டேன் அப்படின்னு சொல்லுறேன்!கிண்டலா ஒரு பார்வை நம்ம செட்டுலையே அதிகம் தம் அடிக்கிறது நீதான் உன்னால எல்லாம் விட முடியாது மிஞ்சி மிஞ்சி போனா ஒரு பத்துநாள் அடிக்காம இருப்பே அப்புறம் முடியாது எத்தன பேர பார்த்து இருப்போம்.

ச்சே! நம்மள பத்தி எவ்ளோ சீப்பா எடை போட்டு இருக்காங்க! அதுகூட நமக்கு உதவியாத்தான் இருக்கு.


ஆச்சு!வாரங்கள்போச்சு! மாதங்கள்போச்சு!

அந்த சைத்தான சாகடிச்சு சமாதி வைச்சு நாலு வருஷம் ஆச்சு என் வாழ்க்கைல நான் செய்ஞ்ச சாதனையா நினைக்கிறேன். இனிமே இந்த ஜென்மத்துல நான் சிகரெட் புடிக்க போறது இல்ல அது நிச்சயம்!


(குறிப்பு :என்னைவிட அதிகமா சிகரெட் புடிச்சவங்கள நான் பார்த்து இல்ல என்னாலேயே சிகரெட்ட விட முடியும்னா விடணும்னு நினைக்கிற எல்லோராலையும் கண்டிப்பா முடியும் )

>

27 comments:

அன்புடன் நான் said...

வாழ்த்துக்கள் முதலில்.!

இந்த கட்டுரை மிக அழகா வந்திருக்கு... சுருசுருப்ப படிக்க முடியுது முடிவை தெரிஞ்சிக்க ஆவல் பிறக்கிறது...
முயன்றால் எல்லோராலும் முடியும் என்பது என் (நம்) நம்பிக்கை.... நானும் மிக போராடிதான் நிறுத்தினேன்... ஆனா இப்போ மகிழ்வோடு இருக்கிறேன்.

இந்த கட்டுரை யாரையவது திருத்தும் என நம்புகிறேன்.

பகிர்வுக்கு மிக்க நன்றிங்க ஜீவன்.

S.A. நவாஸுதீன் said...

உங்க தன்னம்பிக்கை அசர வைக்குது தல.

முன்னாடியே சொன்னதுதான், இன்னும் முயற்சி பண்ணிகிட்டுதான் இருக்கேன். அடுத்த மாசம் ஊருக்கு வந்துதான் இதுக்கு ஒரு முடிவு கட்டனும்.

கல்யாணி சுரேஷ் said...

கண்டிப்பா இந்த பதிவை என்னோட கணவருக்கு காட்டணும். மிக தேவையான ஒரு விஷயத்தை பற்றி சொன்னதுக்கு நன்றி.

உமா said...

//இப்போ அவன் உதவி தேவை படுது சிகரெட் புடிக்கணும் அப்படின்னு என்னத்த தூண்டுற ''சைத்தான்'' எனக்குள்ள புகுந்து இருக்குது. அந்த சைத்தான தோக்கடிக்கனும்//

என் வருங்காலத்துக்கும் (வரப்போற) தேவைப்படும்னு நினைக்கிறேன். தன்னம்பிக்கை பதிவு.....

நட்புடன் ஜமால் said...

அண்ணே அசத்தல்

இந்த பதிவு வழியாகத்தான் ஆரம்ப காலங்களில் பதிவுலகத்திற்கே வந்தேன்

உங்களின் பாசமான பின்னூட்ட தொடர்புகள் கிடைத்தது.

வெகு விரைவிலையே இன்னுமொரு பதிவு எதிர் பார்க்கிறேன் உங்களிடம் தலைப்பில் ஒரு வார்த்தை மாற்றத்தோடு ...

மாதேவி said...

வாழ்க்கையை தொலைக்காமல் தப்பிய அனைவர்க்கும் பாராட்டுக்கள்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//உங்க தன்னம்பிக்கை அசர வைக்குது தல. //

Repeattu.:-)))))))))

Anonymous said...

பயனுள்ள பதிவே..பலர் பயனடைய உதவும் பதிவும் கூட..உண்மை நிகழ்வென்பதால் காட்சி அப்படியே மனக்கண்ணில்...கொஞ்சம் வேதனையாகவும் இருந்தது அந்த கனவு ஐய்யோ உடனே அடுத்த வரிக்கு தாவி விட்டது பார்வை..(ஒரு விஷயம் சிகரெட் புடிக்கிறத நிறுத்துரதால நான் நூறு வருஷம் வாழ்ந்து விடுவேன்னு சொல்லல! சாவு எப்படி வேணும்னாலும் வரலாம் ஆனா, சிகரெட் புடிக்கிரதால நாமே சாவ நோக்கி போறதா நினைச்சேன்//

இதாங்க தமிழ் உண்மை... கருத்துன்னு வந்தால் இதை பற்றி சொல்லிட்டே போகலாம் ஆனால் போதுமுன்னு நினைக்கிறேன்...புகை பிடிக்கும் பழக்கமுள்ள நண்பர்கள் படித்தால் மொத்தமா இல்லைன்னாலும் கொஞ்ச கொஞ்சமாவது நிறுத்திடுங்க..


//

அப்துல்மாலிக் said...

தல‌ நிகிழ்ச்சியான இடுக்கை, அப்பட்டமா எழுதி இந்த பதிவின் மூலம் குறைந்த பட்சம் ஒருவராவது திருந்திவரானால் அதுவே உங்களுக்கு பெரிய வெற்றி..

பத்தவெச்சிட்டீங்க.. நிச்சயம் பெரிய தனலை உருவாக்கும்....

வாழ்த்துக்கள்.. உங்க தங்கமணி சந்தோஷப்படுவாங்க அதுவே ஒரு வெற்றி

மங்கை said...

இந்த வைராக்கியம் இருக்கனும்..

Anonymous said...

நல்ல பயனுள்ள கட்டுரை. உங்க தன்னம்பிக்கை அசர வைக்குது தல.

SUFFIX said...

நிறுத்திட்டிங்களா, மிக்க மகிழ்ச்சி. கல்லூரி நாட்களில் இரண்டு மூன்று சிகரெட் தொட்டது, நல்ல வேளை பாழாய்ப்போன பழக்கம் தொடரவில்லை.

SUFFIX said...

//S.A. நவாஸுதீன் said...
உங்க தன்னம்பிக்கை அசர வைக்குது தல.

முன்னாடியே சொன்னதுதான், இன்னும் முயற்சி பண்ணிகிட்டுதான் இருக்கேன். அடுத்த மாசம் ஊருக்கு வந்துதான் இதுக்கு ஒரு முடிவு கட்டனும்.//

அது ஏன் அவ்வளவு தாமதிக்க வேண்டும், ஊருக்குப் போகு முன் இந்த சைத்தானை இங்கேயே, இப்பவே விட்டு விடலாமே நவாஸ், ஒரு சிறிய துண்டு சிகரெட் தானே? இது இல்லாமல் வாழவா முடியாது. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.

வடுவூர் குமார் said...

Well done but....how to get the ppl corrected those who have started by seeing you!!
Big project ahead of you.Pl do something for them too.

K.MURALI said...

இது ஒரு மீள் பதிவா ?
எங்கேயோ படித்தது போல் உள்ளதே !!
முரளி

பின்னோக்கி said...

மீள் பதிவுதான்னாலும்.. இன்னொருமுறை படிக்கலாம். வாழ்த்துக்கள். அப்படியே வாட்டரையும் நிறுத்திடுங்க. இன்னும் நல்லது :).

நீங்க சொன்ன “விலகி நின்று பார்” எல்லா விஷயத்துக்கும் பொருந்தும். நன்றி. என் கெட்ட பழக்கங்களை விட இது உதவும்னு நினைக்கிறேன்.

தமிழிச்சி said...

உங்களைக் கலக்கிய அந்தக் கனவு வாழ்க. நிறையக் கனவு காணுங்கள் நண்பரே!

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

ஜீவா ஐயா! உங்க கட்டுரையப்பாத்து நாலு பேராவது புகை பிடிக்கிறத விட்டுட்டாங்கன்னு வைங்க அது உங்க வெற்றி மட்டுமில்ல.உங்க மனைவி,குழந்தையின் வெற்றி.அருமை உங்க பதிவு.உங்க பொண்ணுக்கு என் நல்வாழ்த்துக்கள்.உங்க மனைவி தீர்க்க சுமங்கலியா இருப்பாங்க.அதற்கு என்னோட பிரார்த்தனைகள்.அந்தமான் தமிழோசை 'இப்போதைய நான்' குறித்துச்சொல்லும்.வலது பக்க லிங்கில் காந்திய கிராமங்களைச்சொடுக்கினால் என் கடந்தகாலம்.அதோடு உங்க தளம் அமைப்பு பிரமாதம். இப்படி வேணும்னு பாத்துட்டு கிடைக்காம நானே கொஞ்சம் முயற்சி பண்ணி வச்சிருக்கேன்.
கருத்துரைக்கு மிக்க நன்றி!. அந்தமான்ல இருந்ததால நீங்க என் சகோதரனாயிட்டீங்க.நன்றிங்க.
அன்புடன்,
க.நா.சாந்தி லக்ஷ்மன்

சத்ரியன் said...

//தங்க மணி வந்து முதல்ல தங்க மணியாதான்
இருந்துச்சி அப்புறம்தான் ''சிங்க மணி'' ஆச்சு!//

ஜீவன்,

நகைச்சுவையும் நல்லாதான் இருக்கு.(மேலே உள்ள வரியில)

நல்ல பகிர்வு.

ஆனாலும் ’ஜீவன்’ நீங்க இல்லியா?

thiyaa said...

ஆகா அருமை

hayyram said...

gud

regards,
ram

www.hayyram.blogspot.com

Unknown said...

first congrats. i forward 2 my boy friend. thanks 4 ur post

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

எப்படியோ அந்த சைத்தானிடமிருந்து விட்டு விடுதலையாகி விட்டீர்கள். நன்றி தமிழ் அமுதன்.

selvishankar said...

தமிழ் அமுதன்...கிரேட் தம்பி...

//ஒரு விஷயம் சிகரெட் புடிக்கிறத நிறுத்துரதால நான் நூறு வருஷம் வாழ்ந்து விடுவேன்னு சொல்லல! சாவு எப்படி வேணும்னாலும் வரலாம் ஆனா, சிகரெட் புடிக்கிரதால நாமே சாவ நோக்கி போறதா நினைச்சேன்
அதோட சிகரெட் புடிக்கிரதால திடீர் மரணம் ஏற்படலாம்
அப்படின்னு பயந்தேன் )//

//முதல் நாள் ஒன்னும் முடியல ரொம்ப கஷ்ட்டப்பட்டு இருந்துட்டேன்.ரெண்டு நாள் மூணு நாள் போச்சு சிகரெட் புடிக்கல!சமயத்துல அந்த சைத்தான் பெரும் பலத்தோட வருவது போல இருக்கும் என் மனைவி குழந்தைய நினைச்சுக்குவேன், அந்த சைத்தான் இருந்த இடம் தெரியாம போய்டுவான்.//

//அந்த சைத்தான சாகடிச்சு சமாதி வைச்சு நாலு வருஷம் ஆச்சு என் வாழ்க்கைல நான் செய்ஞ்ச சாதனையா நினைக்கிறேன். இனிமே இந்த ஜென்மத்துல நான் சிகரெட் புடிக்க போறது இல்ல அது நிச்சயம்!//

அவ்வளவுதான்...அவ்வளவேதான்...இது அவங்க அவங்களுக்காத்தான் வரணும்...வேணும்னா..இம்மாதிரி பதிவுகள் ஒரு தூண்டுகோலா வேணா இருக்கலாம்..உங்களுக்கு வந்த கனவு மாதிரி...

selvishankar said...

தமிழ் அமுதன்...கிரேட் தம்பி...

//ஒரு விஷயம் சிகரெட் புடிக்கிறத நிறுத்துரதால நான் நூறு வருஷம் வாழ்ந்து விடுவேன்னு சொல்லல! சாவு எப்படி வேணும்னாலும் வரலாம் ஆனா, சிகரெட் புடிக்கிரதால நாமே சாவ நோக்கி போறதா நினைச்சேன்
அதோட சிகரெட் புடிக்கிரதால திடீர் மரணம் ஏற்படலாம்
அப்படின்னு பயந்தேன் )//

//முதல் நாள் ஒன்னும் முடியல ரொம்ப கஷ்ட்டப்பட்டு இருந்துட்டேன்.ரெண்டு நாள் மூணு நாள் போச்சு சிகரெட் புடிக்கல!சமயத்துல அந்த சைத்தான் பெரும் பலத்தோட வருவது போல இருக்கும் என் மனைவி குழந்தைய நினைச்சுக்குவேன், அந்த சைத்தான் இருந்த இடம் தெரியாம போய்டுவான்.//

//அந்த சைத்தான சாகடிச்சு சமாதி வைச்சு நாலு வருஷம் ஆச்சு என் வாழ்க்கைல நான் செய்ஞ்ச சாதனையா நினைக்கிறேன். இனிமே இந்த ஜென்மத்துல நான் சிகரெட் புடிக்க போறது இல்ல அது நிச்சயம்!//

அவ்வளவுதான்...அவ்வளவேதான்...இது அவங்க அவங்களுக்காத்தான் வரணும்...வேணும்னா..இம்மாதிரி பதிவுகள் ஒரு தூண்டுகோலா வேணா இருக்கலாம்..உங்களுக்கு வந்த கனவு மாதிரி...

cutebabu said...

அருமையான பதிவு தம்பிக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும்....

cutebabu said...

அருமையான பதிவு தம்பிக்கு நன்றியும் ,வாழ்த்துக்களும் வணக்கங்களும்...